சந்திரனை சந்திக்குமா சந்தியரயான்-3...? திட்டத்தை தொடங்கிய இஸ்ரோ!

சந்திரனில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மென்மையாக இறங்குவதற்கான, இந்தியாவின் முதல் முயற்சி 2019 செப்டம்பர் 7 அன்று தோல்வியடைந்தது.

சந்திரனை சந்திக்குமா சந்தியரயான்-3...? திட்டத்தை தொடங்கிய இஸ்ரோ!

விண்வெளி நிறுவனம், சந்திரயான்-2 திட்டத்தில் 960 கோடி ரூபாய் செலவு செய்தது

ஹைலைட்ஸ்
  • இந்தியா தனது மூன்றாவது சந்திர திட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளது
  • இது 2021-ன் தொடக்கத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
  • சந்திரனில் இறங்குவதற்கான முதல் முயற்சி கடந்த ஆண்டு தோல்வியடைந்தது
விளம்பரம்

இந்தியா தனது மூன்றாவது சந்திர திட்டமான சந்திரயான்-3-ல் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ஒரு உயர் விண்வெளி அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார். இது, சந்திரனில் மென்மையாக இறங்குவதற்கான இரண்டாவது முயற்சியாகும். ஜனவரி 1-ம் தேதி, பெங்களூரில் ஊடகங்களுக்கு சிவன் கூறியதாவது, 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2021-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு விண்கலம் மற்றும் ஒரு ரோவரை மென்மையாக தரையிறக்கும் லட்சிய பணிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது, என்றார்.

"சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே ஆளில்லா விண்கலத்தை தரையிறக்கும் எங்கள் மூன்றாவது சந்திர திட்டத்தில், நாங்கள் பணியாற்றத் தொடங்கினோம். 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லேண்டர் மற்றும் ரோவரை ஏவுவதற்கான திட்டப்பணி, வேகமடைந்துள்ளது" என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் ஒரு விண்வெளி நிகழ்வில் கூறினார்.

சந்திரனில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மென்மையான-தரையிறங்க இந்தியாவின் முதல் முயற்சி, செப்டம்பர் 7, 2019 அன்று தோல்வியடைந்தது. (failed on September 7, 2019) சந்திரயான்-2 விக்ரம் விண்கலம் தரையிறங்கும் போது, வேகத்தடுமாற்றத்தால் விபத்துக்குள்ளானது.

"சந்திரயான்-3-க்கு ஒரு லேண்டர் மற்றும் ரோவர் மட்டுமே இருக்கும் என்பதால், சந்திர விண்கலத்திற்கு ரூ. 610 கோடி செலவாகும், இதில் ஏவுதள ராக்கெட்டுக்கு ரூ. 360 கோடி அடங்கும்" என்றும், ஒரு சிம்போசியத்தின் ஓரங்களில் "மனித விண்வெளிப் பயணம் மற்றும் ஆய்வு - தற்போதய சவால்கள் மற்றும் எதிர்கால போக்குகள்" என்று சிவன் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் சந்திர மேற்பரப்பில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் சந்திரனைச் சுற்றி ஒரு நீள்வட்ட இயக்கத்தின் போது, விண்வெளி நிறுவனம், சந்திரயான்-2 திட்டத்தில் 960 கோடி ரூபாய் செலவு செய்தது.  

இந்தியாவின் முதல் மனிதர் திட்டம் 'ககன்யான்' குறித்து சிவன் கூறுகையில், நான்கு இந்திய விமானப்படை (IAF) விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் குழுவினராக விரைவில் ரஷ்யாவுக்குச் சென்று பயிற்சி பெறுவார்கள்.

"ககன்யான் நாட்டிற்கான ஒரு வரலாற்றுப் திட்டமாக இருக்கும், ஏனெனில் மூன்று இந்திய விண்வெளி வீரர்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட விண்வெளி விண்கலத்தில் பறப்பார்கள்" என்று ராக்கெட் நிபுணர் சிவன் வலியுறுத்தினார்.

ஏப்ரல் 2, 1984 அன்று ரஷ்ய சோயுஸ் -11 (Russian Soyuz-11) பயணத்தில் விண்வெளியில் பறந்த முதல் இந்தியர், முன்னாள் ஐ.ஏ.எஃப் விங் கமாண்டர் ராகேஷ் சர்மா (IAF Wing Commander Rakesh Sharma) ஆவார்.

ரஷ்யாவிலிருந்து திரும்பும்போது, ​​இந்த தொழில்நுட்ப நகரத்தில் உள்ள விண்வெளி ஏஜென்சியின் மனித விண்வெளி விமான மையத்தில் IAF குவார்டெட் தொகுதி-குறிப்பிட்ட பயிற்சிக்கு உட்படும், அங்கு விண்வெளி பயணங்களுக்கான முக்கியமான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன.

"நான்கு விமானிகளுக்கும் எங்கள் குழு மற்றும் சேவை தொகுதிகளில் பயிற்சி அளிக்கப்படும். இறுதியாக, அவர்களில் மூன்று பேர் பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 7 நாள் விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்" என்று சிவன் கூறினார்.

மனிதனால் மேற்கொள்ளப்பட்ட திட்டம், ஒரு மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஒரு சாதனையோ அல்லது பயிற்சியோ அல்ல என்று, இஸ்ரோ தலைவர் கூறினார்: "ககன்யான் ஒரு மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது மட்டுமல்ல. ஆனால், மற்ற விண்வெளி பயண நாடுகளுடன் தேசிய மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகும்.

"விஞ்ஞான கண்டுபிடிப்புகள், பொருளாதார மேம்பாடு, கல்வி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஊக்கமளிக்கும் இளைஞர்கள் ஆகியவை எல்லா நாடுகளுக்கும் பொதுவான குறிக்கோள்களாகும். மனித விண்வெளி விமானத் திட்டம் அத்தகைய நோக்கங்களை பூர்த்தி செய்ய ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது."

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  2. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
  3. கேலக்ஸி S25 அல்ட்ரா சலுகை: ₹75,000 வரை தள்ளுபடி! Samsung ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத ஆஃபர்
  4. அறிமுகமாகிறது Vivo X200 FE: Zeiss கேமராவுடன் அசத்தல் டிசைன்! இந்த கலர்ல வாங்க ஆசையா இருக்கா
  5. அறிமுகமாகிறது Vivo T4 Lite 5G: "மேட் இன் இந்தியா" சிறப்பு - இந்த மாதம் வெளியீடு உறுதி! மிஸ் பண்ணாதீங்க!
  6. அவசரம்! WhatsApp வணிகங்களுக்குப் புதிய அம்சங்கள்: பணமாக்கும் வழி, பிரமோஷன் வாய்ப்புகள் - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமாகிறது Vivo Y400 Pro 5G: AI அம்சங்கள், 5500mAh பேட்டரி - விலை என்ன? முழு விபரம் வெளியானது
  8. அறிமுகமானது Realme Narzo 80 Lite 5G: பட்ஜெட் 5G-யின் ராஜா! ஜூலை 23 முதல் விற்பனை!
  9. அறிமுகமாகிறது Oppo K13x 5G: கீழே விழுந்தாலும் உடையாதா? முழு பாதுகாப்பு அம்சங்கள் வெளியானது!
  10. Nothing Phone 3 இந்தியாவில் உருவாகிறது - மாடல் நம்பர் A024 உடன் கிளிஃப் இன்டர்பேஸ் மாற்றம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »