WhatsApp-ஐ வியக்க வைத்த பயனர்கள்! - அப்படி என்ன நடந்திருக்கும்...?!

உலகளவில் பரிமாறிக்கொள்ளப்பட்ட மொத்த செய்திகளில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியாவில் கொண்டுள்ளது

WhatsApp-ஐ வியக்க வைத்த பயனர்கள்! - அப்படி என்ன நடந்திருக்கும்...?!

WhatsApp, உலகில் மற்ற நாட்டைக் காட்டிலும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பயனர்களை கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்அப் டிசம்பர் 31 அன்று 100 பில்லியன் + செய்திகளைப் பதிவு செய்தது
  • ஒரே நாளில் பகிரப்பட்ட செய்திகளின் எண்ணிக்கையில் இது ஒரு புதிய பதிவாகு
  • அந்த பெரிய எண்ணிக்கையிலான செய்திகளில், 12 பில்லியன் + படங்கள் இருந்தன
விளம்பரம்

வாட்ஸ்அப் என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தகவல்தொடர்பு செயலிகளில் ஒன்றாகும். மேலும், இது போன்ற எண்ணிக்கையிலான செய்தி மற்றும் ஊடக பரிமாற்றங்களை தினசரி அடிப்படையில் கண்காணிக்கிறது. ஆனால், பத்தாண்டுக்கு முன்னர் வாட்ஸ்அப் அறிமுகமானதிலிருந்து வெளியான சாதனையை, புத்தாண்டு தினத்தன்று முறியடித்தது. புத்தாண்டு தினத்தன்று பயனர்கள் 100 பில்லியனுக்கும் அதிகமான செய்திகளை பரிமாறிக்கொண்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கையில், 20 பில்லியனுக்கும் அதிகமான செய்திகள் இந்திய பயனர்களால் மட்டுமே பகிரப்பட்டுள்ளன. மேலும், 100 பில்லியன் + செய்திகளில் சுமார் 12 பில்லியன் படங்கள் தளத்தில் பகிரப்பட்டன.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் நள்ளிரவு வரை 24 மணி நேர காலப்பகுதியில் டிசம்பர் 31 அன்று, உலகளவில் 100 பில்லியனுக்கும் அதிகமான செய்திகள் பகிரப்பட்டதாக வாட்ஸ்அப் ஒரு செய்திக்குறிப்பில் எழுதியுள்ளது. இது ஒரு சாதனை படைக்கும் தொகுதி, இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வாட்ஸ்அப் தனது சேவைகளை ஆரம்பித்ததிலிருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான செய்திகளைப் பரிமாறிக்கொண்டது. புத்தாண்டு தினத்தன்று பகிரப்பட்ட அந்த 100 பில்லியன் + செய்திகளில், 12 பில்லியனுக்கும் அதிகமான படங்கள் என்று வாட்ஸ்அப் கூறுகிறது.

ஒரே நாளில் செய்தி பரிமாற்றத்தின் நிகர உலகளாவிய அளவு சுவாரஸ்யமாக இருந்தாலும், இந்தியர்களின் பங்களிப்பும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். புத்தாண்டு தினத்தன்று இந்திய பயனர்கள் 20 பில்லியனுக்கும் அதிகமான செய்திகளைப் பகிர்ந்து கொண்டதாக வாட்ஸ்அப் கூறுகிறது. இது உலகளவில் பரிமாறிக்கொள்ளப்பட்ட மொத்த செய்திகளில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும். இது ஆச்சரியமல்ல, வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களில் மிகப் பெரிய பங்கு இந்தியர்கள். மேலும், இந்த எண்ணிக்கை வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம், உரைச் செய்தி (text-messaging) மிகவும் பிரபலமான வாட்ஸ்அப் அம்சமாகும், அதைத் தொடர்ந்து status, picture messaging, calling மற்றும் voice notes அதே வரிசையில் உள்ளன.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. போக்கோ M8 பவர் இந்திய அறிமுக தேதி வெளியீடு: 3 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்!
  2. சியோமி 17T, ரெட்மி நோட் 15 & 15 சீரிஸ் போன்களின் விலை இந்தியாவில் உயர்வு: திருத்தப்பட்ட விலைகளைப் பார்க்கவும்
  3. விவோ S2 மொபைலின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியானது: இந்தியாவில் விரைவில் அறிமுகம் உறுதியானது!
  4. ரெட்மி நோட் 17 இந்திய அறிமுகம் குறித்த அறிவிப்பு; இந்தியாவில் இதன் விலை இணையத்தில் கசிந்தது
  5. [பிரத்தியேகச் செய்தி]புதிய மீடியாடெக் சிப்செட், 3D வளைந்த திரையுடன் iQOOZ11 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது
  6. Vi ரூ.200 ப்ரீபெய்ட் பிளான்: 20 OTT தளங்கள், லைவ் TV, வரம்பற்ற 5G டேட்டா மற்றும் பல சலுகைகள் அறிமுகம் !
  7. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: தொடக்க தேதி, HDFC வங்கி தள்ளுபடி மற்றும் சலுகைகள்!
  8. ஃபிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை ஆகஸ்ட் 8 அன்று தொடங்குகிறது: வங்கிச் சலுகைகள் மற்றும் டீல்கள் அறிவிப்பு
  9. X பிரீமியம் vs இலவசம்: 2026-ல் இந்தியாவில் X பிரீமியம் வாங்குவது மதிப்புள்ளதா?
  10. இந்தியாவில் உங்கள் இன்ஸ்டாகிராம் பயோவில் பல இணைப்புகளைச் சேர்ப்பது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »