புதிய ஸ்மார்ட்போன்களில் Sanchar Saathi செயலியை கட்டாயமாக ப்ரீலோட் செய்ய வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு நீக்கியுள்ளது
Photo Credit: Department of Telecommunications
மத்திய அரசு சஞ்சார் சாத்தி கட்டாய உத்தரவை திரும்பப் பெற்றது
இப்போ டெக் உலகத்துல ஒரு நிம்மதியான செய்தி வந்திருக்கு! சமீபத்துல மத்திய அரசு, இந்தியாவில் விற்பனைக்கு வரும் எல்லா புது ஸ்மார்ட்போன்களிலும் Sanchar Saathi அப்படிங்கிற ஒரு முக்கியமான செயலியை கட்டாயமா நிறுவ (Pre-install) செய்யணும்னு ஒரு உத்தரவைப் போட்டாங்க. இதுக்கு Apple உட்பட சில நிறுவனங்களும், பிரைவசி (Privacy) விரும்பும் பயனர்களும் பெரிய எதிர்ப்புத் தெரிவிச்சிருந்தாங்க. இப்போ, அந்த எதிர்ப்பு வேலை செஞ்சிருக்கு. ஆமாங்க! மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம், புதிய மற்றும் ஏற்கெனவே உள்ள ஸ்மார்ட்போன்களில் Sanchar Saathi செயலியை கட்டாயமாக நிறுவ வேண்டியதில்லை என்று அறிவித்து, முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றிருக்கு!
இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டதுக்கு அரசு கொடுத்த காரணம் என்னன்னா, Sanchar Saathi செயலிக்கு மக்கள் மத்தியில அதிகரித்து வரும் வரவேற்பே காரணம்னு சொல்லிருக்காங்க! இந்த செயலிய இதுவரைக்கும் சுமார் 1.4 கோடி பயனர்கள் டவுன்லோட் பண்ணியிருக்காங்களாம். தினமும் 2,000 மோசடி சம்பவங்கள் பத்தின தகவல்களை இந்த ஆப் மூலமா கண்டுபிடிச்சு, சைபர் மோசடிகளைத் தடுக்கிறதுக்கு இது பெரிய அளவுல உதவுது.
ஆப் டவுன்லோட் அதிகமா இருக்கிறதால, இனிமேல் அதை கட்டாயமா ப்ரீலோட் பண்ண வேண்டிய அவசியம் இல்லைன்னு அரசு முடிவெடுத்திருக்கு.
ஆனா, இந்த முடிவு எடுத்ததுக்கு பின்னால, இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு. அது என்னன்னா, நம்ம Apple நிறுவனம்தான்! ஏற்கனவே வந்த ரிப்போர்ட்ஸ் படி, Apple கம்பெனி தன்னோட iPhone யூனிட்கள்ல இந்த Sanchar Saathi செயலியை ப்ரீலோட் செய்யறதுக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப் போறதா சொல்லப்பட்டு வந்தது. Apple, அவங்களுடைய குளோபல் பிரைவசி ஸ்டாண்டர்டுகளை காரணம் காட்டி, இந்த உத்தரவை எதிர்த்து வந்தாங்க. இப்போ, இந்த எதிர்ப்பு ஒரு முடிவுக்கு வந்திருக்கு!
அதுமட்டுமில்லாம, சில நாட்களுக்கு முன்னாடி மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசும்போது, Sanchar Saathi செயலி கட்டாயமில்லைன்னும், மத்த ஆப்ஸ்கள் மாதிரி இதையும் யூஸர்கள் விரும்பினா டெலிட் (Uninstall) செஞ்சுக்கலாம்னும் சொல்லிருந்தாரு.
இப்போ இந்த கட்டாய நிறுவல் உத்தரவு ரத்து செய்யப்பட்டதால, இனிமேல் புது போன் வாங்குறவங்க, Sanchar Saathi செயலி தேவைன்னு நினைச்சா, App Store அல்லது Google Play Store-ல இருந்து டவுன்லோட் பண்ணிக்கலாம். இது, போன்ல ஸ்டோரேஜ் பற்றாக்குறை அல்லது தனியுரிமைக் கவலைகள் இருக்கிற பயனர்கள், இந்த ஆப்பைத் தவிர்ப்பதற்கான முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கு.
மொத்தத்துல, அரசாங்கம் பாதுகாப்புக்காக கொண்டு வந்த ஒரு விஷயமா இருந்தாலும், Apple போன்ற நிறுவனங்களின் எதிர்ப்பு மற்றும் பயனர்களின் தனியுரிமைக் கோரிக்கைகளை மதித்து இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது, டெக் உலகில் ஒரு முக்கியமான வெற்றியா பார்க்கப்படுது! இந்த முடிவு பத்தி உங்க கருத்து என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
ISS Astronauts Celebrate Christmas in Orbit, Send Messages to Earth
Arctic Report Card Flags Fast Warming, Record Heat and New Risks
Battery Breakthrough Uses New Carbon Material to Boost Stability and Charging Speeds
Ek Deewane Ki Deewaniyat Is Streaming Now: Know Where to Watch the Romance Drama Online