இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி, சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்தில் இந்த `டெமோ டே' நத்தப்பட உள்ளது
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மட்டுமே இதுவரை `டெமோ டே'-வை நடத்தி வந்த கூகுள் நிறுவனம் முதன்முறையாக, ஆசியாவில் கால் பதிக்கப் போகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி, சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்தில் இந்த `டெமோ டே' நத்தப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை கடந்த திங்கள் கிழமை கூகுள் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கூகுள் இந்த `டெமோ டே'-வை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் முதலீடு செய்ய தகுதி கொண்ட ஸ்டார்ட்-அப்ஸ்-களை கூகுள் கண்டறியும். மேலும், உலக அளவில் ஸ்டார்ட்-அப்ஸ்-களை விரிவாக்கம் செய்யவும் இந்த நிகழ்ச்சியின் மூலம் முடியும்.
இது குறித்து கூகுள் நிறுவனம், `எங்கள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இந்த வருடத்தின் ஆரம்பித்தில் சொன்னது போல, இது தான் ஆசிய கண்டத்தில் நாங்கள் முதன் முதலாக ஒருங்கிணைக்கும் `டெமோ டே'. இதன் மூலம், இந்தப் பகுதியில் இருக்கும் புத்தம் புது ஐடியாக்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம்' என்று கூறினார்.
மேலும், `இந்த டெமோ டே-வின் மூலம் ஆசிய கண்டத்தில் ஸ்டார்ட்-அப்ஸ், சர்வதேச அளவில் அவர்களின் கண்டுபிடிப்பை எடுத்துச் செல்ல முடியும். மேலும், உலகளாவிய முதலீட்டாளர்களையும் கவர முடியும்' என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த டெமோ டே-வில் பங்கேற்க, ஒரு ஸ்டார்ட்-அப் சட்டபூர்வமாக பதிய செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆசியாவில் அதன் தலைமையிடம் கட்டாயம் இருக்க வேண்டும். இதுவரை 34 லட்சம் வருவாய் ஈட்டியிருக்க வேண்டும். ஜூலை 1 ஆம் தேதியே இதற்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Axis Bank Introduces Aadhaar Face Authentication: How to Update Your Axis Bank Mobile Number
Meghalaya Government Signs MoU With Starlink to Boost Connectivity in Region and Reduce Digital Divide
Samsung Galaxy A27 5G Visits Geekbench With Older Snapdragon 6 Gen 3 Chip, 6GB RAM