Facebook: குறைவாக லைக் வருகிறதா? இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்!

Facebook: குறைவாக லைக் வருகிறதா? இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்!

Photo Credit: Twitter/ Jane Manchun Wong

ஹைலைட்ஸ்
  • App researcher Jane Manchun Wong has found the code
  • Facebook confirmed that it is considering the test
  • Instagram is already providing the feature in six countries
விளம்பரம்

இன்ஸ்டாகிராமை தொடர்ந்து, பேஸ்புக் 'லைக்' எண்ணிக்கைகளை மறைக்கும் சோதனையையும் அந்நிறுவனம் பரிசீலித்து வருகிறது. 

ஆப் ஆராய்ச்சியாளர் ஜேன் மஞ்சுன் வோங், 'பேஸ்புக்கின் ஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்குள் ஒரு குறியீட்டைக் கண்டுபிடித்துள்ளார்'. இது ஒரு பதிவை எத்தனை பேர் லைக் செய்துள்ளார்கள் என்பதை எல்லோருக்கும் காண்பிக்காது. ஆனால், அந்த பதிவை பதிவேற்றியவர் அதன் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

லைக் எண்ணிக்கையை மறைக்கும் இந்த சோதனையை பரிசீலிக்க உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், இந்த சோதனை இன்னும் தொடங்கப்படவில்லை. 

லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் அப்டேட்டை இன்ஸ்டாகிராமில் ஏற்கெனவே ஃபேஸ்புக் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. சில நாடுகளில் மட்டுமே சோதனையில் உள்ள இந்த இன்ஸ்டாகிராம் அப்டேட் பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் லைக்கை மறைக்கும் திட்டம் முதலில், கனடா, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலிய, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போஸ்டுகளில் எத்தனை பேர் லைக் செய்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை தெரியும். இது பலரிடையே பொறாமையை உருவாக்குவதாகவும், பதிவுகள் மீதான தரத்தை லைக்குகள் தீர்மாக்கிறது என்ற பார்வை உருவாவதாகவும் கூறப்படுகிறது. 

இதனை தடுக்கவே லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் அப்டேட்டை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதே வேளையில் பதிவிடுபவர்கள் தங்களுக்கு யாரெல்லாம் லைக் செய்திருக்கிறார்கள் என்பதை வழக்கம்போல் பார்க்க முடியும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, இன்ஸ்டாகிராம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன்படி, பொது கணக்கில் உள்ளவர்கள் தங்களுக்கு நேரடியாக மெசேஜ் வருவதை கட்டுப்படுத்த முடியும். இந்த அம்சத்தின் மூலம் பயனாளர்கள் யார் தங்களுக்கு மெசேஜ் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய முடியும். 

மேலும் தாங்கள் பின்தொடர்பவர்கள் மற்றுமே தங்களுக்கு மெசேஜ் செய்ய முடியும் என்பது போன்ற வசதிகளையும் பயனர்கள் தேர்வு செய்துகொள்ளலாம் என ஆப் ஆராய்ச்சியாளர் ஜேன் மஞ்சுன் வோங் தெரிவித்துள்ளார். 
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Facebook
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S25 Edge இந்தியாவில் விலை அறிவிப்பு, முன்பதிவு தொடங்கியது
  2. Motorola Razr 60 Ultra: இந்தியாவில் அறிமுகமான புதிய மடிக்கும் மொபைல்
  3. Vivo V50 Elite Edition வட்ட வடிவ கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம்
  4. Airtel Black Rs. 399 திட்டம்: IPTV உடன் புதிய புரட்சி செய்ய காத்திருக்கும் அறிவிப்பு
  5. Alcatel V3 Ultra செல்போன் பட்ஜெட் பிரியர்களுக்கு ஒரு சுவாரஸ்ய அப்டேட்
  6. Moto G86 Power 5G பற்றி ஆன்லைனில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
  7. வரம்பற்ற டேட்டா! ஏர்டெல் அறிமுகப்படுத்தும் International Roaming Plan
  8. Haier C95 and C90 OLED TV இந்தியாவில் Dolby Vision IQ அம்சத்துடன் வருகிறது
  9. Realme GT Concept செல்போன் 10,000mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம்
  10. Vivo X200 FE கண்ணைக் கவரும் 1.5K OLED ஸ்க்ரீன் உடன் இந்தியாவில் அறிமுகம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »