‘3 பின்புற கேமரா..!’- இந்தியாவில் சியோமியின் அடுத்த அதிரடி

இந்த டீசரை வைத்து மட்டும் ஸ்திரமான ஒரு முடிவுக்கு வர முடியாது. மேலும் தகவல்களுக்காக நாம் பொறுத்திருக்க வேண்டும். 

‘3 பின்புற கேமரா..!’- இந்தியாவில் சியோமியின் அடுத்த அதிரடி

இந்தியாவுக்கு வெளியே சியோமி நிறுவனம் விற்பனை செய்து வரும் எம்ஐ 9 மற்றும் எம்ஐ 9 SE போன்களில் மூன்று பின்புற கேமரா வசதி இருக்கிறது

ஹைலைட்ஸ்
  • ஸ்னாப்டிராகன் 700 வகை கொண்ட போனை அறிமுகம் செய்ய உள்ளது சியோமி
  • 3 பின்புற கேமரா குறித்து டீசர் வெளியிட்டுள்ளது சியோமி
  • சீனாவில் ஒரு புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி
விளம்பரம்

சியோமி நிறுவனம், மூன்று பின்புற கேமராக்கள் கொண்ட மொபைல் போனை அடுத்ததாக இந்தியாவில் வெளியிட வாய்ப்புள்ளது. இது குறித்து சியோமி நிறுவனம், ஒரு வீடியோ டீசர் வெளியிட்டுள்ளது. அதை வைத்துப் பார்க்கும் போது சியோமி சார்பில், அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட உள்ள போனில் 3 பின்புற கேமரா கொண்ட மாடல் இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது. ஆனால், டீசரை வைத்து ஒரு முடிவுக்கு நம்மால் வர முடியவில்லை. அதே நேரத்தில் சியோமி இந்தியா நிறுவனத்தின் மனு குமார் ஜெயின், ‘குவால்கம் ஸ்னாப்டிராகன் 700 வகை கொண்டு அடுத்ததாக போன் வெளியிட உள்ளோம்' என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த இரண்டு வசதிகளையும் ஒரே போன் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. 

சியோமி சார்பில் வெளயிடப்பட்டுள்ள வீடியோவில், ஒரு கிரகத்தை, சிங்கிள் கேமரா, டூயல் கேமரா மற்றும் மூன்று கேமராக்கள் வட்டமிடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சியோமி, இந்தியாவில் ஏற்கெனவே சிங்கிள் மற்றும் டூயல் கேமரா வகைகளை கொண்ட போனை வெளியிட்டுவிட்டதால், அடுத்ததாக மூன்று கேமரா கொண்ட மாடலைத்தான் அறிமுகம் செய்யும் என்று யூகிக்க முடிகிறது. 

இந்தியாவுக்கு வெளியே சியோமி நிறுவனம் விற்பனை செய்து வரும் எம்ஐ 9 மற்றும் எம்ஐ 9 SE போன்களில் மூன்று பின்புற கேமரா வசதி இருக்கிறது. ஆனால், இந்த இரண்டு போன்களிலும் ஸ்னாப்டிராகன் 700 வகை ப்ராசஸர் இல்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்திய சந்தையில், ஒரு புது வித மொபைல் போனுக்காக சியோமி தயாராகி வருவது தெரிகிறது. 

இந்த டீசரை வைத்து மட்டும் ஸ்திரமான ஒரு முடிவுக்கு வர முடியாது. மேலும் தகவல்களுக்காக நாம் பொறுத்திருக்க வேண்டும். 

அதே நேரத்தில் சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி, சீனாவில் ஒரு புதிய போனை வெளியிட தயாராகி வருகிறது. அந்த போனில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஸ்னாப்டிராகன் 855 எஸ்.ஓ.சி ப்ராசஸர் உள்ளிட்ட வசதிகள் இருக்கும் எனப்படுகிறது. மே 13 ஆம் தேதி இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு AI மூலம் உருவாக்கப்பட்ட பின்னணிகளை அமைப்பது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  2. ஒன்பிளஸ் நார்ட் CE 6 லைட்: டைமென்சிட்டி 7400 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 உடன் கீக்பெஞ்சில் தென்பட்டது
  3. யூடியூப்பின் புதிய வசதி: முகப்புப் பக்கத்தில் ஷார்ட்ஸை (Shorts) முழுமையாக முடக்கலாம்
  4. அமேசான் அறிமுகப்படுத்தும் 'AI ஸ்டோர்': AI வசதி கொண்ட சாதனங்களைக் கண்டறியவும் வாங்கவும் பயனர்களுக்கு உதவும்
  5. பைண்ட் ஹப் மூலம் தொலைந்த ஆண்ட்ராய்டு போனை எப்படிக் கண்டுபிடிப்பது மற்றும் அழிப்பது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  6. வீடியோவில் நிரூபிக்கப்பட்ட ஆப்பிள் பாதுகாப்பு குறைபாடு: லாக் செய்த ஐபோனிலிருந்து $10,000 திருடிய யூடியூபர்
  7. ஒப்போ பைண்ட் X10: 8,000mAh பேட்டரி மற்றும் 200-மெகாபிக்சல் கேமராக்களைக் கொண்டிருக்கலாம் எனத் தகவல்
  8. ஒன்பிளஸ் பேட் 4 இந்திய அறிமுகத் தேதி அறிவிப்பு; முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு வெளியீடு
  9. ரூ. 40,000-க்கு உட்பட்ட சிறந்த மொபைல்கள்: நத்திங் போன் 4a ப்ரோ, ஒன்பிளஸ் நோர்ட் 6 மற்றும் பல
  10. ஒப்போ F33 ப்ரோ 5G vs ஒன்பிளஸ் நார்ட் 6 vsநத்திங் போன் 4a ப்ரோ:இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »