'இந்தியன் ஏர் ஃபோர்ஸ்' மொபைல் விளையாட்டு, அபிநந்தன் பாத்திரத்துடன் டெல்லியில் அறிமுகம்!

இந்த விளையாட்டில் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தாமனை போன்று ஒரு துப்பாக்கி ஏந்திய மீசையுடன் கூடிய ஒரு பாத்திரம் இடம்பெற்றுள்ளது.

'இந்தியன் ஏர் ஃபோர்ஸ்' மொபைல் விளையாட்டு, அபிநந்தன் பாத்திரத்துடன் டெல்லியில் அறிமுகம்!

Photo Credit: YouTube/ Indian Air Force

ஹைலைட்ஸ்
  • மார்ஷல் பி.எஸ்.தனோவா இந்த விளையாட்டை அறிமுகம் செய்தார்
  • அபிநந்தனை போன்ற ஒரு பாத்திரம் இடம்பெற்றுள்ளது
  • ஜூலை 20 அன்று, ஐ.ஏ.எஃப் விளையாட்டின் டீஸர் வெளியிடப்பட்டது
விளம்பரம்

இந்திய விமானப்படை குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், படைகளில் சேர அவர்களை ஊக்குவிப்பதற்கும், விமானப்படைத் தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா (Marshal BS Dhanoa), கடந்த புதன்கிழமை போர் அடிப்படையிலான 'இந்தியன் ஏர் ஃபோர்ஸ்' ('Indian Air Force: A cut above') மொபைல் விளையாட்டை புதுடில்லியில் தொடங்கிவைத்தார்.

முன்னதாக ஜூலை 20 அன்று, ஐ.ஏ.எஃப் விளையாட்டின் டீஸர் வெளியிடப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட டீஸர், இந்த விளையாட்டு ஒற்றை வீரர் விளையாடக்கூடிய விளையாட்டு மற்றும் பல போர் விமானங்களுடன் வான்வழிப் போர், வெவ்வேறு நிலக் கட்டமைப்புகள் ஆகியவற்றை காட்டியது.

"நான் ஒரு விமான வீரன், பெருமைமிக்க, நம்பகமான மற்றும் அச்சமற்றவன். ஒவ்வொரு செயலிலும், எனது தாய்நாட்டின் மரியாதையையும் பாதுகாப்பையும் முதன்மையில் வைக்கிறேன்," என்ற அந்த டீஸர் இந்த விளையாட்டிற்கான கதைக்களத்தை கூறியுள்ளது.

இந்த விளையாட்டில் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தாமனை போன்று ஒரு துப்பாக்கி ஏந்திய மீசையுடன் கூடிய ஒரு பாத்திரம் இடம்பெற்றுள்ளது. அவர் பாலாகோட் வான்வழித் தாக்குதலின் போது நடைபெற்ற சண்டையில் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சிறைபிடிக்கப்பட்டு பின்னர் பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டார்.

பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தானுடனான வான்வழி மோதலின் போது தனது விண்டேஜ் மிக் -21 பைசன் விமானத்திலிருந்து எஃப் -16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் ஒரே விமானி என்ற தனித்துவமான பெருமையை இந்த விங் கமாண்டர் பெற்றுள்ளார்.

பாக்கிஸ்தானிய ஜெட் விமானங்களுடனான போரின் போது அவரது மிக் 21 பைசன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு கீழே சென்றபின் பிப்ரவரி 27 அன்று அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் சிறைபிடித்தனர். அவரது பாராசூட் சறுக்கி பாக்கிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் உள்ளே விழுந்தபோது பாகிஸ்தான் ராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. AI பட உருவாக்கத்திற்கு பொது இன்ஸ்டா கணக்குகளைப் பயன்படுத்தும் மெட்டாவின் மியூஸ் இமேஜ்!
  2. நாய்ஸ் ஆர்இபி பேண்ட் இந்தியாவில் அறிமுகம்: ஸ்கிரீன் இல்லாத வடிவமைப்பு மற்றும் 10 நாள் பேட்டரி ஆயுள்!
  3. இந்தியாவில் ஜூலை 15-ல் அறிமுகமாகும் ரியல்மி நார்சோ 100x 5ஜி: 8000mAh பேட்டரி!
  4. 1,000 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களுடன் ரூ. 55 ஜியோடிவி ப்ரோ பேக்கை இந்தியாவில் ஜியோ அறிமுகப்படுத்தியது
  5. TRAI கொள்கையை விமர்சித்த ட்ரூகாலர் சிஇஓ: சரிபார்க்கப்பட்ட ஸ்பேமை பயனர்கள் பெருமளவில் தடுக்கின்றனர்!
  6. கியூபோ டேஷ்கேம் ப்ரோ 2கே முன் மற்றும் பின் கேமராக்களுடன் இந்தியாவில் அறிமுகம்
  7. இந்தியாவில் ஏழு சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு: டிப்ஸ்டர் தகவல்
  8. விவோ எக்ஸ் ஃபோல்டு 6 இந்தியாவின் அறிமுகம் வழக்கத்தை விட தாமதமாகலாம், விலை விவரம் கசிந்தது
  9. மோட்டோ G77 பவர் இந்தியாவில் அறிமுகம்: 7,000mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  10. நத்திங் போன் (4b) vs சாம்சங் கேலக்ஸி A37 5G vs ரில்மி 16: இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »