கிரிப்டோகரன்சிக்கு தடை: பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை!

10 வருட சிறை தண்டனை மட்டுமின்றி இந்த கிரிப்டோகரன்சியை வைத்திருப்பது விடுவிப்பு அல்லாத குற்றம்.

கிரிப்டோகரன்சிக்கு தடை: பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை!

தடை செய்யப்படவுள்ள கிரிப்டோகரன்சிகள்

ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு தடை, பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை
  • இது விடுவிப்பு அல்லாத குற்றம் எனவும் கூறப்பட்டுள்ளது
  • இந்தியா தனக்கென பிரத்யேகமாக டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப்படுத்தலாம்
விளம்பரம்

பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிக்களை வைத்திருப்பவர்களுக்கு, விற்பவர்களுக்கு அல்லது அதனை கையாலுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை என்ற புதிய சட்டம் விரைவில் வரவுள்ளது. 'கிரிப்டோகரன்சிக்கு தடை மற்றும் டிஜிட்டல் நாணயங்களை பயன்படுத்துவதை ஒழுங்குமறை படுத்தும் திட்டம் 2019'-ன் வரைவு, கிரிப்டோகரன்சியை வத்திருப்பது, உருவாக்குவது, பிடித்துவைப்பது, விற்பது, பரிவர்த்தனை செய்வது மற்றும் இதனை ஏதேனும் முறையில் கையாளும் நபருக்கு 10 வருடங்கள் தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற ஒரு வரைவை தாக்கல் செய்துள்ளது. 

10 வருட சிறை தண்டனை மட்டுமின்றி இந்த கிரிப்டோகரன்சியை வைத்திருப்பது விடுவிப்பு அல்லாத குற்றம் எனவும் வகைப்படுத்தியுள்ளது இந்த வரைவு. 

கிர்ப்டோகரன்சி என்பது கிரிப்டோஜிராபியை பாதுகாப்பிற்காக பயன்படுத்தி இயங்கும் ஒரு டிஜிட்டல் நாணயம். இது பிளாக் செய்ன் (BlockChain) என்ற தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இந்த டிஜிட்டல் நாணயங்கள் மூலம் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை அதிகரிக்கிறது என்பதால், அதை தடுக்க இந்த புதிய வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கிரிப்டோகரன்சிக்கு தடைவிதிக்கும் இந்த வரைவுத்திட்டம், பொருளாதார விவகார செயலாளரான சுபாஸ் சந்திர கார்க், அவரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

கிரிப்டோகரன்சிக்கு இவ்வளவு கடுமையாக தண்டனைகள் வித்தித்து தடை விதிக்கப்படவுள்ள நிலையில், இந்தியா தனக்கென ஒரு டிஜிட்டல் நாணயத்தை உருவாக்கி அறிமுகப்படுத்த இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து பேசுகையில்,"இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்த பிறகே, டிஜிட்டல் நாணயம் பற்றிய முடிவுகளை எடுக்க முடியும்.", என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. பொறியியல் சவால்கள் இருந்தபோதிலும் ஐபோன் 18 புரோ மாடல்களுடன் ஐபோன் ஃபோல்டு விற்பனையும் தொடங்கவுள்ளது
  2. புதிய மாடல் வரும் முன் அமெரிக்காவில் சாம்சங் கேலக்ஸி Z போல்ட் 7 விலை உயர்வு
  3. ஓப்போ F33 5G, ஓப்போ F33 ப்ரோ 5G ரவுண்டப்: அறிமுக தேதி, வடிவமைப்பு, வண்ண விருப்பங்கள், விவரக்குறிப்புகள்
  4. விவோ T5 ப்ரோ 5G ரவுண்டப்: இந்தியாவில் வெளியீட்டு தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. ஹூவாய் புரா 90 புரோ மற்றும் புரோ மேக்ஸ் போன்களின் வடிவமைப்பு, நிறம் மற்றும் சேமிப்பு விவரங்கள் உறுதியானது
  6. இன்ஸ்டாகிராமில் கருத்துகளை (Comments) எடிட் செய்யும் வசதி: 15 நிமிட கால அவகாசம் அறிமுகம்
  7. மார்ச் 2026 இந்திய போன் அறிமுகங்கள்: சியோமி 17 அல்ட்ரா, போகோ X8 ப்ரோ சீரிஸ், மோட்டோரோலா எட்ஜ் 70 மற்றும் பல
  8. கிளாட் மைத்தோஸ் விளக்கம்: ஆந்த்ரோபிக்கின் சைபர் செக்யூரிட்டி AI மாடல் பற்றி நீங்கள் அறிய வேண்டிய அனைத்தும்
  9. ஐபோன் 18 ப்ரோ: சிறிய டைனமிக் ஐலேண்ட் வசதியுடன் பல புதிய வடிவமைப்புகளை ஆப்பிள் நிறுவனம் சோதித்து வருகிறது
  10. சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு: போல்ட் 8 அறிமுக விவரங்கள் கசிவு; தேதி மற்றும் இடத்தை இங்கே காணுங்கள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »