கொரோனா வைரஸ்: முக்கிய நகரங்களில் கேப் சேவைகளை நிறுத்தியது உபெர்!

Uber has suspended its Uber Pool and Uber Intercity services across the country.

கொரோனா வைரஸ்: முக்கிய நகரங்களில் கேப் சேவைகளை நிறுத்தியது உபெர்!

அரசு உத்தரவுகளுக்கு இணங்க உபெர் தனது சேவைகளை நிறுத்தியது

ஹைலைட்ஸ்
  • இந்தியாவின் பல நகரங்களில் டாக்ஸி சேவைகள் நிறுத்தம் - உபேர்
  • டெல்லி, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், சண்டிகர் ஆகிய நகரங்கள் அடங்கும்
  • உபெர் அதன் உபெர் பூல் மற்றும் உபெர் இன்டர்சிட்டி சேவைகளையும் நிறுத்தியது
விளம்பரம்

நாவல் கொரோனா வைரஸ் தொற்றால், நாட்டின் பல நகரங்களைத் தவிர, டெல்லி-என்.சி.ஆர், மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் டாக்ஸி சேவைகளை நிறுத்தி வைப்பதாக உபெர் (Uber) திங்களன்று தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவியிருக்கும் நகரங்களை முற்றிலுமாக நிறுத்துமாறு பல மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களின் உத்தரவுகளுக்கு இணங்க உபெர் முடிவெடுத்துள்ளது.

பின்வரும் நகரங்களில் அடுத்த அறிவிப்பு வரும் வரை அதன் சேவைகள் பின்வரும் நகரங்களில் கிடைக்காது என்று உபெர் அறிவித்தது: திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், டெல்லி என்.சி.ஆர், அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், தனபாத், ஜாம்ஷெட்பூர், ராஞ்சி, பெங்களூர், மைசூர், மங்களூர், மும்பை, நாக்பூர், புனே, அமிர்தசரஸ், சண்டிகர், ஜலந்தர், லூதியானா, அஜ்மீர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, உதய்பூர், ஹைதராபாத், ஆக்ரா, பரேலி, கான்பூர், லக்னோ, பிரயாகராஜ், வாரணாசி, அசன்சோல், துர்காபூர் மற்றும் சிலிகுரி.

கூடுதலாக, Uber நாடு முழுவதும் அதன் உபேர் பூல் (Uber Pool) மற்றும் உபெர் இன்டர்சிட்டி (Uber Intercity) சேவைகளை நிறுத்தியுள்ளது.

முன்னதாக, டெல்லி அரசு அறிவித்த தடையால் உபெர் மற்றும் ஓலா மார்ச் 31 வரை டெல்லியில் தங்கள் சேவையை நிறுத்தி வைத்தன. சமூக விலகியிருத்தல் அழைப்புகளுக்கு இணங்க கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ஓலா மற்றும் உபெர் நாட்டில் தங்கள் ஷேர் சவாரி சேவைகளை நிறுத்தி வைத்தனர். COVID-19 என கண்டறியப்பட்டால், அதன் ஓட்டுநர்-கூட்டாளர்களுக்கும் அவர்களது வாழ்க்கைத் துணைவியாருக்கும் ரூ.30,000 வழங்குவதாக ஓலா அறிவித்தது. அதிகபட்சம் 21 நாட்களுக்கு, தினசரி இழப்பீடாக ரூ.1,000 அடங்கும்.

டெல்லி அரசைத் தவிர, பஞ்சாப், உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகள் தடைகளை அறிவித்துள்ளன.

இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மார்ச் 24, காலை 10 மணி வரை 482 ஆக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. மொத்தம் 9 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. புது iPhone விலை ஏறப் போகுது! காரணம் Samsung-ன் புது ப்ளான்! AI-ஆல நமக்கு வந்த வினை இது
  2. புது வேலை வாய்ப்பு! SBI YONO 2.0 வருது! இனி மத்த பேங்க் கஸ்டமரும் யூஸ் பண்ணலாமா? Google Pay-க்கு போட்டியா?
  3. புது ஃபிளாக்ஷிப் லீக்! Oppo Find X9s Plus-ல 200MP மெயின் கேமரா, 200MP டெலிஃபோட்டோ! கேமரா பிரியர்களுக்கு ஒரு ட்ரீட்
  4. புது Gaming போன்! OnePlus Turbo வருது! 8000mAh பேட்டரி, Snapdragon 8 Gen 5 சிப்செட்! விலை ₹60,000-க்குள் இருக்குமா?
  5. Apple ஃபேன்ஸ் ரெடியா? iOS 26 வருது! புது Home Device, Siri-ல் பெரிய மாற்றம்! என்னென்ன அம்சங்கள் இருக்கு?
  6. AI-ஆல நமக்கு வந்த வினை இது! 16GB RAM போன்கள் ஆடம்பரம் ஆகப் போகுது! 4GB போன்கள் மீண்டும் வரலாம்
  7. புது Reno போன்! Oppo Reno 15C வந்துருச்சு! 6,500mAh பேட்டரி, 3.5x ஆப்டிகல் ஜூம்! இந்தியால எப்போ வரும்?
  8. Foxconn அமெரிக்காவுக்குப் போகுது! $173 மில்லியன் முதலீடு! ஆனா, Apple-க்கு இதுல வேலையில்லை! காரணம் என்ன?
  9. புது OnePlus ஃபிளாக்ஷிப் கில்லர்! 15R லான்ச்சுக்கு முன்னாடியே விலை லீக்! 7,400mAh பேட்டரி, 165Hz டிஸ்பிளே
  10. Jio Happy New Year 2026: Gemini Pro AI உடன் 3 புதிய பிளான்கள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »