‘3 பின்புற கேமரா..!’- இந்தியாவில் சியோமியின் அடுத்த அதிரடி

இந்த டீசரை வைத்து மட்டும் ஸ்திரமான ஒரு முடிவுக்கு வர முடியாது. மேலும் தகவல்களுக்காக நாம் பொறுத்திருக்க வேண்டும். 

‘3 பின்புற கேமரா..!’- இந்தியாவில் சியோமியின் அடுத்த அதிரடி

இந்தியாவுக்கு வெளியே சியோமி நிறுவனம் விற்பனை செய்து வரும் எம்ஐ 9 மற்றும் எம்ஐ 9 SE போன்களில் மூன்று பின்புற கேமரா வசதி இருக்கிறது

ஹைலைட்ஸ்
  • ஸ்னாப்டிராகன் 700 வகை கொண்ட போனை அறிமுகம் செய்ய உள்ளது சியோமி
  • 3 பின்புற கேமரா குறித்து டீசர் வெளியிட்டுள்ளது சியோமி
  • சீனாவில் ஒரு புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி
விளம்பரம்

சியோமி நிறுவனம், மூன்று பின்புற கேமராக்கள் கொண்ட மொபைல் போனை அடுத்ததாக இந்தியாவில் வெளியிட வாய்ப்புள்ளது. இது குறித்து சியோமி நிறுவனம், ஒரு வீடியோ டீசர் வெளியிட்டுள்ளது. அதை வைத்துப் பார்க்கும் போது சியோமி சார்பில், அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட உள்ள போனில் 3 பின்புற கேமரா கொண்ட மாடல் இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது. ஆனால், டீசரை வைத்து ஒரு முடிவுக்கு நம்மால் வர முடியவில்லை. அதே நேரத்தில் சியோமி இந்தியா நிறுவனத்தின் மனு குமார் ஜெயின், ‘குவால்கம் ஸ்னாப்டிராகன் 700 வகை கொண்டு அடுத்ததாக போன் வெளியிட உள்ளோம்' என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த இரண்டு வசதிகளையும் ஒரே போன் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. 

சியோமி சார்பில் வெளயிடப்பட்டுள்ள வீடியோவில், ஒரு கிரகத்தை, சிங்கிள் கேமரா, டூயல் கேமரா மற்றும் மூன்று கேமராக்கள் வட்டமிடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சியோமி, இந்தியாவில் ஏற்கெனவே சிங்கிள் மற்றும் டூயல் கேமரா வகைகளை கொண்ட போனை வெளியிட்டுவிட்டதால், அடுத்ததாக மூன்று கேமரா கொண்ட மாடலைத்தான் அறிமுகம் செய்யும் என்று யூகிக்க முடிகிறது. 

இந்தியாவுக்கு வெளியே சியோமி நிறுவனம் விற்பனை செய்து வரும் எம்ஐ 9 மற்றும் எம்ஐ 9 SE போன்களில் மூன்று பின்புற கேமரா வசதி இருக்கிறது. ஆனால், இந்த இரண்டு போன்களிலும் ஸ்னாப்டிராகன் 700 வகை ப்ராசஸர் இல்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்திய சந்தையில், ஒரு புது வித மொபைல் போனுக்காக சியோமி தயாராகி வருவது தெரிகிறது. 

இந்த டீசரை வைத்து மட்டும் ஸ்திரமான ஒரு முடிவுக்கு வர முடியாது. மேலும் தகவல்களுக்காக நாம் பொறுத்திருக்க வேண்டும். 

அதே நேரத்தில் சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி, சீனாவில் ஒரு புதிய போனை வெளியிட தயாராகி வருகிறது. அந்த போனில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஸ்னாப்டிராகன் 855 எஸ்.ஓ.சி ப்ராசஸர் உள்ளிட்ட வசதிகள் இருக்கும் எனப்படுகிறது. மே 13 ஆம் தேதி இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிளின் ஏர் டிராப் (AirDrop) போன்ற புதிய வசதி: ஆண்ட்ராய்டு 17 மற்றும் One UI 9-ல் 'Tap to Share' அம்சம்களுடன்
  2. ஒன்பிளஸ் Ace 6 அல்ட்ரா ஏப்ரலில் அறிமுகமாக வாய்ப்பு: ரெட்மி K90 அல்ட்ராவுக்குப் போட்டியாக அமையுமா?
  3. விவோ X300s சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி: 200MP கேமரா மற்றும் 7,100mAh பேட்டரியுடன் வெளியாகிறது
  4. இந்தியாவில் அறிமுகமாகிறது ஓப்போ Find X9 Ultra: பிஐஎஸ் (BIS) தரவுத்தளத்தில் இடம்பெற்றதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
  5. லாவா போல்ட் N2 ப்ரோ 4G மார்ச் 31-ல் இந்தியாவில் அறிமுகம்: முக்கிய சிறப்பம்சங்களை வெளியிட்டது நிறுவனம்
  6. iOS 27-ல் ஆப்பிளின் புதிய 'சிரி' (Siri) செயலி: குரல் மற்றும் உரை முறைகளோடு, பிற நிறுவனங்களின் சாட்பாட்களுக்கான 'எக்ஸ்டென்ஷன்' வசதியையும் வழங்குகிறது
  7. ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன்: ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என மார்க் குர்மன் தகவல்
  8. முதன்முறையாக ஒரு வால்நட்சத்திரம் தனது சுழற்சி திசையை மாற்றுவதை படம் பிடித்த ஹப்பிள் தொலைநோக்கி
  9. கட்டுரைகளில் ஏஐ உருவாக்கிய உரைகளுக்கு விக்கிப்பீடியா தடை; ஆனால் இரண்டு விலக்குகளை அளித்துள்ளது
  10. ஓப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா: 10x டெலிஃபோட்டோ கேமரா மற்றும் மேம்பட்ட ஸ்டெபிலைசேஷன் வசதி உறுதி
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »