‘3 பின்புற கேமரா..!’- இந்தியாவில் சியோமியின் அடுத்த அதிரடி

இந்த டீசரை வைத்து மட்டும் ஸ்திரமான ஒரு முடிவுக்கு வர முடியாது. மேலும் தகவல்களுக்காக நாம் பொறுத்திருக்க வேண்டும். 

‘3 பின்புற கேமரா..!’- இந்தியாவில் சியோமியின் அடுத்த அதிரடி

இந்தியாவுக்கு வெளியே சியோமி நிறுவனம் விற்பனை செய்து வரும் எம்ஐ 9 மற்றும் எம்ஐ 9 SE போன்களில் மூன்று பின்புற கேமரா வசதி இருக்கிறது

ஹைலைட்ஸ்
  • ஸ்னாப்டிராகன் 700 வகை கொண்ட போனை அறிமுகம் செய்ய உள்ளது சியோமி
  • 3 பின்புற கேமரா குறித்து டீசர் வெளியிட்டுள்ளது சியோமி
  • சீனாவில் ஒரு புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி
விளம்பரம்

சியோமி நிறுவனம், மூன்று பின்புற கேமராக்கள் கொண்ட மொபைல் போனை அடுத்ததாக இந்தியாவில் வெளியிட வாய்ப்புள்ளது. இது குறித்து சியோமி நிறுவனம், ஒரு வீடியோ டீசர் வெளியிட்டுள்ளது. அதை வைத்துப் பார்க்கும் போது சியோமி சார்பில், அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட உள்ள போனில் 3 பின்புற கேமரா கொண்ட மாடல் இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது. ஆனால், டீசரை வைத்து ஒரு முடிவுக்கு நம்மால் வர முடியவில்லை. அதே நேரத்தில் சியோமி இந்தியா நிறுவனத்தின் மனு குமார் ஜெயின், ‘குவால்கம் ஸ்னாப்டிராகன் 700 வகை கொண்டு அடுத்ததாக போன் வெளியிட உள்ளோம்' என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த இரண்டு வசதிகளையும் ஒரே போன் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. 

சியோமி சார்பில் வெளயிடப்பட்டுள்ள வீடியோவில், ஒரு கிரகத்தை, சிங்கிள் கேமரா, டூயல் கேமரா மற்றும் மூன்று கேமராக்கள் வட்டமிடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சியோமி, இந்தியாவில் ஏற்கெனவே சிங்கிள் மற்றும் டூயல் கேமரா வகைகளை கொண்ட போனை வெளியிட்டுவிட்டதால், அடுத்ததாக மூன்று கேமரா கொண்ட மாடலைத்தான் அறிமுகம் செய்யும் என்று யூகிக்க முடிகிறது. 

இந்தியாவுக்கு வெளியே சியோமி நிறுவனம் விற்பனை செய்து வரும் எம்ஐ 9 மற்றும் எம்ஐ 9 SE போன்களில் மூன்று பின்புற கேமரா வசதி இருக்கிறது. ஆனால், இந்த இரண்டு போன்களிலும் ஸ்னாப்டிராகன் 700 வகை ப்ராசஸர் இல்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்திய சந்தையில், ஒரு புது வித மொபைல் போனுக்காக சியோமி தயாராகி வருவது தெரிகிறது. 

இந்த டீசரை வைத்து மட்டும் ஸ்திரமான ஒரு முடிவுக்கு வர முடியாது. மேலும் தகவல்களுக்காக நாம் பொறுத்திருக்க வேண்டும். 

அதே நேரத்தில் சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி, சீனாவில் ஒரு புதிய போனை வெளியிட தயாராகி வருகிறது. அந்த போனில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஸ்னாப்டிராகன் 855 எஸ்.ஓ.சி ப்ராசஸர் உள்ளிட்ட வசதிகள் இருக்கும் எனப்படுகிறது. மே 13 ஆம் தேதி இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  2. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  3. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  4. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
  5. இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகம்
  6. எதிர்கால கேலக்ஸி போன்களில் வரவிருக்கும் சாம்சங்கின் புதிய 2D/3D டிஸ்ப்ளே தொழில்நுட்ப விவரங்கள்
  7. நீக்கப்பட்ட சாட்களின் அறிவிப்புகளைப் பெறும் பிழையைச் சரிசெய்து iOS 26.4.2 அப்டேட் வெளியிடப்பட்டது
  8. ஆண்ட்ராய்டு ஆப் பதிவுகளை விரைவுபடுத்த கூகுள் 'சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல்' அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது
  9. கூகுள் கிளவுட் நெக்ஸ்ட் 2026: புதிய ஜெமினி மற்றும் வொர்க்ஸ்பேஸ் இன்டலிஜென்ஸ் அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்தது
  10. ஒன்பிளஸ் நார்டு CE 6: 144Hz திரை, 50MP கேமரா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்தியா அறிமுகத்திற்கு முன் வெளியானது
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »