உணவு பாதுகாப்புக்காக 'சோமேட்டோ' நிறுவனம் எடுத்த புதிய முயற்சி!

குருகிராம் நகரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையின் வெற்றிக்குப் பிறகு இந்தத் திட்டம் இந்தியாவின் 10 நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது.

உணவு பாதுகாப்புக்காக 'சோமேட்டோ' நிறுவனம் எடுத்த புதிய முயற்சி!

Photo Credit: சோமேட்டோ

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் சுமார் 5,000 உணவகங்கள் இனி சீல்டு பேக்குகளில் மட்டுமே உணவை வழங்க உள்ளனர்.

ஹைலைட்ஸ்
  • இனி உணவு 100% பாதுகாப்பானதாக இருக்கும் என சோமேட்டோ நிறுவனம் அறிவிப்பு!
  • 10 நகரங்களில் வெளியாகும் புதிய பேக்கிங் முறை!
  • இதன் மூலம் உணவு பாதுகாப்பாக வாடிக்கையாளரை சென்றடையும் என நம்பிக்கை!
விளம்பரம்

சோமேட்டோ உணவு  டெலவரி நிறுவனத்தின் டெலவரி எக்சிக்கியூடிவ் ஒருவர், வாடிக்கையாளருக்கு கொண்டு சென்ற உணவை எடுத்து உண்ணும் வீடியோ ஆன்லைனில் வைரலானது.

இந்த வீடியோ காட்சி ஆன்லைன் உணவு வாங்குபவர்கள் மற்றும் பொது மக்களிடேயே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சோமேட்டோ நிறுவனம் இதுபோன்ற பிரச்னைகள் இனி வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்திருந்தது. 

அதையொட்டி தற்போது சோமேட்டோ நிறுவனம், சாப்பாடு பொட்டலங்களை திறக்க முடியாத வகையில் ஒரு புதிய பேக்கிங் முறையை அறிமுகம் செய்துள்ளது. சோமேட்டோ நிறுவனத்தின் இந்தப் புதிய பேங்கிங் முறை பாலிமரால் செய்யப்பட்ட ஒரு திரையைக் கொண்டுள்ளது. இரண்டு விதமாக வெளியாகியுள்ள இந்தப் புதிய பேக்கிங் கவர் சிறு மற்றும் பெரிய உணவு பார்சல்களை பாதுகாப்பாக மூட உதவுகிறது.

டெலிவரி நபரிடம் உணவைத் தருவதற்கு முன்னர் உணவகத்தில் வைத்து இந்தப் புதிய பேக்கிங் செய்யப்படுகிறது. இந்த சீலை வாடிக்கையாளர் கிழித்த பின்னர்தான் உணவைச் சாப்பிட முடியும். இதனால் டெலிவரி நபர்கள் பார்சல்களை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சோமேட்டோ நிறுவனம், உணவுப் பொட்டலங்கள் திறந்து காணப்பட்டால் உடனடியாக தங்களுக்குப் புகார் அளிக்கும்படி வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குருகிராம் நகரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையின் வெற்றிக்குப் பிறகு இந்தத் திட்டம் இந்தியாவின் 10 நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் முதற்கட்டமாக டெல்லி என்சிஆர், மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பூனே, ஜெய்ப்பூர், சண்டிகர், நாக்பூர் மற்றும் வடோதரா போன்ற நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்தக்கட்டமாக சோமேட்டோ டெலிவரி இயங்கும் 180 நகரங்களிலும் இந்தப் புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் சுமார் 5,000 உணவகங்கள் இனி சீல்டு பேக்குகளில் மட்டுமே உணவை வழங்க உள்ளனர். இதன் மூலம் 100% உணவுப் பாதுகாப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும் என சோமேட்டோ தெரிவித்தது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 15R: Black and Green Colourways உடன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
  2. Poco F8 Ultra: Snapdragon 8 Elite Gen 5, 100W Charging உடன் நவம்பர் 26 அறிமுகம்
  3. X Chat: Encrypted DMs, File Sharing மற்றும் Voice/Video Calls வசதியுடன் அறிமுகம்
  4. பட்ஜெட் செக்மெண்ட்ல Realme-ன் அடுத்த என்ட்ரி! RMX5108 போன்ல என்ன இருக்கு? Geekbench லீக்ஸ்
  5. ஃப்ளாக்ஷிப் கில்லர் திரும்பி வந்துட்டான்! Poco F8 Ultra மற்றும் Pro-வின் லான்ச் உறுதி
  6. Vivo X300 வாங்க போறீங்களா? லான்ச்சுக்கு முன்னாடியே விலை லீக்! Summit Red கலர் பற்றி தெரியுமா?
  7. Oppo Find X9 வாங்க போறீங்களா? ஜாக்கிரதை! விலை ஏறுது! லேட்டஸ்ட் லீக் பத்தி தெரிஞ்சுக்கோங்க
  8. 165Hz Display, 8000mAh பேட்டரி! OnePlus-ன் அடுத்த Performance King! Ace 6T பத்தி தெரிஞ்சுக்கோங்க
  9. Samsung Galaxy S26 Series: 200MP Ultra, Triple Camera உடன் புதிய விவரக்குறிப்புகள்
  10. Poco F8 Ultra: Snapdragon 8 Elite Gen 5, 16GB RAM உடன் விரைவில் அறிமுகம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »