Aurora Season இந்த மாதம் தொடங்கி இருக்கிறது. இந்த காலகட்டத்தில் புவி காந்த புயல்கள் வழக்கத்தை விட வலுவாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்
September's equinox can mean stronger, more intense Northern Lights
Aurora எனப்படும் துருவ ஒளி என்பது வட, தென் துருவங்களை அண்மிய பகுதிகளில் தோன்றும் அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களில் வானில் தோன்றுகின்றது. இந்த ஒளித் தோற்றப்பாடு உலகம் தோன்றிய காலம் தொட்டே காணப்படுவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த ஒளித்தோற்றமானது பொதுவாக ஆர்க்டிக், அண்டார்க்டிக்கா பகுதிகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. வட துருவத்தில் தோன்றும்போது இது வடதுருவ ஒளி எனவும், தென் துருவத்தில் தோன்றும்போது இது தென் துருவ ஒளி எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த ஒளித்தோற்றத்துக்குரிய அறிவியற் பெயர்கள் aurora borealis எனப்படுகிறது.
சூரியனிலிருந்து, சூரிய கதிர்கள் அதி கூடிய எண்ணிக்கையில் பிரபஞ்ச வெளியில் வீசப்படும்போது, அவை வேகமாக நகரும். இவை பூமியின் காந்தப்புலத்தினுள் வரும்போது, இரு துருவப் பகுதிகளையும் நோக்கி இழுக்கப்படுகின்றன. அந்தப் பகுதியிலிருக்கும் வளிமண்டலத்தில் இருக்கும் சில வாயுக்களுடன் இந்தச் சூரியத் துணிக்கைகள் மோதும்போது உருவாகும் ஆற்றலே, இத்தகைய ஒளிச் சிதறல்களாய் உருவாகி, வானத்தில் அழகான ஒளிக்கற்றைகள் அசைவது போன்ற தோற்றத்தைத் தருவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
வடதுருவ ஒளியானது செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும், மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் வானில் தோன்றுகிறது. Aurora Season 2024 இந்த மாதம் தொடங்கி இருக்கிறது. இந்த காலகட்டத்தில் புவி காந்த புயல்கள் வழக்கத்தை விட வலுவாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். Russell-McPherron விளைவு பற்றி முதன்முதலில் 1973 கட்டுரையில் விவரிக்கப்பட்டது. இது நடக்கும் போது வானத்தில் ஒரு கண்கவர் காட்சியை உருவாக்குகிறது. வடதுருவ ஒளித் தோற்றமானது பூமியின் எல்லா இடங்களிலும் தோன்றக் கூடியதாக இருப்பினும், காந்தப்புல சக்தி அதிகமாகவும், நீண்ட இரவைக் கொண்டுமிருக்கும் பூமியின் துருவப் பகுதிகளிலேயே காட்சியாகத் தெரியும் சாத்தியம் அதிகம் உள்ளது.
சூரியனின் காந்த செயல்பாடு, தற்போது 11 வருட சூரிய சுழற்சியில் அதன் உச்சத்தை நெருங்குகிறது, இது புவி காந்த புயல்களின் சாத்தியக்கூறுக்கு பங்களிக்கிறது.
சூரிய செயல்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், செப்டம்பரில் இதேபோன்ற நிகழ்வு நிகழலாம், இந்த அதிர்ச்சியூட்டும் இயற்கை நிகழ்வுகளைக் காண இன்னும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்த நேரத்தில், வடக்கு அரைக்கோளம் 12 மணிநேர பகல் மற்றும் 12 மணிநேர இரவுகளை அனுபவிக்கிறது
முதன் முதலில் பெஞ்சமின் பிராங்கிலின் என்பவர் இந்த “வடதுருவ ஒளி" பற்றிய கவனத்தை உலகிற்குக் கொண்டு வந்தார். அவர் கொடுத்த தத்துவ விளக்கத்தின்படி, செறிவான மின் ஆற்றலின் காரணமாக ஒளிக்கற்றைகளில் ஏற்படும் இடப்பெயர்வு துருவப் பகுதிகளில் காணப்படும் ஈரலிப்புத்தன்மை, மற்றும் உறைபனியால் தீவிரமாக்கப்பட்டு இப்படியான ஒளித்தோற்றம் ஏற்படுகின்றது.
சூரிய ஒளிவட்டத்திலிருந்து மிக அதிகளவில் வெளியேறும், பிளாஸ்மா மற்றும் காந்தப்புலம் போன்றவற்றினாலேயே துருவ ஒளி தோன்றுவதாக வரலாற்றில் நம்பப்பட்டு வந்தது. துருவ ஒளிக்கும், மின்சாரத்திற்கும் இடையில் தொடர்பு இருப்பதும் பின்னாளில் அறியப்பட்டது. ஒளி தோற்றத்தின் நிறங்களையும், அளவையும் தீர்மானிப்பதில் சூரியனிலிருந்து வரும் சூரியக் காற்றின் செயற்பாட்டு அளவும் பங்கெடுப்பதாக நம்பப்படுகின்றது. இதை இயற்கையின் வாணவேடிக்கை அல்லது ஒளிக்கோலம் என்று சொல்லலாம். இந்த அழகை நேரில் பார்ப்பவர்கள், இந்த அழகை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் என்று சொல்கிறார்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Sarvam Maya Set for OTT Release on JioHotstar: All You Need to Know About Nivin Pauly’s Horror Comedy
Europa’s Hidden Ocean Could Be ‘Fed’ by Sinking Salted Ice; New Study Boosts Hopes for Alien Life