க்ரிப்டோகரன்சியில் கைவைத்த ஹேக்கர்கள் - 214 கோடி ரூபாய் சைபர் திருட்டு

கடந்த ஒரு வார காலத்திற்குள்ளாக இரண்டு கொரிய பிட்காயின் வர்த்தக நிறுவனங்கள் இதுபோன்ற சைபர் குற்றவாளிகளின் இணைய தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன

க்ரிப்டோகரன்சியில் கைவைத்த ஹேக்கர்கள் - 214 கோடி ரூபாய் சைபர் திருட்டு
ஹைலைட்ஸ்
  • 35 பில்லியன் யான் (கொரிய நாணயம்) மதிப்புள்ள விர்ஷுவல் நாணயங்கள் திருடப்பட
  • ஒரு வார காலத்திற்குள்ளாக ஹேக்கர்களின் இரண்டாவது தாக்குதல் இது
  • பிட்தம்ப் நிறுவனம் அனைத்து விதமான வர்த்தகத்தையும் நிறுத்தியுள்ளது
விளம்பரம்

தென்கொரியவின் க்ரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான பிட்தம்பின், 35 பில்லியன் யான் (சுமார் 214 கோடி ரூபாய்) மதிப்புள்ள விர்ச்சுவல் காயின்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலத்திற்குள்ளாக இரண்டு கொரிய பிட்காயின் வர்த்தக நிறுவனங்கள் இதுபோன்ற சைபர் குற்றவாளிகளின் இணைய தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.

பிட்தம்ப் நிறுவனம் அதனுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 35 பில்லியன் யான் மதிப்புள்ள க்ரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்ததை அடுத்து நிறுவனத்தின் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகின் ஆறாவது பிஸியான பரிமாற்ற நிறுவனமாக அறியப்படுகிறது பிட்தம்ப், அந்நிறுவனம் “ வாடிக்கையாளர்களின் தகவல்கள் அனைத்தும் சேஃப் கோல்ட் வால்ட் எனும் இணையத்துடன் நேரடியான தொடர்பில்லாத தளத்தில் சேமித்து வைத்துள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு முழுமையான இழப்பீடை வழங்குவோம்” எனத் தெரிவித்துள்ளது.

இது போன்ற சம்பவங்கள் சர்வதேச க்ரிப்டோகரன்சி சந்தையில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும், வலுவில்லாத ஒழுங்குமுறைகளையும் சுட்டிக் காட்டி எச்சரிக்கிறது. பல சர்வதேச கொள்கை வகுப்பாளர்களும் கூட முறையான ஒழுங்குமுறை இல்லாத இந்த டிஜிட்டல் நாணய வர்த்தகத்தில் கவனத்துடன் இருக்குமாறு முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளனர்.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் தொடர்பு கொண்டபோது பிட்தம்ப் உடனடியாக எந்த கருத்தும் கூறவில்லை

லக்ஸம்பர்க்கைச் சார்ந்த பிட்ஸ்மேப் நிறுவனத்தில் கடைசியாக பிட்காயின் வர்த்தகம் $6590.00 டாலராக (சுமார் ரூ 4.49 லட்சங்கள்) இருந்தது. இந்த வர்த்தகம், கடந்த வாரங்களில் பல்வேறு க்ரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் சந்தித்த இடையூறுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதையடுத்து பெரும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த டிசம்பர் 2017-ன் மத்தியில் உச்சத்தில் இருந்த பிட்காயின் வர்த்தகத்தின் மதிப்பிலிருந்து தற்போது 70% வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஜீன் 11 அன்று மற்றுமொரு தென்கொரிய க்ரிப்டோகரன்சி நிறுவனமான காயின்ரெயிலும் ஹேக் செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் காயின்செக் எனும் ஜப்பான் வர்த்தக நிறுவனமத்தில் அரை பில்லியன் டாலர் மதிப்பிலான டிஜிட்டல் கரன்சி திருடப்பட்டதையடுத்து இதுபோன்ற இணையவழி தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. Amazon Sale 2025 வருது! சோனி, சாம்சங், சியோமி ஸ்மார்ட் டிவிகளுக்கு பம்பர் ஆபர்! புது டிவி வாங்க இதை மிஸ் பண்ணாதீங்க
  2. மோட்டோ ரசிகர்களே! புது போன் வருது! மோட்டோ G36 ஸ்மார்ட்போன் TENAA தளத்தில் லீக் ஆகியிருக்கு
  3. போக்கோ ஃபேன்ஸ் ரெடியா? புது போன் வாங்க சரியான நேரம் வந்தாச்சு! Flipkart Big Billion Day செம ஆஃபர்
  4. ஸ்மார்ட் ஹோம் பிளான் பண்றீங்களா? Amazon Great Indian Festival Sale 2025 எக்கோ சாதனங்களுக்கு ஏகப்பட்ட ஆஃபர் இருக்கு! பாருங்க
  5. ஐஓஎஸ் 26 அப்டேட் வந்தாச்சு! "லிக்விட் கிளாஸ்" டிசைன் முதல் அட்டகாசமான ஏஐ அம்சங்கள் வரை - என்னவெல்லாம் புதுசா இருக்கு
  6. ஒப்போ ஃபேன்ஸ் ரெடியா? புது Oppo F31 Pro+ 5G சீரிஸ்ல மூணு மாடல் வந்திருக்கு! பேட்டரி, கேமரான்னு வெறித்தனமான அம்சங்கள்
  7. பிக் பில்லியன் டேஸ் வருது! ரூ. 79,999 மதிப்புள்ள Nothing Phone 3 வெறும் ரூ. 34,999-க்கு கிடைக்குமா
  8. பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் போன்! Realme P3 Lite 5G இந்தியாவில் லான்ச்! விலை என்னன்னு தெரியுமா?
  9. iQOO 15 வெளிவந்தாச்சு! அதிரடியான லுக் மற்றும் கேமரா லீக்! புது போன் வாங்க காத்திருந்தவங்களுக்கு ஒரு நல்ல செய்தி!
  10. பட்ஜெட் விலையில் பக்கா போன்! Poco M7 Plus 5G புதிய மாடல் வந்தாச்சு! பிக் பில்லியன் டேஸ்ல ரூ. 11,000-க்குள்ள வாங்கலாம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »