இந்திய அரசின் Sanchar Saathi செயலி முன்கூட்டியே நிறுவப்படும் உத்தரவை Apple எதிர்க்கிறது. பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த முக்கியமான தகவல்
Photo Credit: Apple
தனியுரிமை, பாதுகாப்பு, கட்டாய நிறுவல், எதிர்ப்பு, விவாதம், தொழில்நுட்ப சிக்கல்கள், சட்டம்
இப்போ டெக் உலகத்துல ஒரு செம்ம ஹாட் நியூஸ்! நம்ம Apple கம்பெனி, மத்திய அரசு போட்ட ஒரு உத்தரவுக்கு கறாரா எதிர்ப்புத் தெரிவிச்சிருக்காங்க! என்ன விஷயம்னு பார்த்தா, அதுதான் Sanchar Saathi செயலி!மத்திய அரசு என்ன சொல்லிருக்காங்கன்னா, இந்தியாவில் விற்பனைக்கு வரும் எல்லா புது ஸ்மார்ட்போன்களிலும் (அது ஆண்ட்ராய்டா இருந்தாலும் சரி, ஐபோனா இருந்தாலும் சரி), Sanchar Saathi அப்படிங்கிற செயலியை ப்ரீலோட் (Pre-load) செய்யணும்னு கம்பெனிகளுக்கு ஒரு உத்தரவை போட்டாங்க. இந்த Sanchar Saathi செயலி எதுக்குன்னா, தொலைஞ்சு போன அல்லது திருடு போன போன்களைக் கண்டுபிடிக்கிறது, போலியான IMEI நம்பர்களை செக் பண்றது, மொபைல் மூலமா நடக்குற மோசடிகளை (Scams) தடுக்கிறதுன்னு பல முக்கியமான பாதுகாப்பு அம்சங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு ஆப் தான் இது.
ஆனா, இந்த உத்தரவை நம்ம Apple கம்பெனி எதிர்க்கிறாங்க! அதுக்கு என்ன காரணம்?
Apple எப்பவுமே தன்னோட பயனர்களின் பிரைவசிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கும். அரசாங்கத்தோட ஒரு ஆப்பை, பயனர்களின் சம்மதம் இல்லாம ப்ரீலோட் பண்றது, பயனர்களின் தனியுரிமைக் கொள்கைக்கு எதிரானதுன்னு Apple நம்புறாங்க.
Apple-ஐப் பொறுத்தவரைக்கும், iOS-ல அவங்களுடைய சொந்த ஆப்ஸ்கள் மட்டும்தான் இருக்கணும். வேற எந்த தேர்ட்-பார்ட்டி ஆப்ஸையும் கட்டாயமா திணிக்கிறதை அவங்க விரும்பல. இது ஐபோனோட யூஸர் அனுபவத்தை (User Experience) கெடுக்கும்னு அவங்க நினைக்கிறாங்க.
அரசு சொல்ற மாதிரி, ஆப்பை ப்ரீலோட் பண்றதுக்கு பதிலா, பயனர்கள் தேவைப்பட்டா, App Store-ல இருந்து டவுன்லோட் பண்ணிக்கிறதுக்கு வழி கொடுக்கலாம்னு Apple பரிந்துரைக்கிறாங்க. இதுதான் அவங்களுடைய ஸ்டாண்டர்ட் பாலிசி.
இந்த விவகாரம் பெருசானதால, மத்திய அரசு, சரி, இந்த ஆப்பை வேணும்னா பயனர்கள் டெலிட் (Uninstall) பண்ணிக்கிறதுக்கு ஆப்ஷன் கொடுக்கலாம்னு சொன்னாங்க. ஆனா, Apple-ஓட எதிர்ப்பு அதையும் தாண்டி இருக்கு. அவங்களுடைய நோக்கம், எந்த கட்டாயமான ஆப்பையும் போன்ல ஆரம்பத்திலேயே வைக்கக்கூடாதுங்கிறதுதான்.
Apple உலகம் முழுக்க ஒரே மாதிரி இயங்குற ஒரு கம்பெனி. இந்தியாவுக்காக ஒரு விதிமுறையை மாத்துனா, நாளைக்கு வேற நாடும் அதே மாதிரி கேட்கும்னு Apple பயப்படுறாங்க. அதனால அவங்களுடைய குளோபல் ஸ்டாண்டர்ட் பாலிசியை மாற்ற இப்போதைக்கு தயாரா இல்லை.
இந்த Sanchar Saathi செயலியோட நோக்கம் நல்லதா இருந்தாலும், Apple-ஓட இந்த எதிர்ப்பு, பயனர்களின் தனியுரிமை மற்றும் டெக் நிறுவனங்களின் சுதந்திரம் பத்தின பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கு. உங்க புது போன்ல அரசாங்கத்தோட ஆப் ப்ரீலோடா இருக்கணுமா? உங்க கமெண்ட்ஸ் என்னன்னு சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Supermoon and Geminid Meteor Shower 2025 Set to Peak Soon: How to See It
Flipkart Buy Buy 2025 Sale Date Announced; Discounts on iPhone 16, Samsung Galaxy S24, and More Expected