* ஜூன் 1 முதல் அதிகத் தொகை UPI-க்கு பயோமெட்ரிக் கட்டாயமாக்கல், கார்டு இல்லா ஏடிஎம் எடுப்புகள் இலவச வரம்பிற்குள் சேர்ப்பு மற்றும் PNG இணைப்பு உள்ளவர்கள் 30 நாட்களில் எல்பிஜி சிலிண்டரை ஒப்படைக்க உத்தரவு.
Photo Credit: AI Generated
புதிய மாதமான இன்று ஜூன் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் நிதிச் சார்ந்த விஷயங்களில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகள், கேஸ் சிலிண்டர் பயன்பாடு, பான் கார்டு மற்றும் ஏடிஎம் விதிகள் உள்ளிட்டவற்றில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள், பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டிலும், பணப் பரிவர்த்தனைகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன.
டிஜிட்டல் பண மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற செயலிகளில் பெரிய தொகையை அனுப்பும் போது இனி வெறும் பின் (PIN) எண்கள் மட்டும் போதாது. அதற்குப் பதிலாக முக அங்கீகாரம் (FaceID) அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும், தவறுதலாக வேறு நபர்களுக்கு பணம் அனுப்புவதைத் தடுக்க, பணம் பெறுபவரின் அதிகாரப்பூர்வ வங்கப் பெயரை பரிவர்த்தனைக்கு முன்பே முழுமையாகக் காட்டும் புதிய வசதியும் அறிமுகமாகியுள்ளது.
அதேபோல், வங்கிகளில் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே க்யூஆர் கோடு (QR Code) மூலம் பணம் எடுக்கும் முறையும் இனிமேல் உங்களது மாதாந்திர இலவச ஏடிஎம் பயன்பாட்டு வரம்பிற்குள் (Monthly Free Limits) கணக்கிடப்படும். இந்த வரம்பைத் தாண்டி பணம் எடுக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், உங்கள் பகுதியில் பைப்லைன் இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு பெற்றிருந்தால், அடுத்த 30 நாட்களுக்குள் உங்களது பழைய எல்பிஜி சிலிண்டர் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். புதிய சிலிண்டர் முன்பதிவு செய்ய நகர்ப்புறங்களில் 25 நாட்களும், ஊரகப் பகுதிகளில் 45 நாட்களும் கட்டாய இடைவெளி இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்