ரிலையன்ஸ் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை வாங்கியது பேஸ்புக்! 

பேஸ்புக்கிலிருந்து ரூ.43,574 கோடி முதலீட்டை ஜியோ பெறும்.

ரிலையன்ஸ் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை வாங்கியது பேஸ்புக்! 

Photo Credit: Reuters

சுமார் 400 மில்லியன் பயனர்களைக் கொண்ட பேஸ்புக்கின் மிகப்பெரிய ஒற்றை சந்தை இந்தியாவாகும்

ஹைலைட்ஸ்
  • பேஸ்புக் முதலீட்டு மதிப்புகள் ஜியோ இயங்குதளங்கள் ரூ.4.62 லட்சம் கோடி
  • ரிலையன்ஸ் ஜியோ 2016-ன் பிற்பகுதியில் நடவடிக்கைகளைத் தொடங்கியது
  • வாட்ஸ்அப் ஜியோமார்ட்டுடன் ஒத்துழைக்கும்
விளம்பரம்

பேஸ்புக் மற்றும் இந்தியாவின் பணக்காரர் முகேஷ் அம்பானியின் ஜியோ டிஜிட்டல் தளம் இடையே ஒரு வணிக ஒப்பந்தத்தின் வதந்திகள் நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்தன, இப்போது இந்த ஒப்பந்தத்தின் வதந்திகள் உண்மையாகிவிட்டன. பேஸ்புக் மற்றும் ஜியோ இடையேயான வணிக ஒப்பந்தத்தில் இது உண்மை. இந்த ஒப்பந்தம் அமெரிக்க சமூக ஊடக நிறுவனமான அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒரு பகுதியான ஜியோ, 9.99 சதவீத பங்குகளில் பேஸ்புக்கிலிருந்து ரூ.43,574 கோடி முதலீட்டை பெறும்.

Google Pay மற்றும் Paytm போன்ற தளங்களுடன் போட்டியிட Facebook-ற்கு சொந்தமான வாட்ஸ்அப், இந்தியாவில் தனது டிஜிட்டல் கட்டண சேவையை வழங்க ஒப்புதல் பெற்ற நேரத்தில் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது. வாட்ஸ்அப்பில் இந்தியாவில் 400 மில்லியன் பயனர்கள் உள்ளனர். இது வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தையாகும். நாட்டில் சுமார் 80 சதவீத ஸ்மார்ட்போன் பயனர்களை சென்றடைகிறது.

சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், Reliance நிறுவனத்தின் இ-காமர்ஸ் வணிக JioMart உடன் ஒத்துழைப்பதில் அதன் செய்தி தளமான வாட்ஸ்அப்பை சிறிய வணிகங்களுடன் இணைக்க உதவும் என்று கூறுகிறது. சுமார் 400 மில்லியன் பயனர்களைக் கொண்ட பேஸ்புக்கின் மிகப்பெரிய ஒற்றை சந்தை, இந்தியா என்பதையும் கூறியுள்ளது.

Mukesh Ambani, Jio-வை டெலிகாம் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜியோ, 38.8 மில்லியன் சந்தாதாரர்களுடன் இவ்வளவு குறுகிய காலத்தில் நாட்டின் மிகப் பெரிய மொபைல் ஆபரேட்டராக மாற்றிவிட்டது. இதற்கு மிகப் பெரிய காரணங்களில் ஒன்று, நிறுவனத்தின் மிகக் குறைந்த விலை கட்டணத் திட்டங்களாகும், இது பெரும் நன்மைகளைத் தருகிறது.

கடந்த மாதம், பேஸ்புக், இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக Financial Times செய்தி வெளியிட்டது. ஆனால் கொரோனோ வைரஸின் மாற்றம் காரணமாக உலகளாவிய பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது.

© Thomson Reuters 2020

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. வருமான வரி தாக்கல் செய்யும் காலம் வந்தாச்சு: நீங்கள் தயாராக ChatGPT உதவும் 7 வழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்
  2. குழந்தைகளுக்கான கேம்கள் மற்றும் ஊடாடும் உள்ளடக்கங்களுடன் நெட்ஃபிக்ஸ் பிளேகிரவுண்ட் ஆப் அறிமுகம்
  3. இந்தியாவில் நத்திங் போன் 3a லைட் விலை உயர்வு: ஸ்மார்ட்போன் உற்பத்தி செலவு அதிகரிப்பதே காரணம்
  4. இனி கருப்பு நிறம் இல்லையா? ஐபோன் 18 ப்ரோ கசிந்த புதிய வண்ணங்கள் குறித்த தகவல்
  5. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா: 10x ஆப்டிகல் ஜூம் மற்றும் எக்ஸ்டெர்னல் லென்ஸ் கிட் வசதியுடன் அறிமுகம்
  6. ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு வாட்ஸ்அப் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளில் இரைச்சல் நீக்க வசதி அறிமுகம்
  7. ஏர் கூலிங் ஃபேன், 165Hz டிஸ்ப்ளேவுடன் சியோமி ரெட்மி K90 மேக்ஸ் இந்த மாதம் அறிமுகம்
  8. சாம்சங் கேலக்ஸி S27 ப்ரோ அடுத்த ஆண்டு 'Privacy Display' வசதியுடன் அறிமுகமாக வாய்ப்பு
  9. இன்பினிக்ஸ் நோட் 60 புரோ வடிவமைப்பு, வண்ணங்கள் வெளியீடு; விரைவில் இந்தியாவில் அறிமுகம்.
  10. ஓப்போ F33 புரோ இந்திய அறிமுகத் தேதி, விலை கசிந்தது; 50MP செல்ஃபி கேமரா இடம்பெற வாய்ப்பு.
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »