ஹவாய் தீவில் வெடிக்கும் எரிமலை… விஞ்ஞானிகளுக்கு கொண்டாட்டம்!?

ஹவாய் தீவில் இருக்கும் கிலோவா எரிமலை கடந்த சில நாட்களாக எரி குழம்பை கக்கி வருகிறது

ஹவாய் தீவில் வெடிக்கும் எரிமலை… விஞ்ஞானிகளுக்கு கொண்டாட்டம்!?

Kilauea Eruption: More than 45 homes and buildings have been displaced.

ஹைலைட்ஸ்
  • கிலோவா எரிமலை கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து சீற்றத்திலேயே இருந்து வருகிறது
  • மே 3 முதல் பெரும் சீற்றத்துடன் பொங்கி வருகிறது கிலோவா
  • இதனால், உலகளாவிய பாதிப்புகள் இருக்காது எனப்பட்டுள்ளது
விளம்பரம்

ஹவாய் தீவில் இருக்கும் கிலோவா எரிமலை கடந்த சில நாட்களாக எரி குழம்பை கக்கி வருகிறது. இந்த எரிமலை வெடிப்பால் அங்கிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த எரிமலை சீற்றத்தை, `இது அறிவியலுக்கு மிகப் பெரிய விஷயம்' என்று விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர். 

கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் இந்த எரிமலை, அதிவெப்பம் நிறைந்த குழம்பை கக்கி வருகிறது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக இந்த எரிமலை பொறுமையான அளவில் எரிச் சாம்பலையும், அவ்வப்போது சிறிய அளவிலான எரி குழம்பையும் கக்கி வந்த வண்ணம் இருக்கிறது. இதனால், அங்கு பல தொழில்நுட்ப வசதிகள் கொண்ட உணரிகள் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அங்கு நடக்கும் ஒவ்வொரு அசைவும் மிக கவனமாக உற்று நோக்கப்பட்டு வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக கிலோவா எரிமலை தற்போது வெளியிட்டு வரும் அளவுக்கான எரி குழம்பை கக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
kilauea volcano hawaii afp

இந்த எரிமலை குமுறலால், அபாயகரமான பல வாயுக்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதன் வெளிப்பாடாக, பல்லாயிரக்கணக்கான ஹவாய் மக்கள் அவர்களின் வாழ்விடத்தில் இருந்து வெளியேறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 45 வீடுகளை கிலோவா எரிமலையில் இருந்து வெளியே வந்த குழம்பு சாம்பலாக்கி உள்ளது. கிலோவா எரிமலைக்குப் பக்கத்தில் ஒரு ஜியோ-தெர்மல் மின்சார ஆலை இருக்கிறது. இது தான், ஹவாய் தீவின் மின்சாரத் தேவையில் 25 சதவிகிதத்தை இட்டு நிரப்புவது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த ஆலைக்கும் ஆபத்து நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த மின்சார ஆலையின் நிர்வாகத் தரப்பு, `கிலோவா எரிமலை பொங்க ஆரம்பித்ததில் இருந்தே நாங்கள் உஷாராகத் தான் இருக்கிறோம். எங்கள் ஆலையை முழுவதுமாக இப்போது முடிவிட்டோம். எரி குழம்பால் ஆலைக்கு எந்த வித பாதிப்பும் வராத வண்ணம் பார்த்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டிருக்கிறோம்' என்று தெளிவுபடுத்தி உள்ளனர். 

- -

இப்படி ஒரு பக்கம் உஷார் நடவடிக்கைகளை அரசும், உள்ளூர் நிர்வாகமும் முழு வீச்சில் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கிலோவா எரிமலையை ஆய்வு செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், `இந்த எரிமலையை கடந்த 25 ஆண்டுகளாக கவனித்து வருகிறோம். எனவே, இதில் நடந்த அனைத்து மாற்றங்களையும் உன்னிப்பாக பார்த்து வருகிறோம். எரிமலை அதன் இறுதி கட்டத்தை தற்போது அடைந்துள்ளது. எனவே, இங்கிருந்து எப்படிப்பட்ட மாற்றங்கள் எல்லாம் வரும் என்று பார்க்க மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறோம். இந்த எரிமலையின் முடிவை வைத்து வருங்காலத்தில் இதைப் போல் நடக்கும் சம்பவத்துக்கு நாம் முன் கூட்டியே தயாராக முடியும். இதைச் செய்வது ஹவாய் மக்களுக்கு மிகுந்த பயன் தரும்' என்றுள்ளனர் ஆர்வ மிகுதியுடன்.

கிலோவா எரிமலை மிக ஆக்ரோஷமாக பொங்கி வருவதால், பலர் இது உலகின் அழிவு என்றெல்லாம் வதந்தி பரப்பி வருகின்றனர். இது குறித்து விஞ்ஞானிகள், `இந்த ஒரு எரிமலை பொங்குவதால், மீதம் உள்ள உலகம் முழுவதற்கும் ஆபத்து என்று கூறுவதெல்லாம் சுத்த அபத்தமான விஷயம். இதனால், நிலநடுக்கங்களோ அல்லது சுனாமியோ வர வாய்ப்பில்லை. எனவே, வீணாக வதந்தி பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்றனர் உறுதிபட. 



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் ஹுவாய் மேட்பேட் SE 11 (Huawei MatePad SE 11) அறிமுகம் உறுதி: விலை விவரங்கள் வெளியீடு
  2. இந்தியாவில் அறிமுகமானது மார்ஷல் ப்ரோம்லி 450 (Marshall Bromley 450): விலை மற்றும் சிறப்பம்சங்கள் இங்கே
  3. ஐடெல் (Itel) நிறுவனம் 'Zeno AI Weaver' வாய்ஸ் ரெக்கார்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது... பல சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளது
  4. Vivo V70 FE இந்திய விலை & வெளியீட்டு காலம் லீக்: எதிர்பார்க்கப்படும் விவரங்கள்
  5. Garmin ஸ்மார்ட்வாட்ச்களுக்கு WhatsApp ஆதரவு அறிமுகம்
  6. Powerbeats Pro 2 Nike ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: Apple H2 சிப் மற்றும் ANC வசதியுடன்
  7. Oppo A6s 5G இந்தியாவில் அறிமுகம்: 6,500mAh பேட்டரி, MediaTek Dimensity 6300 சிப்செட் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. OnePlus 15T – சீனாவில் மார்ச் 24 அன்று அறிமுகம்... சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்
  9. Reliance Jio – வெளிநாட்டு பயணிகளுக்கு VoWiFi மூலம் இலவச SMS வசதி
  10. Poco X8 Pro Series இந்தியாவில் அறிமுகம்: 9,000mAh பேட்டரி, 50MP கேமரா – விலை & விவரங்கள் இதோ உங்களுக்காக
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »