கொரோனா வைரஸ் எதிரொலி: சியாட்டில் அலுவலகத்தை மூடியது ட்விட்டர்! 

பேஸ்புக் தனது சியாட்டில் அலுவலகத்தை மார்ச் 9 ஆம் தேதி வரை மூடியுள்ளது, அதன் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஒரு ஒப்பந்தக்காரர் கோவிட்-19-க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டார்.

கொரோனா வைரஸ் எதிரொலி: சியாட்டில் அலுவலகத்தை மூடியது ட்விட்டர்! 

இன்றுவரை வாஷிங்டன் மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக குறைந்தது 15 பேர் இறந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்
  • ட்விட்டர் தனது சியாட்டில் அலுவலகத்தை 'தூய்மைக்காக' மூடியுள்ளது
  • ஊழியர் ஒருவருக்கு COVID-19 அறிகுறி கண்டறியப்பட்டது
  • பேஸ்புக் தனது சியாட்டில் அலுவலகத்தை மார்ச் 9 வரை மூடியுள்ளது
விளம்பரம்

ஊழியர் ஒருவருக்கு COVID-19 போன்ற அறிகுறிகளைக் கண்ட பின்னர் ட்விட்டர் தனது சியாட்டில் அலுவலகத்தை மூடியுள்ளது.

"சியாட்டிலை தளமாகக் கொண்ட ஒரு ஊழியர் தங்களது மருத்துவரால் COVID-19 இருக்கக்கூடும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார், இன்னும் இறுதி சோதனைக்குக் காத்திருக்கிறார்" என்று Twitter வெள்ளிக்கிழமை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

"ஊழியர் பல வாரங்களாக ட்விட்டர் அலுவலகத்தில் இல்லை மற்றும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றாலும், நாங்கள் எங்கள் சியாட்டில் அலுவலகத்தைச் சுத்தம் செய்கிறோம்" என்று நிறுவனம் மேலும் கூறியது.

தி சியாட்டில் டைம்ஸ் கருத்துப்படி, வாஷிங்டன் மாநிலத்தில் இன்றுவரை கொரோனா வைரஸ் காரணமாகக் குறைந்தது 15 பேர் இறந்துள்ளனர்.

பேஸ்புக் தனது சியாட்டில் அலுவலகத்தை மார்ச் 9-ஆம் தேதி வரை மூடியுள்ளது, அதன் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஒரு ஒப்பந்தக்காரர் COVID-19​-க்கு சாதகமாகச் சோதனை செய்யப்பட்டார்.

Amazon, Microsoft, Google மற்றும் Facebook ஆகியவை வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளன.

"எங்கள் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளோம், பொருத்தமான பொதுச் சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளோம் மற்றும் அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் சரியான முறையில் ஒருங்கிணைத்து வருகிறோம். எங்கள் குழு உறுப்பினரின் அடையாளம் அல்லது மருத்துவ நிலை குறித்து அவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள மாட்டோம்" என்று ட்விட்டர் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
  2. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் விமர்சனம்: கிட்டத்தட்ட ‘ப்ரோ’ தரத்திலான ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்
  3. சியோமி ஸ்மார்ட் பேண்ட் 10 ப்ரோ அறிமுகம்: 1.74-இன்ச் AMOLED திரை, 21 நாட்கள் பேட்டரி ஆயுள்
  4. ஒப்போ ஃபைண்ட் X9s, விவோ X300 FE, ஒன்பிளஸ் 15: இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  5. புதிய அடோப் மற்றும் கான்வா கனெக்டர்கள் மூலம் ஏஜென்டிக் வடிவமைப்பு உருவாக்கத்தை வழங்குகிறது கூகுளின் ஜெமினி
  6. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் விவோ X300 அல்ட்ரா: இதில் எது சிறந்தது?
  7. ஒப்போ ரெனோ 16 ,ரெனோ 16 கேமரா விவரம் டீஸ் செய்யப்பட்டது; இந்திய அறிமுக காலம் ஆன்லைனில் வெளியானது
  8. விவோ S தொடர் S2 மூலம் மீண்டும் இந்தியாவிற்கு: அறிமுக காலம், விலை விவரம் கசிந்தது
  9. HMD வைப் 2 5G இந்தியாவில் அறிமுகம்: 6,000mAh பேட்டரி, 128GB வரை சேமிப்பகம்: விலை, விவரக்குறிப்புகள்
  10. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »