உச்சகட்டத்தில் ஆப்பிள் - குவால்கம் சட்ட மோதல்

ஆப்பிள் நிறுவனம் தங்களிடம் கொள்முதல் செய்த சிப்களுக்கு முறையான கட்டணத்தை செலுத்தவில்லை என்பது குவால்கம்மின் குற்றச்சாட்டு

உச்சகட்டத்தில் ஆப்பிள் - குவால்கம் சட்ட மோதல்
ஹைலைட்ஸ்
  • காப்புரிமை விதியை மீறியதாக குவால்கம் குற்றச்சாட்டு
  • அதிக கட்டணம் வசூலிப்பதாக ஆப்பிள் குற்றச்சாட்டு
  • 6 நாடுகளில் மொத்தம் 50 வழக்குகள் நடந்து வருகின்றன
விளம்பரம்

உலகின் மிக முக்கியமான இரண்டு பெரும் டெக் நிறுவனங்களான ஆப்பிள் மட்டும் குவால்கம் இடையேயான சட்ட மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஓராண்டுக்கு மேலாக இந்த சட்ட மோதல் நடந்து வருகிறது. சீனா, ஜெர்மன் மற்றும் அமெரிக்க சந்தைகளில் கூடிய விரைவில் நடக்க இருக்கும் இந்த வழக்குகளின் முடிவில் தான் ஆப்பிள் நிறுவனம் தப்பிக்குமா என்று தெரிய வரும்.

ஆப்பிள் நிறுவனம் தங்களிடம் கொள்முதல் செய்த சிப்களுக்கு முறையான கட்டணத்தை செலுத்தவில்லை என்பது குவால்கம்மின் குற்றச்சாட்டு. ஆனால் ஆப்பிள் நிறுவனம், குவால்கம் தங்களது காப்புரிமையை பயன்படுத்தி ஒரு ஃபோனுக்கான சிப்புக்கு அதிக விலை வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது. 

ஒருவேலை தீர்ப்பு குவால்கம் நிறுவனத்துக்கு சாதகமாக வரும் பட்சத்தில், ஆப்பிள் நிறுவனம் 2700 கோடி ரூபாய் வரை அபராதம் வழங்க வேண்டியிருக்கும். 

இதுவரை 6 நாடுகளில் 50 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக புளூம்பெர்க்கைச் சேர்ந்த மேர் லார்சன் கூறுகிறார். அடுத்த வாரம் சர்வதேச வர்த்தக ஆணையம் குவால்கம் தரப்பு வாதத்தை கேட்கிறது. மேலும் குவால்கம் சிப்கள் இல்லாத, ஐபோன் 7 போன்களின் இறக்க்குமதியை தடை செய்யவும் ஆணையத்தின் முன் அந்நிறுவனம் கோரிக்கை வைக்கிறது. 

இதே வாதத்தை ஜெர்மனி நீதிமன்றத்திலும் குவால்கம் முன் வைத்துள்ளது. ஜெர்மனி சந்தைக்குள் ஆப்பிள் விற்பனைக்கு தடை போட வேண்டும் என்றும் கூறியுள்ளது. நீதிபதி அந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட போதும், தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார். 

சீன அரசின் காப்புரிமை ஆய்வு ஆணையம் இந்த மாதம் இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க உள்ளது. குவால்கம்மின் காப்புரிமை வாதத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என ஆப்பிள் முறையிட்டுள்ளது. 

குவால்கம் தன் நிலையில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. “சட்டப்படி எங்கள் தரப்பு நியாயத்தை வெல்வோம் “என்றும் கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தாங்கள் எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என்றும், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றாச்சாட்டுகள் அவசியமில்லாதது என்கிறது. 

எதுவாக இருந்தாலும், இந்த வழக்கு செட்டில்மென்ட் மூலம் மட்டுமே முடிவுக்கு வரும் என்பது, சர்வதேச தொழில் வல்லுநர்களின் கருத்து. அதற்கான நேரம் மிக விரைவில் வரும் என்பதை எதிர்பார்க்கலாம்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. விவோ X300 FE Snapdragon 8 Gen 5, 50MP Telephoto Camera உடன் அறிமுகம்
  2. மார்ச் 5ல் அறிமுகமாகும் முன் Nothing Phone 4a சீரிஸ் விலை வெளியானது
  3. டெக்னோ பாப் எக்ஸ் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி; 'டெக்னோ ஸ்பார்க் கோ 3'-ன் மறு பதிப்பா இது?
  4. 13-இஞ்ச் Liquid Retina திரை, Apple A18 Pro சிப் MacBook Neo இந்தியாவில்
  5. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  6. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  7. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  8. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  9. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  10. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »