கொரோனா வைரஸ்: முக்கிய நகரங்களில் கேப் சேவைகளை நிறுத்தியது உபெர்!

Uber has suspended its Uber Pool and Uber Intercity services across the country.

கொரோனா வைரஸ்: முக்கிய நகரங்களில் கேப் சேவைகளை நிறுத்தியது உபெர்!

அரசு உத்தரவுகளுக்கு இணங்க உபெர் தனது சேவைகளை நிறுத்தியது

ஹைலைட்ஸ்
  • இந்தியாவின் பல நகரங்களில் டாக்ஸி சேவைகள் நிறுத்தம் - உபேர்
  • டெல்லி, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், சண்டிகர் ஆகிய நகரங்கள் அடங்கும்
  • உபெர் அதன் உபெர் பூல் மற்றும் உபெர் இன்டர்சிட்டி சேவைகளையும் நிறுத்தியது
விளம்பரம்

நாவல் கொரோனா வைரஸ் தொற்றால், நாட்டின் பல நகரங்களைத் தவிர, டெல்லி-என்.சி.ஆர், மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் டாக்ஸி சேவைகளை நிறுத்தி வைப்பதாக உபெர் (Uber) திங்களன்று தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவியிருக்கும் நகரங்களை முற்றிலுமாக நிறுத்துமாறு பல மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களின் உத்தரவுகளுக்கு இணங்க உபெர் முடிவெடுத்துள்ளது.

பின்வரும் நகரங்களில் அடுத்த அறிவிப்பு வரும் வரை அதன் சேவைகள் பின்வரும் நகரங்களில் கிடைக்காது என்று உபெர் அறிவித்தது: திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், டெல்லி என்.சி.ஆர், அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், தனபாத், ஜாம்ஷெட்பூர், ராஞ்சி, பெங்களூர், மைசூர், மங்களூர், மும்பை, நாக்பூர், புனே, அமிர்தசரஸ், சண்டிகர், ஜலந்தர், லூதியானா, அஜ்மீர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, உதய்பூர், ஹைதராபாத், ஆக்ரா, பரேலி, கான்பூர், லக்னோ, பிரயாகராஜ், வாரணாசி, அசன்சோல், துர்காபூர் மற்றும் சிலிகுரி.

கூடுதலாக, Uber நாடு முழுவதும் அதன் உபேர் பூல் (Uber Pool) மற்றும் உபெர் இன்டர்சிட்டி (Uber Intercity) சேவைகளை நிறுத்தியுள்ளது.

முன்னதாக, டெல்லி அரசு அறிவித்த தடையால் உபெர் மற்றும் ஓலா மார்ச் 31 வரை டெல்லியில் தங்கள் சேவையை நிறுத்தி வைத்தன. சமூக விலகியிருத்தல் அழைப்புகளுக்கு இணங்க கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ஓலா மற்றும் உபெர் நாட்டில் தங்கள் ஷேர் சவாரி சேவைகளை நிறுத்தி வைத்தனர். COVID-19 என கண்டறியப்பட்டால், அதன் ஓட்டுநர்-கூட்டாளர்களுக்கும் அவர்களது வாழ்க்கைத் துணைவியாருக்கும் ரூ.30,000 வழங்குவதாக ஓலா அறிவித்தது. அதிகபட்சம் 21 நாட்களுக்கு, தினசரி இழப்பீடாக ரூ.1,000 அடங்கும்.

டெல்லி அரசைத் தவிர, பஞ்சாப், உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகள் தடைகளை அறிவித்துள்ளன.

இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மார்ச் 24, காலை 10 மணி வரை 482 ஆக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. மொத்தம் 9 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிளின் அதிக விலையுள்ள மடிக்க முடியாத போனாக ஐபோன் 18 புரோ மேக்ஸ் வரலாம்: கசிவு தகவல்!
  2. விரிவாக்கப்பட்ட தரவு பரிமாற்ற ஆதரவுடன் ஐபோனில் இருந்து மாறுவதை எளிதாக்குகிறது 'ஆண்ட்ராய்டு 17'
  3. 2026-இல் உங்கள் ஏர்டெல் இ-சிம்மை (Airtel eSIM) செயல்படுத்துவது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  4. இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 'ஒன்பிளஸ் N6x' பேட்டரி திறன் வெளிப்படை
  5. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
  6. ஆப்பிள் ஹெல்த், மருத்துவப் பதிவுகளுடன் தனிப்பயன் பதில் தர ஓபன்ஏஐ 'சாட்ஜிபிடி ஹெல்த்' அறிமுகம்!
  7. iQOO Z11 Lite 5G vs Moto G37 Power vs Oppo K14x 5G: இந்தியாவில் விலை, அம்சங்கள் ஒப்பீடு
  8. 50-மெகாபிக்சல் கேமரா, 6,500mAh பேட்டரியுடன் iQOO Z11 Lite இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  9. மோட்டோ பேட் 70 ஆகஸ்ட் 9ல் இந்தியாவில் அறிமுகம்; டைமன்சிட்டி 6400, 10,200mAh பேட்டரியுடன் வருகிறது!
  10. வாட்ஸ்அப் இருபடிச் சரிபார்ப்பு(Two-Step Verification) PINக்கு பதிலாக வலுவான பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தக்கூடும்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »