ஏப்ரல் 20 முதல் 50% ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 16 ஏப்ரல் 2020 11:59 IST
ஹைலைட்ஸ்
  • ஐடி துறை நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி
  • புதிய உத்தரவு ஏப்ரல் 20 முதல் நடைமுறைக்கு வரும்
  • ஊரடங்கு என்பது பல துறைகளில் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது

கோவிட்-19 தொற்றுநோயால், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது

தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள், ஏப்ரல் 20 முதல் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. "ஐடி வன்பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளும் அனுமதிக்கப்படுகின்றன," என்று அரசு கூறியுள்ளது. இதற்கு, உள்துறை அமைச்சகம், சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

coronavirus காரணமாக, இந்தியாவில் மொத்தம் 12,380 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 414 பேர் இறந்துள்ளனர். மேலும், வைரஸுக்கு என்னும் எந்த மருந்தும் கண்டுபிடிக்காத நிலையில், அதை தடுக்க சிறந்த வழி சமூக விலகல் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியதையடுத்து, தற்போது மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

மேலும். ஏப்ரல் 20-க்குப் பிறகு மக்களுக்கு சில சலுகைகள், கட்டுப்பாட்டி தளர்வுகள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தளர்வு அளிப்பது, இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஏற்படும் இழப்புகளைக் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"டிஜிட்டல் பொருளாதாரம், சேவைத் துறைக்கு மற்றும் தேசிய வளர்ச்சிக்கு முக்கியமானது. அதன்படி, இ-காமர்ஸ் செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த சேவைகளின் செயல்பாடுகள், அரசு நடவடிக்கைகளுக்கான டேட்டா மற்றும் அழைப்பு மையங்கள் மற்றும் ஆன்லைன் கற்பித்தல் மற்றும் தொலைதூரக் கற்றல் ஆகிய அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று அரசு தெரிவித்துள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: MHA, Coronavirus, COVID 19, IT Sector, Lockdown
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Sony LYT-901 வந்துருச்சு! 200 மெகாபிக்ஸல்... இனி போட்டோஸ் வேற லெவல்
  2. OnePlus-ன் Performance King! Ace 6T லான்ச் தேதி கன்ஃபார்ம்! 8000mAh பேட்டரி, 165Hz டிஸ்ப்ளேன்னு செம பவர்
  3. 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே! Realme P4x வருது டிசம்பர் 4-ஆம் தேதி! காத்திருங்கள்
  4. WhatsApp-ல் உங்களுக்குப் பிடிச்ச AI Bot-க்கு டாட்டா! Meta AI மட்டும்தான் இனி உள்ளே வர முடியும்
  5. Xiaomi 17 Ultra டெலிஃபோட்டோ லென்ஸ் மட்டும் 200MP! DSLR-ஐ ஓரங்கட்டப் போற Xiaomi-யின் அடுத்த பிளான்
  6. POCO C85 5G: Dimensity 6100+, ஃப்ரண்ட் டிசைன் லீக் - இந்தியா வருகை உறுதி!
  7. சார்ஜ் பத்தி கவலையே வேணாம்! OnePlus Ace 6 Turbo-வில் 9,000mAh பேட்டரி! Snapdragon 8s Gen 4 பவர் வேற!
  8. Nord 4 யூசர்ஸ் கொண்டாடுங்க! OxygenOS 16 அப்டேட் வழியா AI மோட், புது Widget-கள், செம கஸ்டமைசேஷன் ஆப்ஷன்ஸ் கிடைச்சுருக்கு
  9. Google Circle to Search-ல இப்படி ஒரு பவர் கிடைச்சுருக்கு! AI மோட் மூலமா இனி நீங்க கேட்குற எல்லா கேள்விக்கும் டக்குனு பதில்!
  10. வருத்தம் தரும் செய்தி! நம்ம டெய்லி Chat-க்கு ஹெல்ப் பண்ண Microsoft Copilot AI, வாட்ஸ்அப்-ல இருந்து விலகுறாங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.