அதிரிபுதிரி அப்டேட்களுடன் வருகிறது Snapchat செயலி

நண்பர்களுடன் இருப்பிடத்தைப் பகிர்தல் மற்றும் இயங்குதளத்தின் தடுப்பு செயல்பாடு தொடர்பான பாதுகாப்பு அமைப்புகளை Snapchat மேம்படுத்தியுள்ளது.

அதிரிபுதிரி அப்டேட்களுடன் வருகிறது Snapchat செயலி

Photo Credit: Gadgets 360

ஹைலைட்ஸ்
  • பாதுகாப்பு அமைப்புகளை Snapchat மேம்படுத்தியுள்ளது
  • நண்பர்களுடன் இருப்பிடத்தைப் பகிர்தல் வசதி உள்ளது
  • பரஸ்பர நண்பர்கள் இல்லாத பயனர்கள் பதின்ம வயதினருக்கு கோரிக்கைகளை அனுப்ப மு
விளம்பரம்

பிரபல சமூக வலைதளமான ஸ்னாப் சாட் புதிய ஏஐ தொழில்நுட்பத்தை தனது செயலியில் அறிமுகம் செய்து உள்ளது. இருப்பிடப் பகிர்வு எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. இனி பயனர்கள் பிளாக் அம்சத்தை மிகவும் திறம்பட பயன்படுத்த முடியும். டீனேஜ் வயதில் உள்ளவர்கள் இடையே பொதுவான நண்பர்கள் இல்லை என்றால், அந்நியர்கள் அவர்களுக்கு நண்பர் கோரிக்கையை அனுப்பு முடியாது. பயன்பாட்டு எச்சரிக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய பயனர்களுக்கு பதிலளிப்பதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் வசதியும் உள்ளது. 


Snapchat தடுக்கும் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

Snapchat பகிர்ந்த விவரங்களின்படி, பயனர்கள் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்காக Block ஆப்ஷன் மேம்படுத்தப்பட்டுள்ளது. Snapchatல் பயனர் ஒருவரைத் தடுத்தால், அதே சாதனத்தில் உருவாக்கப்பட்ட பிற கணக்குகளிலிருந்து வரும் புதிய நண்பர் கோரிக்கைகளை ஆப்ஸ் தானாகவே தடுக்கும். 

கடுமையான Snapchat நட்புக் கோரிக்கைக் கொள்கை

Snapchatல் உள்ள 13 முதல் 17 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு பரஸ்பர நண்பர்கள் இல்லாவிட்டால் அவர்களுக்கு இனி நண்பர் கோரிக்கைகளை அனுப்ப முடியாது. இதேபோல் மோசடி நடவடிக்கையுடன் அடிக்கடி தொடர்புடைய பயனர்களுக்கு நட்பு கோரிக்கை அனுப்ப முடியாது. இந்த அம்சத்தின் உள்ளூர் பதிப்பு விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

மேலும் Snapchatல் இருப்பிடப் பகிர்வு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. Snap Map அம்சத்தில் எந்த நண்பர்கள் தங்கள் இருப்பிடத்தைப் பார்க்கலாம் என்பதை இளம் வயது பயனர்கள் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. 

மேம்படுத்தப்பட்ட ஆப்ஸ் எச்சரிக்கைகள்

சந்தேகத்திற்கிடமான பயனர்கள் மற்றும் மோசடி செய்பவர்களிடமிருந்து பதின்வயதினரைப் பாதுகாப்பதற்காக Snapchat செயலியில் எச்சரிக்கை அமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இது வேறொரு பகுதியைச் சேர்ந்த பயனர்களிடமிருந்து வரும் செய்திகளைப் பற்றி பயனர்களை எச்சரிக்கும். இந்த புதிய அம்சங்கள் சேவை முழுவதும் வெளியிடப்படும் என்று ஸ்னாப்சாட் கூறுகிறது. மேலும் பயனர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் சியோமி பேட் 8 இன் விலை உயர்ந்தது: இப்போது அதன் விலை எவ்வளவு என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
  2. இந்தியாவில் வாங்குபவர்களின் முடிவுகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக மெட்டா ஆய்வு கூறுகிறது
  3. கூகுள் ஜெமினி அவதார் மூலம் பயனர்கள் தங்களை உள்ளடக்கிய AI வீடியோக்களை உருவாக்கலாம்
  4. சியோமி 17T, விவோ X200T மற்றும் சாம்சங் A57 போன்களின் விலை, அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்களின் முழு ஒப்பீடு
  5. வி இந்தியாவில் சமூக ஊடகங்களில் அதிவேக சரிபார்ப்பிற்காக சைலண்ட் மொபைல் வெரிஃபிகேஷனை அறிமுகம் செய்கிறது
  6. சியோமி டிவி FX மினி எல்இடி சீரிஸ் இந்தியாவில் 75 அங்குலம் வரையிலான திரையுடன் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  7. சியோமி 17T இந்தியாவில் 6,500mAh பேட்டரி மற்றும் லைக்கா கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  8. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ இந்தியாவில் 6,500mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  9. ஆண்ட்ராய்டில் போலி அழைப்புகளைக் கண்டறியும் புதிய பாதுகாப்பு வசதியை கூகுள் உலகளவில் அறிமுகம் செய்கிறது
  10. அனைத்து பயனர்களுக்கும் 'எக்ஸ்டெண்டட்' திங்கிங் மோடுடன் ஜெமினி திங்கிங் லெவல்களை வெளியிடுகிறது கூகுள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »