குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை… ஜியோ-வின் அடுத்த அதிரடி!

ரிலையன்ஸ் ஜியோ நிறுனவம், ஜியோ ஃபைபர் என்கின்ற தனது பிராட்பேண்டு சேவையை சீக்கிரமே சந்தையில் களமிறக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது

குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை… ஜியோ-வின் அடுத்த அதிரடி!
ஹைலைட்ஸ்
  • இந்த அதிவேக இணைய சேவை ரூ.1000-க்குள் கொடுக்கப்படலாம்
  • இந்த கனெக்‌ஷன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்யலாம்
  • இந்த ஆண்டு இறுதிக்குள் ஜியோ-வின் பிராட்பேண்டு சந்தைக்கு வரலாம்
விளம்பரம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுனவம், ஜியோ ஃபைபர் என்கின்ற தனது பிராட்பேண்டு சேவையை சீக்கிரமே சந்தையில் களமிறக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பிராட்பேண்டு 100 எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட இணைய சேவையை பயனர்பகளுக்கு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், ஜியோ ஃபைபர் சேவையை இந்தியாவின் முக்கிய நகரங்களில் சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் சீக்கிரமே இந்த சேவையை பொது மக்கள் பயன்பாட்டுக்கு ஜியோ நிறுவனம் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பிராட்பேண்டு சேவைக்கு ஒரு மாதத்துக்கு 1000 ரூபாய்க்குக் கீழே ஜியோ நிறுவனம் விலை நிர்ணயம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த பிராட்பேண்டு மூலம், அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் வசதியையும் பயனர்கள் பெற முடியும். 

ஏர்டெல் நிறுவனம், 300 எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட பிராட்பேண்டு சேவையை கடந்த மாதம் ஆரம்பித்தது. இதற்கு மாதாந்திர கட்டணம் 2,199 ரூபாய் ஆகும். இந்நிலையில், ஜியோ நிறுவனமும் ஏர்டெல்-க்கு போட்டியாக சேவையை அறிமுகம் செய்யும் என்று யூகிக்கப்படுகிறது.  

ஜியோ ஃபைபர், அகமதாபாத், சென்னை, ஜாம்நகர், மும்பை மற்றும் புது டெல்லியில் கடந்த இரண்டு வருடங்களாக சோதனை ஓட்டங்கள் செய்து வருகின்றது. இந்த சோதனை ஓட்டங்களில் இலக்கு வைத்த அனைத்தும் முடிந்துள்ளதாகவும், அதனால் பொதுப் பயன்பாட்டுக்கு பிராட்பேண்டு சேவையை அளிக்கும் முடிவை ஜியோ எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

ஜியோ நிறுவன சிம் கார்டை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 18.6 கோடியாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உள்ள நிலவரம் இது. சென்ற ஆண்டின் கடைசி காலாண்டு முடிவடையும் போது இந்த எண்ணிக்கை 16 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  2. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
  3. இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகம்
  4. எதிர்கால கேலக்ஸி போன்களில் வரவிருக்கும் சாம்சங்கின் புதிய 2D/3D டிஸ்ப்ளே தொழில்நுட்ப விவரங்கள்
  5. நீக்கப்பட்ட சாட்களின் அறிவிப்புகளைப் பெறும் பிழையைச் சரிசெய்து iOS 26.4.2 அப்டேட் வெளியிடப்பட்டது
  6. ஆண்ட்ராய்டு ஆப் பதிவுகளை விரைவுபடுத்த கூகுள் 'சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல்' அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது
  7. கூகுள் கிளவுட் நெக்ஸ்ட் 2026: புதிய ஜெமினி மற்றும் வொர்க்ஸ்பேஸ் இன்டலிஜென்ஸ் அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்தது
  8. ஒன்பிளஸ் நார்டு CE 6: 144Hz திரை, 50MP கேமரா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்தியா அறிமுகத்திற்கு முன் வெளியானது
  9. ரூ. 30,000-க்கு உட்பட்ட சிறந்த கைபேசிகள்: விவோ டி5 ப்ரோ, இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் மற்றும் பல மாடல்கள் இவை
  10. இந்தியாவில் மோட்டோரோலா Edge 70 Pro, ஒன்பிளஸ் Nord 6 மற்றும் ரெட்மி Note 15 Pro+: விலை & சிறப்பம்சங்கள் ஒப்பீடு
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »