BSNL நெட்வொர்க்கில் புதிதாக BookMyFiber அறிமுகம்! இனி ஈசியாக பிராட்பேண்ட் பெறலாம்!

பிஎஸ்என்எல் ஃபைபர் இணைப்பு கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டு, நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது

BSNL நெட்வொர்க்கில் புதிதாக BookMyFiber அறிமுகம்! இனி ஈசியாக பிராட்பேண்ட் பெறலாம்!

வாடிக்கையாளர்களுக்கு ஏற்றத் திட்டங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஹைலைட்ஸ்
  • BookMyFiber மூலம் எளிதாக இணைய இணைப்பைப் பெறலாம்
  • இந்தப் போர்ட்டல் பயன்படுத்துவதற்கு மிகஎளிதானது
  • வாடிக்கையாளரின் இருப்பிடம் அப்படியே பதிவாகிறது
விளம்பரம்

பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் புதிதாக புக் மை ஃபைபர் (BookMyFiber) என்ற போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி எளிதாக இணைய இணைப்பு பெற முடியும். 

ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல், வோடஃபோன் போன்ற தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் இருந்தாலும், அதற்கு இணையாக மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் வாடிக்கையார்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகள், பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. 

அந்த வகையில், தற்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் BookMyFiber என்ற போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பூலோக வரைபடம் காட்டப்படும். அதில் நமது இருப்பிடத்தை ஜூம் செய்து குறிப்பிட்டாலே போதும்,  பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் ஃபைபர் இன்டர்நெட் கனெக்ஷன் வழங்கப்பட்டு விடும்.  இது ஜியோவின் ஃபைபர் திட்டத்துக்குப் போட்டியாக அமைகிறது.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் உயரதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் சில தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களது இருப்பிடத்தைக் குறிப்பிடும் போது, அதன் அட்சரேகை, தீர்க்கரேகை பதிவாகிவிடும். பின்பு, இந்தத் தகவல்கள் உள்ள FTTH அப்படியே FMS அமைப்பிற்கு தெரிவித்து, இணைய இணைப்புக்கான கோரிக்கை நிறைவேற்றப்படும்.

பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் இந்த BookMyFiber போர்ட்டல் பயன்படுத்துவதற்கு மிகஎளிதாக இருக்கும். வாடிக்கையாளர்கள் இதனை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பார்வையிட முடியும்.

பின்பு, அதில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பெயர், முகவரி, பின்கோடு, மாநிலம், இமெயில் முகவரி போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து ஃபைபர் கனெக்ஷன் திட்டங்கள் பட்டியலிடப்படும். அதில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றத் திட்டங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ஃபைபர் இணைப்பு கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டு, நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப விலை 430 ரூபாய் ஆகும். சில தொலைத்தொடர்பு வட்டங்களில் மட்டும் 499 ரூபாய் முதல் தொடங்குகிறது. 
 


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனுக்கு ரூ. 2,450 தள்ளுபடி: 6,000mAh பேட்டரி கொண்ட போன் குறைந்த விலையில் கிடைக்கிறது
  2. ரியல்மி 16டி 5ஜி போனுக்கு ரூ. 3,500 தள்ளுபடி: 8,000mAh பேட்டரி கொண்ட போனை குறைந்த விலையில் வாங்குங்கள்
  3. மேப்பிள் விற்பனை: ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ், 16 ப்ரோ, 15 மாடல்கள் ரூ.40,999 முதல் சலுகைகளுடன் கிடைக்கின்றன
  4. உலகின் முதல் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போன் மேம்படுத்தப்படுகிறது: ஹவாய் மேட் எக்ஸ்டி 2 டிசைன் கசிந்தது
  5. ஏர்டெல் ரூ.549 போஸ்ட்பெய்ட் திட்டத்தை நீக்கியது; அடுத்த மேம்படுத்தலாக ரூ.699 திட்டம் மாறுகிறது
  6. குரோம்புக் vs விண்டோஸ் லேப்டாப்: இந்தியாவில் நீங்கள் எதை வாங்க வேண்டும்?
  7. ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை ஹாட்ஸ்பாட் மூலம் பகிர முடியாது எனத் தகவல்: இதுவரை தெரிந்தவை
  8. இந்தியாவில் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியை நேரலையாக (Live Stream) பார்ப்பது எப்படி
  9. பயன்படுத்திய போன் வாங்கப்போறீங்களா? பணத்தைச் செலவிடும் முன் இந்த விஷயங்களை உடனே சரிபார்க்கவும்!
  10. அலுமினியம் ஃபாயில் வீட்டு வைஃபை-ஐ மேம்படுத்தி, தேவையான இடத்தில் அதிவேக நெட்வொர்க்கை வழிநடத்தும்!
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »