சுய தாக்குதல் கருத்துக்களுக்கு எதிராக இன்ஸ்டா கொண்டு வந்துள்ள விதிகள்!

இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைவர் அடம் மோஸ்செரி சுயதாக்குதல் பற்றிய புகைப்படங்கள் மற்றும் கிராப்பிஸ்யை நீக்க உத்திரவிட்டுள்ளார்.

சுய தாக்குதல் கருத்துக்களுக்கு எதிராக இன்ஸ்டா கொண்டு வந்துள்ள விதிகள்!

சுயதீங்கு மற்றும் தற்கொலைக்கு ஏதிராக வரும் புகைப்படங்கள் மற்றும் கிராப்பிக்ஸ்களை மாற்ற இன்ஸ்டாகிராம் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

ஹைலைட்ஸ்
  • சுயதீங்கை பற்றிய புகைப்படங்களை நீக்க இன்ஸ்டாகிராம் ஓப்புதல்.
  • இளம் பெண்னின் மரணத்திற்கு பிறகு இந்த உடனடி நடவெடிக்கை
  • அடம் மோஸ்சேரி இந்த உடனடி முடிவை எடுத்துள்ளார்
விளம்பரம்

சுயதீங்கு விளைவிக்கும் கருத்துக்களை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் மற்றும் கிராப்க் கன்டன்ட்களை தனது ஆப்பிலிருந்து நீக்க இன்ஸ்டாகிராம் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அடம் மோஸ்சேரி தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் பிரட்டனை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், இறந்த பெண்ணின் தந்தை இன்ஸ்டாகிராமில் வெளியாகும் சுயதீங்கு பற்றியை கருத்துக்களே தன் மகளை இப்படிய்ய தற்கோலை செய்ய தூண்டியது என கூறியதே இந்த தீடிர் விதிமுறை மாற்றங்களுக்கு காரணம் என கூறினார். 
இது பற்றி மோஸ்செரி கூறுகையில் ‘சுயதீங்கு மற்றும் தற்கொலை போன்ற தவரான செயல்களின் ஆபத்துக்களை பற்றிய கருத்துக்களை நாம் யாரும் சரிவர புரிந்துகொள்வதில்லை, இதனால் பாதிப்பின் இருக்கும் நபர்களை மீட்க உதவுவது நமது கடமை' என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் ‘இதை மாற்றும் கடமை என்னிடம் உள்ளது. இந்த நிலமையை மாற்றி, இனி இதுபோன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும் கன்டென்ட்கள் வெளிவராத நிலையை உறுவாக்க வேண்டும். இதன் தொடக்கமாக, இத்துறையில் சிறந்த ஆடக்களை கொண்டு இதுபோன்ற தேவையற்ற கன்டென்ட்களை நீக்கும் பணி நடக்கிறது' என தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த மோலி ரஸ்ஸலியின் (14 வயது) தற்கொலையை தொடர்ந்து அவரது தந்தை ஐயான் ரஸ்ஸல், மோலியின் இனஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தபோது அதில் மனச்சோர்வு மற்றும் தற்கொலை பேன்ற தலைப்பில் சோதனை செய்தை கண்டுபிடித்தார். இதனால் இன்ஸ்டாகிராம் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதற்கு பிரட்ன் அரசும் துணை நின்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ஸ்டாகிராம் தளம் இதுபோன்ற தகவல்களை தனது தேடுதல் தளத்தில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகையில் ‘தற்கொலை மற்றும் சுய தாக்குதல் போன்ற மனதிற்கு வேதனை அளிக்கும் சம்பவங்களை  பற்றி மக்கள் பதிறலாம் ஆனால் தற்கொலையை ஊக்குவிக்க கூடாது' என தொரிவித்து.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. மோட்டோரோலா ரேஸர் ஃபோல்ட்: 50MP மூன்று கேமரா, 6000mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம்; விலை & அம்சங்கள்
  2. கார்மின் ஃபோர்ரன்னர் 70, ஃபோர்ரன்னர் 170 ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்; இந்தியாவில் வெளியாகும் காலம் உறுதி
  3. இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் விவரக்குறிப்புகளை விட ஆயுள் மற்றும் நம்பகத்தன்மைக்கே முன்னுரிமை அளிக்கின்றனர்
  4. ஜெமினி AI, மேஜிக் பாயிண்டர் மற்றும் குளோபார் டிசைனுடன் புதிய கூகுள்புக் லேப்டாப்களை கூகுள் அறிமுகம் செய்தது
  5. சோனி பிராவியா 3II வரிசை இந்தியாவில் அறிமுகம்: XR பிராசஸர், 120Hz 4K டிஸ்ப்ளே மற்றும் பல சிறப்பம்சங்கள்
  6. நுகர்வோர் குறைவு & ரேம் தட்டுப்பாட்டால் 2026 Q1-இல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 4.1% சரிவு: IDC அறிக்கை
  7. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: புளூடூத் ஸ்பீக்கர்களுக்கான சிறந்த சலுகைகள்
  8. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: ரெஃப்ரிஜிரேட்டர்களுக்கான சிறந்த சலுகைகள்
  9. அமேசான் சம்மர் சேல் 2026: யுரேகா ஃபோர்ப்ஸ், ஷார்ப் ஏர் பியூரிஃபையர்களில் சிறந்த சலுகைகள்
  10. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: வேக்யூம் கிளீனர்களுக்கான சிறந்த சலுகைகள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »