Photo Credit: Ministry of Railways
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது SwaRail மொபைல் ஆப் பற்றி தான்.
ரயில்வே அமைச்சகம்இந்தியாவில் SwaRail என்ற புதிய சூப்பர் செயலியை அறிமுகப்படுத்தியது. முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் முன்பதிவு, ரயில்களில் உணவை ஆர்டர் செய்தல் மற்றும் PNR விசாரணைகள் போன்ற பொது மக்கள் பயன்படுத்தும் எல்லா சேவைகளையும் வழங்குவதற்கான ஒரு ஆப்பாக இது இருக்கும். தற்போது Android மற்றும் iOS இரண்டிற்கும் கிடைக்கிறது , SwaRail சூப்பர் ஆப் ஆனது, தொலைபேசியில் ரயில்வே சேவைகளை நிர்வகிப்பதற்கு பல ஆப்களை வைத்திருப்பதன் தேவையை நீக்குகிறது.
ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தால் (CRIS) SwaRail சூப்பர் ஆப் உருவாக்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் அனைத்து பொதுப் பயன்பாடுகளையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. SwaRail சூப்பர் ஆப் மூலம், இந்தியாவில் உள்ள பயனர்கள் முன்பதிவு செய்த, முன்பதிவு செய்யப்படாத மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பார்சல் மற்றும் சரக்கு டெலிவரிகளைப் பற்றி விசாரிக்கலாம். ரயில் மற்றும் PNR நிலையைக் கண்காணிக்கலாம், ரயில்களில் உணவை ஆர்டர் செய்யலாம் மற்றும் புகார்கள் மற்றும் கேள்விகளுக்கு Rail Madad என்கிற வசதியை தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே அமைச்சகம் கூறியது.
தற்போது, இந்திய இரயில்வே டிக்கெட் முன்பதிவு மற்றும் ரயில் இயக்கங்கள் மற்றும் அட்டவணைகள் பற்றி விசாரிக்க பல்வேறு ஆப்களை வழங்குகிறது. இவைகளுக்கு மாற்றாக SwaRail சூப்பர் ஆப் ஒரு ஒருங்கிணைந்த இயங்குதளம் என்று கூறப்படுகிறது. இது அதிக வசதிக்காக ஸ்மார்ட்போன்களில் இருந்து நேரடியாக மேற்கூறிய பணிகளை மேற்கொள்ள பயன்படுகிறது. அதன் ஒருங்கிணைப்பு கூடுதல் தகவல்களைக் காண்பிக்க அனுமதிக்கும்.
உதாரணத்துக்கு PNR விசாரணைகள் ரயிலைப் பற்றிய தகவல்களையும் காண்பிக்கும் என்று ரயில்வே அமைச்சகம் எடுத்துக்காட்டுகிறது. பயனர்கள் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் அணுக உதவுகிறது. IRCTC RailConnect மற்றும் UTS மொபைல் ஆப் போன்ற பிற இந்திய ரயில்வே பயன்பாடுகளிலும் இவற்றைப் பயன்படுத்தலாம். மேலும், பயனர்கள் தங்களின் தற்போதைய RailConnect அல்லது UTS ஆப்பயன்படுத்தி செயலியில் சேர்க்கலாம். இது m-PIN மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரம் உட்பட பல உள்நுழைவு விருப்பங்களை வழங்குகிறது.
இது தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் பீட்டா ஆப்ஷனாக கிடைக்கிறது. பயனர்கள் இதை மேம்படுத்த தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். ரயில்வே அமைச்சகத்தின் முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு SwaRail சூப்பர் ஆப் பொதுவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்