அமேசான், ஃபிள்ப்கார்டு போன்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட புதிய உத்தரவு!

அரசு தரப்பில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பில் , இந்த புதிய விதி வரும் பிப்ரவரி மாதம் அமலுக்கு வரவுள்ளது.

அமேசான், ஃபிள்ப்கார்டு போன்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட புதிய உத்தரவு!
விளம்பரம்

வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல், தங்களுக்கு சரிபாதி உரிமையுள்ள விற்பனையாளர்கள்மிடருந்து பொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் விற்பனையின் ஜாம்பவான்களான  ஆமேசான் மற்றும் வால்மார்டு நிறுவனத்தின் ஃவிளிப்கார்டு நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அரசு தரப்பில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பில் , இந்த புதிய விதி வரும்  பிப்ரவரி மாதம் அமலுக்கு வரவுள்ளது.

‘இ- வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், அவர்களுக்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்தோ அல்லது அதன் அசார்பு நிறுவனங்களிடமிருந்தோ மட்டுமே பொருட்களை விற்பணை செய்ய தடை விதிக்கப்கட்டுள்ளது. மேலும் ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்திடமிருந்து வாங்கி விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். இதன் மூலம் விற்பனையாளர்கள் மக்களை நேரடியாக சென்றடைய முடியும். மேலும் குறைந்த விலை மற்றும் தள்ளுபடிகள் மூலம் அதிகபடியான விற்பனையில் ஈடுபட முடியும் என எதிர்பாக்கப்படுகிறது' என வர்தக அமைசரகம் அறிவித்துள்ளது..

இது போன்ற பெரிய நிறுவனங்களின் ஆதிக்கதால் தங்களது விற்பனைகள் தொடர்ந்து பாதித்து வருவதாக இந்திய விற்பனையாளர்களின் தொடர் புகார்களால் இந்த புதிய விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


மேலும் அகில இந்திய இணையவழி  விற்பனையாளர்கள் அசோசியோஷன் All India Online Vendors Association (AIOVA) பிப்ரவரி மாதம் சார்பாக கடந்த அக்டோபர் மாதம், அமேசான் நிறுவனம் க்ளாவுட் டெயில் மற்றும் அபாரியோ போன்ற நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் வளங்குவதாக கொடுக்கப்பட்ட மனுவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.மேலும் இதேபோன்ற  வழக்கு லாபி குழுவால் ஃபிள்ப்கார்டு நிறுவனத்தின் மேல் சுமத்தப்பட்டுள்ளது .

மேலும் இந்த புதிய விதிமுறையின் மூலம் யூ.எஸ் நாட்டை சேர்ந்த நிறுவனங்களை கண்டு இந்திய வியாபாரிகள் அஞ்ச வேண்டாம் என நம்பப்படுகிறது. மேலும் இதன் மூலம் பொருட்களின் விலையை கட்டுபடுத்த முடியும் என எதிர்பாக்கபடுகிறது.
இந்த புதிய விதிமுறைகளை அமல் படுத்துவது குறித்து  அமேசான் நிறுவனம் ஆலோசனை நடத்திவரும் நிலையில் ஃப்ள்ப்கார்டு சார்பில் இன்னும் பதில்வரவில்லை.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. ரெட்மி டர்போ 5 இந்திய அறிமுக தேதி கசிந்தது; ரெட்மி 17 5G போனுடன் வரக்கூடும்
  2. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் X9s இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன
  3. மே 29 அறிமுகத்திற்கு முன்னதாக விவோ தனது முதல் ஓவர்-இயர் ANC ஹெட்போன்களை டீஸ் செய்துள்ளது
  4. ரியல்மி P4s 5G இந்தியாவின் அறிமுக காலக்கெடு, சேமிப்பு மாறுபாடுகள் மற்றும் வண்ண விருப்பங்களுடன் கசிந்தது
  5. ரியல்மி 16டி 5ஜி vs ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி vs மோட்டோரோலா எட்ஜ் 70 :இந்திய விலை, விவரக்குறிப்புகள் ஒப்பீடு
  6. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி Z Fold 5, Z Flip 5 போன்களுக்கு ஒன் யுஐ 8.5 ஸ்டேபிள் அப்டேட் கிடைத்துள்ளதாகத் தகவல்
  7. ஒப்போ ஏ6சி 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  8. ரெட்மி நோட் 15 5ஜி, ரெட்மி 15 5ஜி போன்களின் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளதாக தகவல்
  9. ஒப்போ ஏ6சி (Oppo A6c) இந்திய விலை, மெமரி கட்டமைப்புகள் எதிர்பார்க்கப்படும் அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்தன
  10. மோட்டோ G37, G37 பவர், பட்ஸ் 2 இந்தியாவில் விற்பனைக்கு வந்தன: விலை, சலுகைகள் விவரம்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »