இந்தியாவில் தயாரிக்கப்படும் 'ஆப்பிள்' போன்கள், குறைந்த விலையில் அறிமுகமாகலாம்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் XR மற்றும் ஐபோன் XS ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் 'ஆப்பிள்' போன்கள், குறைந்த விலையில் அறிமுகமாகலாம்!

ஐபோன் XR மற்றும் ஐபோன் XS ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகலாம்

ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் விரைவில் அறிமுகம்
  • உள்நாட்டு தயாரிப்பு, ஆப்பிள் நிறுவனத்தின் வரிகளை குறைக்கும்
  • இதனால் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் விலை குறையலாம்
விளம்பரம்

உலகின் சில முக்கிய பிரீமியம் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஆப்பிளும் ஒன்று. உலகின் மற்ற நாடுகள் மட்டுமின்றி, இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான் மோகம் சற்றும் கூட குறைந்ததில்லை. ஆனால், அதிகபடியான இந்தியர்கள், ஆப்பிள் ஸ்மார்ட்போன்களை வாங்காமல் இருப்பதற்கு காரணம் இதன் விலை. இந்த ஸ்மார்ட்போன்கள், இந்தியாவிற்கு வெளியில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதால், வரிகள் காரணமாக இதன் விலை உச்சத்தில் உள்ளது. ஆனால், தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிற்குள்ளேயே உற்பத்தியாகிறது. அதனால், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் XR மற்றும் ஐபோன் XS ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களை பாக்ஸ்கான் (Foxconn) என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

முன்னதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருந்த தகவலில், பரவலாக ஹான் ஹோய் தொழிற்சாலை (Hon Hai Precision Industry) என்று அழைக்கப்படும் பாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம், ஐபோன் X வரிசை ஸ்மார்ட்போன்களை தயாரிக்க தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்குள் ஒரு உற்பத்தி நிலையத்தை துவங்கும். மேலும், ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் விஸ்டர்ன் கார்ப் (Wistron Corp) நிறுவனத்தின் உற்பத்தி நிலையத்தின் மூலமாக குறைந்த விலை ஐபோன் SE, ஐபோன் 6S, ஐபோன் 7 ஆகிய ஸ்மார்ட்போன்களை தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள், லட்சக்கணக்கான இந்தியர்களின் விருப்ப ஸ்மார்ட்போனாக இருந்தாலும், இதன் அதிக விலை காரணமாக வெறும் 1 சதவிகிதம் சந்தை பங்கை மட்டுமே வைத்துள்ளது. 

'இந்த ஸ்மார்ட்போன்களின் உள்நாட்டு தயாரிப்பால், ஐபோன்களின் விலையை குறைத்து விற்பனை செய்ய வாய்ப்பிருக்கிறது' என ருஷாப் தோஷி (Rushabh Doshi), 
தொழில்நுட்ப ஆலோசனை கேனலிஸில் ஆராய்ச்சி இயக்குனர் கூறியுள்ளார். 

இம்மாதிரியான உள்நாட்டு தயாரிப்பு, ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்கும், அதுமட்டுமின்றி தன் சொந்த கடைகளை இந்தியாவில் துவங்க ஆப்பிள் நிறுவனத்திற்கு உதவியாக இருக்கும்.

முன்னதாக விஸ்டர்ன் கார்ப் (Wistron Corp) நிறுவனம் ஐபோன் SE, ஐபோன் 6S, ஐபோன் 7 ஆகிய ஸ்மார்ட்போன்களை தயாரித்து ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த தகவலை விஸ்டர்ன் கார்ப் நிறுவனம் மறுத்துள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. சைபர் தாக்குதலுக்கான மென்பொருளை உருவாக்க ChatGPT-யைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஜப்பானிய சிறுவன் கைது
  2. இந்தியாவில் மின்சாரப் பயணிகள் வாகன விற்பனை இரு மடங்காக உயர்வு; டாடா மோட்டார்ஸ் முதலிடம்
  3. இந்தியாவில் ரூ. 3,000 விலைக்குள் அழைப்புகள் மற்றும் இசைக்கான சிறந்த டி.டபிள்யூ.எஸ் (TWS) இயர்பட்ஸ்
  4. டெக்னோ கேமோன் 50 அல்ட்ரா 5ஜி இந்தியாவில் ஜூலை 17-ல் அமேசான் மூலம் அறிமுகமாகிறது, வண்ணங்கள் உறுதி செய்யப்பட்டன
  5. இந்தியாவில் விண்டோஸ் 11 லேப்டாப்பில் பேட்டரி ஆயுளை நீட்டிப்பது எப்படி
  6. ஆசஸ் விவோபுக் 14, விவோபுக் 15 இன்டெல் கோர் சீரிஸ் 3 செயலிகளுடன் புதுப்பிக்கப்பட்டன: விலை, கிடைக்கும் தன்மை
  7. ஜெமினி ஆம்னி மூலம் இயக்கப்படும் வீடியோ ரிமிக்ஸ் அம்சத்துடன் கூகுள் போட்டோஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது
  8. ரியல்-டைம் உரையாடல்களுடன் ChatGPT வாய்ஸ் ஜிபிடி லைவ் மேம்படுத்தலைப் பெறுகிறது
  9. சேமிக்கப்பட்ட தொடர்புகளுக்கான பிறந்தநாள் அறிவிப்பு அம்சத்தில் வாட்ஸ்அப் பணிபுரியக்கூடும்
  10. நெட்ஃபிளிக்ஸ் இலவசமா? சில பயனர்களுக்கு 30 நாள் சோதனைக் சந்தா சலுகை கிடைக்கிறது: சரிபார்ப்பது எப்படி
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »