கொரோனா வைரஸ்: முக்கிய நகரங்களில் கேப் சேவைகளை நிறுத்தியது உபெர்!

Uber has suspended its Uber Pool and Uber Intercity services across the country.

கொரோனா வைரஸ்: முக்கிய நகரங்களில் கேப் சேவைகளை நிறுத்தியது உபெர்!

அரசு உத்தரவுகளுக்கு இணங்க உபெர் தனது சேவைகளை நிறுத்தியது

ஹைலைட்ஸ்
  • இந்தியாவின் பல நகரங்களில் டாக்ஸி சேவைகள் நிறுத்தம் - உபேர்
  • டெல்லி, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், சண்டிகர் ஆகிய நகரங்கள் அடங்கும்
  • உபெர் அதன் உபெர் பூல் மற்றும் உபெர் இன்டர்சிட்டி சேவைகளையும் நிறுத்தியது
விளம்பரம்

நாவல் கொரோனா வைரஸ் தொற்றால், நாட்டின் பல நகரங்களைத் தவிர, டெல்லி-என்.சி.ஆர், மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் டாக்ஸி சேவைகளை நிறுத்தி வைப்பதாக உபெர் (Uber) திங்களன்று தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவியிருக்கும் நகரங்களை முற்றிலுமாக நிறுத்துமாறு பல மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களின் உத்தரவுகளுக்கு இணங்க உபெர் முடிவெடுத்துள்ளது.

பின்வரும் நகரங்களில் அடுத்த அறிவிப்பு வரும் வரை அதன் சேவைகள் பின்வரும் நகரங்களில் கிடைக்காது என்று உபெர் அறிவித்தது: திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், டெல்லி என்.சி.ஆர், அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், தனபாத், ஜாம்ஷெட்பூர், ராஞ்சி, பெங்களூர், மைசூர், மங்களூர், மும்பை, நாக்பூர், புனே, அமிர்தசரஸ், சண்டிகர், ஜலந்தர், லூதியானா, அஜ்மீர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, உதய்பூர், ஹைதராபாத், ஆக்ரா, பரேலி, கான்பூர், லக்னோ, பிரயாகராஜ், வாரணாசி, அசன்சோல், துர்காபூர் மற்றும் சிலிகுரி.

கூடுதலாக, Uber நாடு முழுவதும் அதன் உபேர் பூல் (Uber Pool) மற்றும் உபெர் இன்டர்சிட்டி (Uber Intercity) சேவைகளை நிறுத்தியுள்ளது.

முன்னதாக, டெல்லி அரசு அறிவித்த தடையால் உபெர் மற்றும் ஓலா மார்ச் 31 வரை டெல்லியில் தங்கள் சேவையை நிறுத்தி வைத்தன. சமூக விலகியிருத்தல் அழைப்புகளுக்கு இணங்க கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ஓலா மற்றும் உபெர் நாட்டில் தங்கள் ஷேர் சவாரி சேவைகளை நிறுத்தி வைத்தனர். COVID-19 என கண்டறியப்பட்டால், அதன் ஓட்டுநர்-கூட்டாளர்களுக்கும் அவர்களது வாழ்க்கைத் துணைவியாருக்கும் ரூ.30,000 வழங்குவதாக ஓலா அறிவித்தது. அதிகபட்சம் 21 நாட்களுக்கு, தினசரி இழப்பீடாக ரூ.1,000 அடங்கும்.

டெல்லி அரசைத் தவிர, பஞ்சாப், உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகள் தடைகளை அறிவித்துள்ளன.

இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மார்ச் 24, காலை 10 மணி வரை 482 ஆக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. மொத்தம் 9 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. Samsung ரசிகர்களே, ஜாக்கிரதை! 6 வருஷத்துக்கு அப்புறம் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்பீட் மாறுது
  2. Star Wars ஃபேன்ஸ்-க்கு Oppo-வோட சர்ப்ரைஸ்! Reno 14F Limited Edition பத்தி தெரிஞ்சுக்கோங்க
  3. உங்க Oppo OnePlus போன்ல Android 16 அப்டேட் வந்துருச்சா? AI Features & புது டிசைன் மிரட்டல்
  4. பட்ஜெட்-ல Nothing டிசைன்! Phone 3a Lite லான்ச்! Glyph Light-உடன் மிரட்டலான அம்சங்கள்
  5. உங்க Pixel போன் இன்னும் ஸ்மார்ட் ஆகிடுச்சு! Messages-ல போட்டோவை Remix பண்ணலாமா? மிஸ் பண்ணாதீங்க
  6. Samsung Galaxy போன்ல புது Spyware தாக்குதல்! WhatsApp மூலமா வந்த ஆபத்து நீங்க செக் பண்ணீங்களா?
  7. Vivo-ன் அடுத்த பவர்ஃபுல் மாடல்! 7000mAh பேட்டரி 1.5K AMOLED Display! விலை என்ன தெரியுமா?
  8. Apple மாதிரி Action Key-ஆ? Lava Agni 4-ன் மிரட்டல் லீக்ஸ்! ₹30,000-க்கு கம்மி விலையில் இந்தியன் கிங்
  9. Airtel-ல ரீசார்ஜ் விலை ஏறுது! வெறும் வாய்ஸ் மட்டும் வேணுமா? இனி எவ்வளவு செலவாகும்னு தெரிஞ்சுக்கோங்க!
  10. Samsung Galaxy S26, S26+ : Raised Camera Island உடன் வடிவமைப்பு மாற்றம் லீக்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »