சந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது: ISRO

சந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது: ISRO

2,379 கிலோ எடை கொண்ட Chandrayaan-2 ஆர்பிட்டரின் பணி ஆயுள் 'ஒரு வருடம்'.

ஹைலைட்ஸ்
  • ஆர்பிட்டர் பேலோடுகள் ரிமோட் சென்சிங் அவதானிப்புகளை மேற்கொள்ளும்
  • ஆர்பிட்டர் எட்டு விஞ்ஞான பேலோடுகளை சுமந்து, சந்திரனை ஆய்வு செய்கிறது
  • 2.1 கி.மீ உயரத்தில் லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது
விளம்பரம்

Chandrayaan-2 ஆர்பிட்டர் சந்திர சுற்றுப்பாதையில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என்று சனிக்கிழமை அதிகாலை சந்திரனின் மேற்பரப்பில் தொடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்ததை அடுத்து இஸ்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார். "ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது, அப்படியே உள்ளது, சந்திர சுற்றுப்பாதையில் சாதாரணமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுகிறது" என்று அந்த அதிகாரி PTI-க்கு தெரிவித்தார்.

2,379 கிலோ எடை கொண்ட ஆர்பிட்டரின் பணி ஆயுள் ஒரு வருடம். ஆர்பிட்டர் பேலோடுகள் 100 கி.மீ சுற்றுப்பாதையில் இருந்து ரிமோட் சென்சிங் அவதானிப்புகளை மேற்கொள்ளும். ஒரு தசாப்தத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சந்திரயான் -1 பணிக்கான பின்தொடர்தல் பணியாக சந்திரயான் -2, ஒரு ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்) மற்றும் ரோவர் (பிரக்யன்) ஆகியவற்றைக் கொண்டு விண்ணில் ஏவப்பட்டது. ஆர்பிட்டர் சந்திர மேற்பரப்பை வரைபடமாக்குவதற்கு எட்டு விஞ்ஞான பேலோடுகளை சுமந்து, சந்திரனின் வெளிப்புறத்தை (வெளிப்புற வளிமண்டலத்தை) ஆய்வு செய்கிறது.

செப்டம்பர் 2 ஆம் தேதி இஸ்ரோ சந்திரயான் -2 ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் விக்ரம் லேண்டரை (ரோவர் பிரக்யனை உள்ளே வைத்திருந்தது) பிரிப்பதை வெற்றிகரமாக மேற்கொண்டது. சனிக்கிழமை அதிகாலையில், விக்ரம் லேண்டரிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல் பரிமாற்றம் சந்திர மேற்பரப்பில் அது இயங்கும் போது இழந்தது, மேலும் இதுகுறித்து தரவு பகுப்பாய்வு செய்யப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

"விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி இருந்தது மற்றும் சாதாரண செயல்திறன் 2.1 கி.மீ உயரம் வரை காணப்பட்டது. பின்னர், லேண்டரிலிருந்து தகவல் தொடர்பு இழந்தது" என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் கூறினார்.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் (ISTRAC) உள்ள மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளெக்ஸில் 'தரவுகள் ஆராயப்படும்' என்று மேலும் அவர் கூறினார். இஸ்ரோ விஞ்ஞானிகளின் முகங்களில் ஏமாற்றம் அதிகமாகவே இருந்தது.

விக்ரமின் திட்டமிட்ட தரையிறங்கலை காண வெள்ளிக்கிழமை இரவு பெங்களூருக்கு பறந்த பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் சோர்வடைய வேண்டாம் என்று கூறியதோடு, நாடு அவர்களை கண்டு பெருமை படுவதாகவும் கூறினார். "நான் உங்கள் முகத்தில் ஏமாற்றத்தைக் காண்கிறேன். சோர்வடையத் தேவையில்லை. நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்" என்று பிரதமர் மோடி கூறினார். "இவை தைரியமாக இருக்க வேண்டிய தருணங்கள், நாங்கள் தைரியமாக இருப்போம்! நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், எங்கள் விண்வெளித் திட்டத்தில் தொடர்ந்து கடினமாக உழைப்போம்".

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Chandrayaan 2, Chandrayaan, ISRO, Vikram, Vikram Lander
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Honor GT Pro செல்போன் Snapdragon 8 Elite சிப்செட்டுடன் சீனாவில் அறிமுகம்
  2. Realme GT 7 செல்போன் சக்திவாய்ந்த MediaTek Dimensity 9400+ உடன் வெளியானது
  3. Huawei Enjoy 80 பெரிய பேட்டரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
  4. இந்தியாவில் அறிமுகமானது அட்டகாசமான Insta360 X5 புதிய 360 டிகிரி கேமரா
  5. Chromebook மாடல்களான CX14 மற்றும் CX15 அறிமுக செய்த ASUS நிறுவனம்
  6. ஆப்பிள் வாட்ச்களுக்கு இணையான அம்சம் இருக்கும் Redmi Watch Move
  7. HMD Global நிறுவனம் Mattel உடன் இணைந்து அறிமுகப்படுத்தும் Barbie Phone
  8. CMF Phone 2 Pro செல்போன் ஏப்ரல் 28ல் உலகமெங்கும் அறிமுகமாகிறது
  9. மார்க்கெட்டில் விலை குறைந்த 5G மாடல் போனாக அறிமுகமாகிறது Itel A95 5G
  10. 5G ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் புரட்சி செய்யப்போகும் OPPO K12s 5G செல்போன்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »