இனி ஆன்லைன்ல புக்கிங் செஞ்சு கொரோனா பரிசோதனை செஞ்சுக்கலாம்!

இனி ஆன்லைன்ல புக்கிங் செஞ்சு கொரோனா பரிசோதனை செஞ்சுக்கலாம்!

பிராக்டோவில், கோவிட்-19 கண்டறிதல் பரிசோதனையின் தொகை ரூ.4,500 ஆகும்.

ஹைலைட்ஸ்
  • கோவிட்-19 பரிசோதனைகள் இப்போது பிராக்டோவில் கிடைக்கின்றன
  • பிராக்டோ, கண்டறிதல் பரிசோதனைகளை நடத்துவதற்கு தைரோகேருடன் இணைந்துள்ளது
  • இதற்கு அரசாங்கமும் ஐ.சி.எம்.ஆரும் அங்கீகாரம் அளித்துள்ளன
விளம்பரம்

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதைத் தொடந்து, 'பிராக்டோ' இணையதளம் மூலம் வைரஸ் பரிசோதனையை ஆன்லைனில் செய்துகொள்ளலாம். 

பிராக்டோ நிறுவனம், தைரோகேருடன் இணைந்து கண்டறிதல் சோதனைகளை நடத்தவுள்ளது. இந்த சோதனையை நடத்த, இந்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இரண்டும் அங்கீகாரம் அளித்துள்ளது. வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள, மருத்துவரின் பரிந்துரை, மருத்துவர் கையெழுத்திட்ட பரிசோதனை கோரிக்கை படிவம் மற்றும் பரிசோதனை நேரத்தில் புகைப்பட அடையாள அட்டை வழங்க வேண்டும். 


பரிசோதனைக்கான விவரங்கள்:

  • பரிசோதனையின் முழுத்தொகை ரூ.4,500 ஆகும். 
  • https://www.practo.com/covid-test மற்றும் https://covid.thyrocare.com/-க்கு சென்று முன்பதிவு செய்யலாம்.
  • I2H-ன் சான்றளிக்கப்பட்ட ஃபிளெபோடோமிஸ்டுகள் நோயாளிகளின் வீடுகளிலிருந்து நேரடியாக மாதிரிகளை சேகரிப்பார்கள். 
  • ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களின் படி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். 
  • பரிசோதனையின் போது எடுக்கப்படும் ஸ்வாப், வைரல் போக்குவரத்து ஊடகத்தில் (VTM) சேகரிக்கப்பட்டு. 
  • கோவிட்-19 சோதனைக்கு தேர்வு செய்யப்பட்டதும், தைரோகேர் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்படும்.
  • மாதிரி சேகரிப்பட்ட 24-48 மணி நேரத்திற்குள் பிராக்டோ இணையதளத்தில், மருத்துவ ரிப்போர்ட் கிடைக்கும்.

கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் பரிசோதனை மிக முக்கியமானது. நோய்த்தொற்றின் அறிகுறிகளை உறுதிசெய்ய, ஆய்வகங்கள் மற்றும் மையங்களின் பட்டியலை விரிவுபடுத்துவதில் அரசு மும்முரமாக உள்ளது. Practo, வைரஸ் பரவியுள்ள பல பகுதிகளை அடையாளம் கண்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றவுள்ளது. இது போன்ற கடினமான காலங்களில், அனைத்து இந்தியர்களுக்கும், தரமான சுகாதாரத்தை வழங்குவத்தே எங்களின் முக்கிய குறிக்கோள் என்று, பிராக்டோவின் தலைமை சுகாதார அதிகாரி, டாக்டர் அலெக்சாண்டர் குருவில்லா (Alexander Kuruvilla) கூறினார்.  

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Practo, COVID 19, Coronavirus
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அசர வைக்கும் வசதிகளுடன் PhonePe கொண்டு வந்துள்ள UPI Circle அம்சம்
  2. Honor Power செல்போன் சீனாவில் வெற்றிகரமாக அறிமுகமாகி அமர்க்களம்
  3. கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கக்கூடிய Realme 14T வருகிறது
  4. சாம்சங் நிறுவனத்தின் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் Galaxy S25 Ultra
  5. Oppo K13 5G செல்போன் 67W வேக சார்ஜிங் சப்போர்ட் உடன் வெளியாகிறது
  6. Realme நிறுவனத்தின் Narzo 80 5G மற்றும் Narzo 80x 5G மாடல் செல்போன்கள் அறிமுகம்
  7. Motorola Edge 60 Stylus அட்டகாசமாக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது
  8. Huawei நிறுவனம் அறிமுகப்படுத்திய Huawei Watch Fit 3 ஸ்மார்ட்வாட்
  9. IPL போட்டிகளை முன்னிட்டு IPL 251 Prepaid ரீசார்ஜ் அறிமுகம் செய்தது BSNL
  10. AMOLED திரையுடன் வருகிறது புதிய Honor 400 Lite ஸ்மார்ட்போன்கள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »