கொரோனா வைரஸ் இருக்கிறவங்கள கண்டுபிடிக்க புது செயலி... ஐஐடி பேராசிரியர் அசத்தல்!

ஜியோஃபென்சிங் தொழில்நுட்பத்தின் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட COVID-19 நபர்களை இந்த செயலி மூலம் கண்காணிக்க முடியும்.

கொரோனா வைரஸ் இருக்கிறவங்கள கண்டுபிடிக்க புது செயலி... ஐஐடி பேராசிரியர் அசத்தல்!

தனிமைப்படுத்தப்பட்ட நிர்வாகத்தைத் தவிர, நெரிசலைக் குறைக்கவும் இந்த செயலி உதவும்

ஹைலைட்ஸ்
  • பேராசிரியர் கமல் ஜெயின் ஒரு டிராக்கிங் மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார்
  • செயலி, தனிநபர்களைக் டிராக் செய்து அவர்களைச் சுற்றி புவிநிலையை வரையலாம்
  • ஜியோஃபென்சிங் மீறப்பட்டால், இந்த அமைப்பு தானாக ஒரு எச்சரிக்கையை பெறுகிறது
விளம்பரம்

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை டிராக் செய்ய, ஐ.ஐ.டி ரூர்க்கியின் சிவில் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் கமல் ஜெயின் ஒரு மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார்.

"தனிமைப்படுத்தப்பட்ட நபரை தவிர, கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காகவும், நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்கவும் இந்த செயலி உதவுகிறது" என்று பேராசிரியர் ஜெயின் கூறினார்.

iit roorkee full IIT

ஜியோஃபென்சிங் தொழில்நுட்பத்தின் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட COVID-19 நபர்களை இந்த செயலி மூலம் கண்காணிக்க முடியும். மேலும். செயலியின் நிர்வாகி, தனிநபரின் முழு வரலாற்றையும் பார்க்க முடியும்.

ஜி.பி.எஸ் தரவைத் தவிர, ஒரு நபரின் இருப்பிடத்தையும் எஸ்.எம்.எஸ் மூலம் பெறலாம். மேலும், வைரஸ் தொற்றுள்ள நபர்களை டிராக் செய்யவும், கண்காணிக்கவும் பெரிதும் உதவும்" என்று ஐஐடி-ரூர்க்கி இயக்குநர் பேராசிரியர் அஜித் கே சதுர்வேதி கூறினார்.


செயலியில் உள்ள பிற அம்சங்கள்: 

multi-camera support, surveillance magnetic device, halt time மற்றும் auto camera click ஆகியவை உள்ளன.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »