கார்கிலில் 145 நாட்களுக்கு பிறகு மொபைல் இணைய சேவை தொடங்கியது!

tracker InternetShutdowns.in படி, 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் 105 இணைய பணிநிறுத்தங்கள் பதிவாகியுள்ளன.

கார்கிலில் 145 நாட்களுக்கு பிறகு மொபைல் இணைய சேவை தொடங்கியது!

ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளுடன் கார்கிலிலும் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன

ஹைலைட்ஸ்
  • இப்பகுதியில் பிராட்பேண்ட் சேவைகள் ஏற்கனவே செயலில் இருந்தன
  • கார்கிலுக்கு, முழுமையான சேவைகள் மீட்டமைக்கப்பட்டன
  • வியாழக்கிழமை, உ.பி.யில் இணைய இணைப்பை அரசாங்கம் நிறுத்தியது
விளம்பரம்

அரசியலமைப்பின் 370-வது பிரிவின் விதிகளை ரத்து செய்ததை அடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட மொபைல் இணைய சேவைகள் லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் 145 நாட்களுக்கு பிறகு மீட்டமைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ரத்து செய்யப்பட்ட ஆரம்ப நாட்களில் லேண்ட்லைன் மற்றும் மொபைல் சேவைகளை முற்றுகையிடுவதோடு, தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் 4-ஆம் தேதி இடைநீக்கமானது துல்லியமாக நடந்தது. கடந்த நான்கு மாதங்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காத நிலையில், கார்கிலுக்கு திரும்புவதற்கான முழுமையான இயல்புநிலையின் அடிப்படையில் இந்த சேவைகள் மீட்டமைக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிராட்பேண்ட் சேவைகள் ஏற்கனவே கார்கிலில் செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் மதத் தலைவர்கள் இந்த வசதியை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மறுசீரமைப்பு இறுதியாக கார்கிலில் செயல்படுத்தப்பட்டாலும், ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் மொபைல் இணைய சேவைகள் இன்னும் நிறுத்தப்பட்டுள்ளன. InternetShutdowns.in-ல் கிடைத்த தட பதிவின்படி, 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் 105 இணைய பணிநிறுத்தங்கள் பதிவாகியுள்ளன.

மேற்கு உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர், புலந்த்ஷஹர், முசாபர்நகர், மீரட், ஆக்ரா மற்றும் ஃபிரோசாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இணைய இணைப்பை அரசாங்கம் நிறுத்தியபோது, வியாழக்கிழமையன்று சமீபத்திய இடைநீக்கம் வெளிப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நடந்து வரும் போராட்டங்களின் போது தவறான தகவல்தொடர்புகளைத் தடுப்பது மற்றும் போலி செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதே, இதன் நோக்கமாக இருந்தது.

கடந்த வாரம், டெல்லியின் சில பகுதிகளில் இணைய இருட்டடிப்பு விதிக்கப்பட்டது. இது CAA-க்கு எதிராக எதிர்பார்க்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் பதிலளித்தது. டெல்லி காவல்துறை துணை ஆணையர், தொலைதொடர்பு ஆபரேட்டர்களுக்கு குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை இயக்கும் சேவைகளை, தலைநகரில் இணைய இணைப்புடன் ஐந்து மணி நேரம் நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்தார்.

இவ்வாறு கூறப்பட்டால், ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் இருக்கும் இணைய சேவைகளில் தற்போது ஏற்பட்டுள்ள நிறுத்தம், நாட்டின் மிக நீண்ட கால பணிநிறுத்தம் ஆகும். கார்கில் உட்பட லடாக்கின் சில பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட இடைநீக்கத்துடன் இது விதிக்கப்பட்டது. மேலும், 2019-ஆம் ஆண்டில் மட்டும், மாநிலத்தில் இணைய சேவைகளை 50 முறைகளுக்கு மேல் அரசாங்கம் தடைசெய்தது.

India Leads the World in Internet Shutdowns

WhatsApp Users in Kashmir Being Removed as Internet Shutdown Crosses 120 Days

Internet Shutdowns Have No Place in Digital India

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. Huawei Watch GT 6 Pro, GT 6: 21 நாள் பேட்டரி, IP69 ரேட்டிங் – இந்தியா விலை & அம்சங்கள்!
  2. OnePlus 15R, Pad Go 2 இந்திய அறிமுகம்: தேதி, அம்சங்கள் விவரம்!
  3. Oppo A6x: 6500mAh பேட்டரி, Dimensity 6300 – முழு விவரம்!
  4. 200MP கேமரா, 8000mAh பேட்டரி! HONOR 500 Pro-வில் Snapdragon 8 Elite – வெறித்தனமான அம்சங்களுடன் அறிமுகம்
  5. OnePlus ரசிகர்களே! உங்க 15R-ஆ இதுதான்! Snapdragon 8 Gen 5 சிப்செட்டோட புதிய Ace 6T போன்
  6. மொபைல்ல இல்ல, காருக்குள்ள ரே-டிரேசிங்! Dimensity P1 Ultra சிப்செட் – காருக்கான AI சக்தியை கொண்டுவந்த MediaTek
  7. 200MP, 7000mAh பேட்டரி... இனி சார்ஜ் பண்ற கவலையே இல்லை! Realme 16 Pro-வோட மிரட்டலான ஸ்பெக்ஸ் லீக்
  8. Phone 3 யூசர்களுக்கு தீபாவளி ட்ரீட்! Nothing OS 4.0 ஸ்டேபிள் அப்டேட் ரிலீஸ்—கிட்டத்தட்ட 8 புது வசதிகள்
  9. 8000mAh பேட்டரி கொண்ட OnePlus போனா? Ace 6T மாடலின் அசத்தல் வண்ணங்கள் ரிலீஸுக்கு முன்னாடியே வெளியீடு
  10. Oppo K15 Turbo Pro: Snapdragon 8 Gen 5, 8000mAh பேட்டரி லீக்.
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »