சந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது: ISRO

சந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது: ISRO

2,379 கிலோ எடை கொண்ட Chandrayaan-2 ஆர்பிட்டரின் பணி ஆயுள் 'ஒரு வருடம்'.

ஹைலைட்ஸ்
  • ஆர்பிட்டர் பேலோடுகள் ரிமோட் சென்சிங் அவதானிப்புகளை மேற்கொள்ளும்
  • ஆர்பிட்டர் எட்டு விஞ்ஞான பேலோடுகளை சுமந்து, சந்திரனை ஆய்வு செய்கிறது
  • 2.1 கி.மீ உயரத்தில் லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது
விளம்பரம்

Chandrayaan-2 ஆர்பிட்டர் சந்திர சுற்றுப்பாதையில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என்று சனிக்கிழமை அதிகாலை சந்திரனின் மேற்பரப்பில் தொடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்ததை அடுத்து இஸ்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார். "ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது, அப்படியே உள்ளது, சந்திர சுற்றுப்பாதையில் சாதாரணமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுகிறது" என்று அந்த அதிகாரி PTI-க்கு தெரிவித்தார்.

2,379 கிலோ எடை கொண்ட ஆர்பிட்டரின் பணி ஆயுள் ஒரு வருடம். ஆர்பிட்டர் பேலோடுகள் 100 கி.மீ சுற்றுப்பாதையில் இருந்து ரிமோட் சென்சிங் அவதானிப்புகளை மேற்கொள்ளும். ஒரு தசாப்தத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சந்திரயான் -1 பணிக்கான பின்தொடர்தல் பணியாக சந்திரயான் -2, ஒரு ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்) மற்றும் ரோவர் (பிரக்யன்) ஆகியவற்றைக் கொண்டு விண்ணில் ஏவப்பட்டது. ஆர்பிட்டர் சந்திர மேற்பரப்பை வரைபடமாக்குவதற்கு எட்டு விஞ்ஞான பேலோடுகளை சுமந்து, சந்திரனின் வெளிப்புறத்தை (வெளிப்புற வளிமண்டலத்தை) ஆய்வு செய்கிறது.

செப்டம்பர் 2 ஆம் தேதி இஸ்ரோ சந்திரயான் -2 ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் விக்ரம் லேண்டரை (ரோவர் பிரக்யனை உள்ளே வைத்திருந்தது) பிரிப்பதை வெற்றிகரமாக மேற்கொண்டது. சனிக்கிழமை அதிகாலையில், விக்ரம் லேண்டரிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல் பரிமாற்றம் சந்திர மேற்பரப்பில் அது இயங்கும் போது இழந்தது, மேலும் இதுகுறித்து தரவு பகுப்பாய்வு செய்யப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

"விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி இருந்தது மற்றும் சாதாரண செயல்திறன் 2.1 கி.மீ உயரம் வரை காணப்பட்டது. பின்னர், லேண்டரிலிருந்து தகவல் தொடர்பு இழந்தது" என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் கூறினார்.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் (ISTRAC) உள்ள மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளெக்ஸில் 'தரவுகள் ஆராயப்படும்' என்று மேலும் அவர் கூறினார். இஸ்ரோ விஞ்ஞானிகளின் முகங்களில் ஏமாற்றம் அதிகமாகவே இருந்தது.

விக்ரமின் திட்டமிட்ட தரையிறங்கலை காண வெள்ளிக்கிழமை இரவு பெங்களூருக்கு பறந்த பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் சோர்வடைய வேண்டாம் என்று கூறியதோடு, நாடு அவர்களை கண்டு பெருமை படுவதாகவும் கூறினார். "நான் உங்கள் முகத்தில் ஏமாற்றத்தைக் காண்கிறேன். சோர்வடையத் தேவையில்லை. நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்" என்று பிரதமர் மோடி கூறினார். "இவை தைரியமாக இருக்க வேண்டிய தருணங்கள், நாங்கள் தைரியமாக இருப்போம்! நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், எங்கள் விண்வெளித் திட்டத்தில் தொடர்ந்து கடினமாக உழைப்போம்".

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Chandrayaan 2, Chandrayaan, ISRO, Vikram, Vikram Lander
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Neo 10 Pro+ : மே 20 லாஞ்சுக்கு முன்னாடி ஸ்பெக்ஸ் வெளியாகிடுச்சு
  2. Realme GT 7 ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 9400 in SoC-ஐக் கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  3. Samsung Galaxy S25 Edge இந்தியாவில் விலை அறிவிப்பு, முன்பதிவு தொடங்கியது
  4. Motorola Razr 60 Ultra: இந்தியாவில் அறிமுகமான புதிய மடிக்கும் மொபைல்
  5. Vivo V50 Elite Edition வட்ட வடிவ கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம்
  6. Airtel Black Rs. 399 திட்டம்: IPTV உடன் புதிய புரட்சி செய்ய காத்திருக்கும் அறிவிப்பு
  7. Alcatel V3 Ultra செல்போன் பட்ஜெட் பிரியர்களுக்கு ஒரு சுவாரஸ்ய அப்டேட்
  8. Moto G86 Power 5G பற்றி ஆன்லைனில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
  9. வரம்பற்ற டேட்டா! ஏர்டெல் அறிமுகப்படுத்தும் International Roaming Plan
  10. Haier C95 and C90 OLED TV இந்தியாவில் Dolby Vision IQ அம்சத்துடன் வருகிறது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »