ராஞ்சியில் மதுபான சேவையை தொடங்கியது ஸ்விக்கி
Swiggy மற்றும் ஜொமாடோ இப்போது வரை வீட்டிற்கே உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன. ஆனால், இப்போது இந்த இரண்டு நிறுவனங்களும் கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது, உங்கள் பொழுதுபோக்கிற்கான தீர்வைக் கண்டறிந்துள்ளன. இப்போது இந்த இரண்டு உணவு விநியோக நிறுவனங்களும் உங்களுக்காக மதுபானங்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும். தற்போது இந்த வசதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மட்டுமே கிடைக்கிறது.மேலும், வரும் நாட்களில் மாநிலத்தின் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
ஸ்விக்கியிலிருந்து மதுவை ஆர்டர் செய்ய, நிறுவனம் தனது செயலியில் 'ஒயின் ஷாப்ஸ்' என்ற புதிய வசதியை சேர்த்துள்ளது. உங்களுக்கு பிடித்த மதுபானத்தை வரிசையில் நிற்காமல் இங்கே ஆர்டர் செய்யலாம். ஸ்விக்கியைப் போலவே, ஜொமாடோவும் இந்த வசதியை அதன் செயலியில் சேர்த்துள்ளது.
ஸ்விக்கி, மதுபான ஆர்டர்களும் ஒரு குறிப்பிட்ட அளவில் எடுக்கப்படும், மாநில சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்காது என்று கூறியது.
ராஞ்சியில் தனது நிறுவனம் மதுபானங்களை வீட்டிற்கே வழங்கத் தொடங்கியுள்ளதாக Zomato-வும் கேட்ஜெட்ஸ் 360-க்குத் தெரிவித்தது. இருப்பினும், பயனரின் நம்பகத்தன்மையை அறிய என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை ஜொமாடோ இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இந்த வசதியை ஜார்கண்ட் மாநிலத்தில் பிற நகரங்களிலும் வரும் நாட்களில் விரிவுபடுத்தப் போவதாகவும் ஜொமாடோ கூறியது.
நிச்சயமாக, இந்தியாவில் மதுபானங்களை வீட்டிற்கே வழங்குவதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகள் எதுவும் இல்லாததால், உணவு விநியோகத் துறையில் இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.