ரிலையன்ஸ் ஜியோமார்ட் ஆன்லைன் மளிகை சேவை இப்போது 200 நகரங்களில் கிடைக்கிறது!

ரிலையன்ஸ் கடந்த மாத இறுதியில் இந்திய நிதி தலைநகர் மும்பையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஜியோமார்ட் டெலிவரிகளின் சிறிய பைலட்டை அறிமுகப்படுத்தியது.

ரிலையன்ஸ் ஜியோமார்ட் ஆன்லைன் மளிகை சேவை இப்போது 200 நகரங்களில் கிடைக்கிறது!

ஜியோமார்ட் அருகிலுள்ள கடைகளில் இருந்து இலவச எக்ஸ்பிரஸ் மளிகை விநியோகத்தை வழங்குகிறது

ஹைலைட்ஸ்
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோமார்ட் சேவையை அறிமுகப்படுத்துகிறது
  • ஜியோமார்ட் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் மளிகை பொருட்களை வழங்குகிறது
  • முன்பு மகாராஷ்டிராவின் குறிப்பிட்ட இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது
விளம்பரம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் தனது புதிய ஆன்லைன் மளிகை சேவை தளமான ஜியோமார்ட்டை அறிமுகப்படுத்தியது. இது இப்போது இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது. அவர்களின் நடவடிக்கை அமேசான் மற்றும் இந்திய சந்தையில் பிளிப்கார்ட்டுடன் போட்டியிடும் என்று ஜியோமார்ட் கூறுகிறது. 

இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு மளிகை பொருட்களை வழங்க JioMart செயல்பட்டு வருவதாக ஜியோமார்ட் தலைமை நிர்வாக அதிகாரி தாமோதர் மால் ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.

கடந்த மாதம் ரிலையன்ஸ் தனது ஜியோமார்ட் விநியோக சேவையை ஒரு பைலட் தயாரிப்பாக இந்திய நிதி தலைநகர் மும்பையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அறிமுகப்படுத்தியது. இதற்கு சற்று முன்பு, ரிலையன்ஸ் ஜியோவின் டிஜிட்டல் யூனிட்டில் பேஸ்புக் 5.7 பில்லியன் செலவில் 9.99 சதவீத பங்குகளை வாங்கியது.

இந்த கூட்டாட்சியின் உதவியுடன், 400 மில்லியன் வலுவான பயனர் தளத்திற்கு Facebook மற்றும் வாட்ஸ்அப் மூலம் மளிகை மற்றும் சிறு வணிகர்களின் வசதியை Reliance வெளியிட முடிந்தது.

ஜியோமார்ட்டின் சேவைகளை விரும்பும் வாடிக்கையாளர்கள், 8850008000 என்ற ஜியோமார்ட்டின் WhatsApp எண்ணை தங்கள் போன் தொடர்புகளில் சேமிக்க வேண்டும். இங்கே வாடிக்கையாளர்கள் ஜியோமார்ட்டிலிருந்து ஆர்டர் செய்ய ஒரு இணைப்பைப் பெறுகிறார்கள். ஆர்டர் வழங்கப்பட்டதும், நிறுவனம் அதை வாட்ஸ்அப்பில் ஒரு மளிகைக் கடையுடன் பகிர்ந்து கொள்கிறது.

ஜியோமார்ட்டின் வலைத்தளத்தின்படி, இதன் பின்னர், வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர்கள் பற்றிய அறிவிப்பும், கடையின் விரிவான விளக்கமும் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த வசதியின் கீழ் டோர் டெலிவரி செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆர்டரை வழங்கிய பிறகு, இந்த ஆர்டரை உங்கள் அருகிலுள்ள மளிகைக் கடையிலிருந்து கிடைக்கச் செய்யலாம்.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த அம்சம் கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்கு வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வாங்கும் பொருட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அவர்களின் பொருட்கள் தயாராக இருக்கும்போது, ​​அதை அவர்கள் அருகிலுள்ள மளிகைக் கடைக்குக் கொடுப்பார்கள்.

© Thomson Reuters 2020

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. இந்த ஆண்டின் இறுதியில் கேலக்ஸி S26 சீரிஸில் ஏர் டிராப் (AirDrop) வசதியை அறிமுகம் செய்ய சாம்சங் திட்டம்
  2. விவோ Y21 5G மற்றும் விவோ Y11 5G: சர்வதேச அறிமுகத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு இந்திய விலை மற்றும் நிறங்கள் குறித்த தகவல்
  3. அலெக்சா மற்றும் AI அம்சங்களுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை அமேசான் உருவாக்கி வருகிறது
  4. Mad For Each Other இப்போது ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் ஆகிறது: தளம், நடிகர்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள்
  5. கேலக்ஸி S26 சீரிஸ் அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ராவின் விலை குறைந்துள்ளது
  6. ரியல்மி 16 5G விரைவில் இந்தியாவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  7. போட் வேலர் வாட்ச் 1R இந்தியாவில் அறிமுகம்: 1.43-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 10 நாட்கள் வரை பேட்டரி லைஃப்!
  8. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 'மெட்டா AI சப்போர்ட் அசிஸ்டண்ட்' அறிமுகம்: கணக்கு மற்றும் கண்டன்ட் சிக்கல்களுக்கு உடனடி தீர்வு!
  9. ஷியோமி வாட்ச் S5 அறிமுகம்: 1.48-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 21 நாட்கள் வரை பேட்டரி லைஃப்!
  10. ஷியோமி புக் ப்ரோ 14 அறிமுகம்: இன்டெல் கோர் அல்ட்ரா X7 358H ப்ராசஸர் மற்றும் 72Wh பேட்டரி வசதிகளுடன்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »