சிலந்திகள் காற்றில் பரவும் நறுமணத்தைக் கண்டறிய தங்கள் கால்களில் பிரத்யேக முடிகளைப் பயன்படுத்தும் என தெரியவந்துள்ளது
Photo Credit: Pixabay/Fleischturbine
சிலந்திகள் காற்றில் பரவும் நறுமணத்தைக் கண்டறிய தங்கள் கால்களில் பிரத்யேக முடிகளைப் பயன்படுத்துகின்றன
சிலந்திகள் அல்லது எட்டுக்கால் பூச்சிகள் என்பன எட்டுக்கால்களை உடைய, சவைக்கும் வாய்ப்பகுதிகள் இல்லாத, இருபகுதியான உடல்பிரிவுகள் உடைய, காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் கணுக்காலி வகைப் பூச்சிகளாகும். சிலந்திகள் காற்றில் பரவும் நறுமணத்தைக் கண்டறிய தங்கள் கால்களில் பிரத்யேக முடிகளைப் பயன்படுத்தும் என தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு உணர்திறன் உறுப்பு இல்லாத சிலந்திகள் போன்ற பூச்சிகளின் ரகசியத்தை வெளியப்படுத்தி உள்ளது. பெரோமோன்கள் போன்ற வாசனையை எவ்வாறு அடையாளம் காண முடியும் என்பது பற்றிய நீண்டகால கேள்விக்கு தீர்வு கண்டுள்ளது. பொதுவாக சிலந்தி தேள் வகுப்பை சேர்ந்தவை. நான்கு இணையான கால்கள் (எட்டு கால்கள்) கொண்டவை. பொதுவாக 6 இணையான கை-கால் போன்று உடம்பில் இருந்து
நீட்டிக்கொண்டிருக்கும் இணைப்புறுப்புகளாக மொத்தம் 12, கொண்டவை. இவற்றுள் 8 கால்கள் போக, மீதம் உள்ள 4 இணைப்புறுப்புகள் இரையைப் பற்றவும், தற்காப்புக்காகவும், சுற்றுச்சூழலை உணரவும் தேவைப்படும் கொடுக்கு உள்ளது. செலிசெரே எனப்படும் முன்கொடுக்கு அல்லது கணுக்கொடுக்கு, இரையைப் பற்றவும், தன் பகையினத்திடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும் பயன்படுகின்றன. உணரிகள் எனப்படும் இரண்டும், இரையைப் பற்றவும், நகர்ந்து செல்லவும், இனப்பெருக்க உறுப்பாகவும் செயல்படுகின்றன.
முன்னிருக்கும் இரண்டு உணரிகளும் காலகள் போல் தென்படுவதால், பத்து கால்களை உடைய ஓரினம் போல் காட்சியளிக்கும். உணரிகள் என்னும் இணைப்புறுப்பு இருந்த போதும், இவை ஆறுகால் பூச்சிகளில் இருக்கும் உணர்விழைகள் அல்ல. சிலந்திதேள் அல்லது அராக்னிடுகளின் சிறப்பான வேறுபாடு இவற்றிற்கு உணர்விழைகளும் இறக்கைகளும் கிடையாது என்பதே.
இவை தம் உடலில் உள்ள சுரப்பியில் இருந்து மெல்லிய நூல் போன்ற இழை ஆக்குவது இதன் சிறப்பியல்பு ஆகும். இந்த சிலந்திநூலை நூலாம்படை என்றும், சிலந்தியை நூலாம்பூச்சி என்றும் கூறுவர். சிலந்திகளில் பல வகையான நஞ்சுகள் கொண்டிருக்கின்றன.
மற்ற வகையான பூச்சிகளைப் போல் இவற்றுக்கு உணர்விழைகள் கிடையாது. 2011ஆம் ஆண்டு திசம்பர் 31 வரை உலகில் 42,751 வகையான சிலந்திகள் அல்லது எட்டுக்கால்பூச்சிகள் அறிவியலில் அடையாளம் காணப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இவை 110 பேரினங்களில் அடங்கும். சிலந்திகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வாழ்ந்து வந்திருக்கின்றன
தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வயது வந்த ஆண் சிலந்திகளின் மேல் கால்களில் சுவர்-துளை சென்சில்லா காணப்பட்டது. இந்த நுண்ணிய கட்டமைப்புகள் பெரோமோன்களைக் கண்டறிவதில் முக்கியமானவை என நம்பப்படுகிறது. உயர் தெளிவுத்திறன் கொண்ட ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி ஆயிரக்கணக்கான இந்த சென்சில்லாவை வெளிப்படுத்தியது, அவை பெண்கள் மற்றும் இளம் ஆண்களில் இல்லை. இதன் மூலம் சிலந்திகள் காற்றில் பரவும் நறுமணத்தைக் கண்டறிய தங்கள் கால்களில் பிரத்யேக முடிகளைப் பயன்படுத்தும் என தெரியவந்துள்ளது.
சிலந்திகளின் ஆல்ஃபாக்டரி அமைப்புகள் பூச்சிகளில் காணப்படும் உணர்திறனை எதிர்த்து நிற்கின்றன, அவற்றின் மேம்பட்ட இரசாயன கண்டறிதல் திறன்களை எடுத்துக்காட்டுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.இந்த ஆய்வு மற்ற 19 சிலந்தி இனங்களை ஆராய்ந்து, பெரும்பாலான ஆண் சிலந்திகளில் சுவர்-துளை சென்சில்லா இருப்பதை உறுதிப்படுத்தியது. பெண் சிலந்திகள் வாசனையை எவ்வாறு கண்டறிகின்றன என்பது பற்றிய முடிவுகளை தருகிறது. இந்த முன்னேற்றம் சிலந்தியின் நடத்தை, அதிநவீன உணர்ச்சி வழிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கான அடித்தளத்தை வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Resident Evil Requiem Becomes Highest User Rated Game of All Time on Metacritic
Vivo Y21 5G With Dimensity 6300 Chip Listed on Cellular Operator’s Website Ahead of Launch