கொரோனா வைரஸ்: டெலிவரி செய்ய முடியாமல் திண்டாடி வரும் ஜொமாடோ, ஸ்விக்கி!

ஒரு ட்வீட்டில், ஜொமாடோ தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல் (Deepinder Goyal), குழப்பத்தை நீக்குவதற்கு, நிறுவனம் அதிகாரிகளுடன் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், இதனால் அத்தியாவசிய சேவைகள் சிரமமின்றி செயல்பட முடியும் என்றும் கூறினார்.

கொரோனா வைரஸ்: டெலிவரி செய்ய முடியாமல் திண்டாடி வரும் ஜொமாடோ, ஸ்விக்கி!
ஹைலைட்ஸ்
  • கிளவுட் சமையலறைகள் உள்ளிட்ட உணவகங்கள் சேவையிலிருந்து வெளியேறின
  • டெலிவரி நபர்களை உள்ளூர் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்
  • குழப்பத்தைத் தீர்க்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறோம் - ஜொமாடோ
விளம்பரம்

ஸ்மார்ட்போன் அடிப்படையிலான முன்னணி உணவு விநியோக தளங்களான ஜொமாடோ மற்றும் ஸ்விக்கி புதன்கிழமையன்று, டிஜிட்டல் இந்தியாவில் தனது மிகப்பெரிய சவாலைக் கண்டது, கிளவுட் சமையலறைகள் உள்ளிட்ட உணவகங்கள் சேவையிலிருந்து வெளியேறியது மற்றும் 21 நாள் ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததால் உள்ளூர் அதிகாரிகள் டெலிவரி நபர்களை திரும்பி அனுப்பினர் .

உணவகங்கள் 'சேவை செய்ய முடியாதவை' என்பதால் மில்லியன் கணக்கான உணவு ஆர்வலர்கள் ஆர்டர் செய்ய எதுவும் இல்லை. உணவு விற்பனை நிலையங்கள் சில திறந்த நிலையில், டெலிவரி நபர்களை உள்ளூர் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

"எங்கள் விநியோக கூட்டாளிகள் நகரங்களில் பல தடைகளை எதிர்கொள்கின்றனர், இது ஒரு அத்தியாவசிய சேவையாக உணவை வழங்க முயற்சிக்கிறோம். நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வருகிறோம், இந்த சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்" என்று Zomato செய்தித் தொடர்பாளர் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்தார்.

ஒரு ட்வீட்டில், ஜொமாடோ தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல் (Deepinder Goyal), குழப்பத்தை நீக்குவதற்கு, நிறுவனம் அதிகாரிகளுடன் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், இதனால் அத்தியாவசிய சேவைகள் சிரமமின்றி செயல்பட முடியும் என்றும் கூறினார்.

எண்ணிக்கைகளில் குறுகிய கால தாக்கம் ஏற்பட்டுள்ளதாக Swiggy கூறியது, இது மால்களில் அமைந்துள்ள பல உயர்-அளவிலான உணவகங்களை தற்காலிகமாக மூடியதாலும், சில மாநிலங்களில் இடையூறு ஏற்படுவதாலும், விநியோகம் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம்.

"இருப்பினும், இந்த சோதனை காலங்களில், குறிப்பாக தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு செயல்படுவதற்கும், எங்கள் ஆதரவை வழங்குவதற்கும் ஸ்விக்கி உள்ளூர் அரசுடன் இணைந்து செயல்படுகிறார்" என்று ஒரு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

உணவு விநியோகம் தேவைப்படுபவர்களுக்கு குறைக்கப்பட்ட கூட்டாளர் நெட்வொர்க்குடன் (உணவகங்கள் மற்றும் விநியோகம்) தொடர்ந்து செயல்படும் என்றும் ஜொமாடோ கூறியது.

இரு நிறுவனமும் "தொடர்பு இல்லாத" "விநியோக ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளனர், அங்கு விநியோக நபர்கள் சமூக விலகியிருத்தலை உறுதி செய்கிறார்கள்.

ஜொமாடோ மற்றும் ஸ்விக்கி தற்போது இந்தியாவில் ஆன்லைன் உணவு விநியோக சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஜொமாடோ, இந்தியாவில் Uber-ன் உணவு விநியோக வணிகத்தை கிட்டத்தட்ட 350 மில்லியன் டாலர் கொடுத்து அனைத்து பங்கு ஒப்பந்தங்களையும் வாங்கியுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஐபோன் 18 சீரிஸ் விலை உயர்வு முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும்!
  2. சாம்சங் கேலக்ஸி A27 5G அறிமுகம்: ஸ்னாப்டிராகன் சிப், 6.7-இன்ச் திரை மற்றும் சலுகைகள்!
  3. ஆப்பிள் விலை உயர்வு: மேக், ஐபேட் விலை அதிகரிப்பு, ஐபோன்களுக்கு விலக்கு
  4. Oppo Reno 16 முதல் பார்வைகள் (First Impressions)
  5. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் அறிமுகம்: 52dB ANC மற்றும் 54 மணிநேர பேட்டரி லைஃப்
  6. லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 5,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  7. வாட்ஸ்அப் நிறுவனம் தெரியாத எண்களிலிருந்து வரும் அரட்டைகள் (Chats) குறித்து பயனர்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது
  8. அமேசான் இந்தியாவின் விரைவு வர்த்தகம் 300 நகரங்களுக்கு விரிவாக்கம்; பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டம் அறிமுகம்!
  9. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
  10. ஜூன் 29 இந்திய அறிமுகத்தை உறுதி செய்தது சாம்சங் கேலக்ஸி M47 5G; முக்கிய அம்சங்கள் கசிவு!
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »