உணவு பாதுகாப்புக்காக 'சோமேட்டோ' நிறுவனம் எடுத்த புதிய முயற்சி!

உணவு பாதுகாப்புக்காக 'சோமேட்டோ' நிறுவனம் எடுத்த புதிய முயற்சி!

Photo Credit: சோமேட்டோ

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் சுமார் 5,000 உணவகங்கள் இனி சீல்டு பேக்குகளில் மட்டுமே உணவை வழங்க உள்ளனர்.

ஹைலைட்ஸ்
  • இனி உணவு 100% பாதுகாப்பானதாக இருக்கும் என சோமேட்டோ நிறுவனம் அறிவிப்பு!
  • 10 நகரங்களில் வெளியாகும் புதிய பேக்கிங் முறை!
  • இதன் மூலம் உணவு பாதுகாப்பாக வாடிக்கையாளரை சென்றடையும் என நம்பிக்கை!
விளம்பரம்

சோமேட்டோ உணவு  டெலவரி நிறுவனத்தின் டெலவரி எக்சிக்கியூடிவ் ஒருவர், வாடிக்கையாளருக்கு கொண்டு சென்ற உணவை எடுத்து உண்ணும் வீடியோ ஆன்லைனில் வைரலானது.

இந்த வீடியோ காட்சி ஆன்லைன் உணவு வாங்குபவர்கள் மற்றும் பொது மக்களிடேயே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சோமேட்டோ நிறுவனம் இதுபோன்ற பிரச்னைகள் இனி வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்திருந்தது. 

அதையொட்டி தற்போது சோமேட்டோ நிறுவனம், சாப்பாடு பொட்டலங்களை திறக்க முடியாத வகையில் ஒரு புதிய பேக்கிங் முறையை அறிமுகம் செய்துள்ளது. சோமேட்டோ நிறுவனத்தின் இந்தப் புதிய பேங்கிங் முறை பாலிமரால் செய்யப்பட்ட ஒரு திரையைக் கொண்டுள்ளது. இரண்டு விதமாக வெளியாகியுள்ள இந்தப் புதிய பேக்கிங் கவர் சிறு மற்றும் பெரிய உணவு பார்சல்களை பாதுகாப்பாக மூட உதவுகிறது.

டெலிவரி நபரிடம் உணவைத் தருவதற்கு முன்னர் உணவகத்தில் வைத்து இந்தப் புதிய பேக்கிங் செய்யப்படுகிறது. இந்த சீலை வாடிக்கையாளர் கிழித்த பின்னர்தான் உணவைச் சாப்பிட முடியும். இதனால் டெலிவரி நபர்கள் பார்சல்களை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சோமேட்டோ நிறுவனம், உணவுப் பொட்டலங்கள் திறந்து காணப்பட்டால் உடனடியாக தங்களுக்குப் புகார் அளிக்கும்படி வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குருகிராம் நகரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையின் வெற்றிக்குப் பிறகு இந்தத் திட்டம் இந்தியாவின் 10 நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் முதற்கட்டமாக டெல்லி என்சிஆர், மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பூனே, ஜெய்ப்பூர், சண்டிகர், நாக்பூர் மற்றும் வடோதரா போன்ற நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்தக்கட்டமாக சோமேட்டோ டெலிவரி இயங்கும் 180 நகரங்களிலும் இந்தப் புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் சுமார் 5,000 உணவகங்கள் இனி சீல்டு பேக்குகளில் மட்டுமே உணவை வழங்க உள்ளனர். இதன் மூலம் 100% உணவுப் பாதுகாப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும் என சோமேட்டோ தெரிவித்தது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Zomato, Food Delivery App
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அசர வைக்கும் வசதிகளுடன் PhonePe கொண்டு வந்துள்ள UPI Circle அம்சம்
  2. Honor Power செல்போன் சீனாவில் வெற்றிகரமாக அறிமுகமாகி அமர்க்களம்
  3. கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கக்கூடிய Realme 14T வருகிறது
  4. சாம்சங் நிறுவனத்தின் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் Galaxy S25 Ultra
  5. Oppo K13 5G செல்போன் 67W வேக சார்ஜிங் சப்போர்ட் உடன் வெளியாகிறது
  6. Realme நிறுவனத்தின் Narzo 80 5G மற்றும் Narzo 80x 5G மாடல் செல்போன்கள் அறிமுகம்
  7. Motorola Edge 60 Stylus அட்டகாசமாக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது
  8. Huawei நிறுவனம் அறிமுகப்படுத்திய Huawei Watch Fit 3 ஸ்மார்ட்வாட்
  9. IPL போட்டிகளை முன்னிட்டு IPL 251 Prepaid ரீசார்ஜ் அறிமுகம் செய்தது BSNL
  10. AMOLED திரையுடன் வருகிறது புதிய Honor 400 Lite ஸ்மார்ட்போன்கள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »