கொரோனா வைரஸ்: ஓப்போ, ரியல்மி, விவோ உற்பத்தி ஆலைகள் மூடல்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 25 மார்ச் 2020 11:50 IST
ஹைலைட்ஸ்
  • ஓப்போ, விவோ மற்றும் ரியல்மி ஆகியவை தங்கள் தொழிற்சாலைகளை மூடிவிட்டன
  • இந்த ஆலைகள் கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ளன
  • கிரேட்டர் நொய்டா தொழிற்சாலையில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன: ஓப்போ

நொய்டாவில் உள்ள டி.எம்.பியின் மொபைல் போன் பேட்டரி உற்பத்தி ஆலைக்குள் பகுதி நேர அடிப்பையில் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்

ஓப்போ, விவோ, ரியல்மி உள்ளிட்ட சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் உத்தரபிரதேச மாநில அரசின் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆலைகளை மூடுகின்றனர். இந்த ஆலைகள் உத்தரபிரதேசத்தின் புறநகரான கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ளன. இது ஒரு முழுமையான ஊரடங்கை அறிவிக்கும் கடைசி சில மாநிலங்களில் ஒன்றாகும்.

"எங்கள் கிரேட்டர் நொய்டா தொழிற்சாலையில் செயல்பாடுகள், அரசாங்கத்தின் உத்தரவின் படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, அனைத்து Oppo இந்தியா ஊழியர்களும் அடுத்த அறிவிப்பு வரும் வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்று ஓப்போ செய்தித் தொடர்பாளர் மேற்கோளிட்டுள்ளார்.

அறிக்கையின்படி, Vivo-வின் இந்தியா அலுவலகம் தனது 100 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.

"சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடு, விவோ வளாகத்தில் உள்ள அனைத்து நபர்களின் வெப்பத் திரையிடல், அத்துடன் செயல்பாடுகளில் உள்ள அணிகள் வீட்டிலிருந்து பணிகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன" என்று விவோ இந்தியா தெரிவித்துள்ளது.

கூடுதலாக, Realme அடுத்த அறிவிக்கும் வரை தொழிற்சாலைகளில் அதன் அனைத்து செயல்களையும் நிறுத்தியுள்ளது.

"ரியல்மி இந்தியா தனது உற்பத்தி நடவடிக்கைகளை உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் சனிக்கிழமை முதல் நிறுத்தி வைத்துள்ளது. இது தற்காலிகமாக எங்கள் சரக்கு மற்றும் சந்தையில் வழங்கலை சிறிது நேரம் பாதிக்கும் அதே வேளையில், எங்கள் பணியாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது" என்று ரியல்மி ஒரு அறிக்கையில் கூறியது.

இதற்கிடையில், ஷாவ்மி இந்தியாவின் துணைத் தலைவரும், Xiaomi இந்தியாவின் நிர்வாக இயக்குநருமான மன்குமார் ஜெயின், அதன் நிறுவன அலுவலகங்கள், கிடங்குகள், சேவை மையங்கள், எம்ஐ ஹோம் வசதிகள் மற்றும் தொழிற்சாலைகள் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றும் என்று கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றால், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 519 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 87 பேருடன் கேரளா முதலிடத்திலும், 86 பேருடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo, Vivo, Realme, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.