ஆரம்பத்தில் தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தின் வீணவங்காவில் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது, பிஎஸ்என்எல் வழங்கும் பாரத் ஏர் ஃபைபர் சேவை இப்போது நாட்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கெளரி சக் கிராமத்திற்கு வீடியோ மாநாட்டை நடத்துவதன் மூலம், BSNL, பாரத் ஏர் ஃபைபர் விரிவாக்கத்தை அறிமுகப்படுத்தியது
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது பாரத் ஏர் ஃபைபர் சேவையை பீகார், தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா மற்றும் தெலுங்கானா வட்டங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. நாட்டின் கிராமப்புறங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட இந்த சேவை, பாட்னா மாவட்டத்தில் கெளரி சக் (Gauri Chak) கிராமத்திற்கு அலுவலகத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கார்ப்பரேட்டின் வீடியோ மாநாடு மூலம் தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரால் ஐந்து வெவ்வேறு வட்டங்களில் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான டெல்கோ எதிர்காலத்தில் பாரத் ஏர் ஃபைபர் சேவையை அதன் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
ஆரம்பத்தில் தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தின் வீணவங்காவில் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது, BSNL வழங்கும் பாரத் ஏர் ஃபைபர் சேவை இப்போது நாட்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது கிராமப்புற வீடுகளுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளை கிராமங்களுக்கு கொண்டு வருவதற்காக ஆபரேட்டர் ஒரு public-private-partnership (PPP) மாதிரியை உருவாக்கியுள்ளார்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் கிராமவாசிகளுக்கும் மக்களுக்கும் புதிய சேவையை அணுகுவதற்காக, பிஎஸ்என்எல், தொழில்முனைவோர் மற்றும் வணிக கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது, அவர்கள் கடைசி மைல் நெட்வொர்க் அணுகலைப் பராமரிப்பார்கள்.
BSNL CMD PK புர்வார் (Purwar), பாரத் ஏர் ஃபைபரின் விரிவாக்கத்தை அறிவிக்கும் போது, இந்த சேவை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நம்பகமான குரல் மற்றும் இணைய இணைப்பை வழங்கும் என்று கூறினார். வாடிக்கையாளர்களின் கருத்துக்களை மேம்படுத்தவும், கள அலகுகளுக்கு களப்பயணங்களை மேற்கொள்ளவும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பிஎஸ்என்எல் வட்டத் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.
நகர்ப்புற பயனர்களுக்காக கடந்த ஆண்டு தொடக்கத்தில் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய Bharat Fibre பிராட்பேண்ட் இணைப்பிற்கு இணையாக பாரத் ஏர் ஃபைபர் சேவை இயங்குகிறது. இந்த ஆபரேட்டர், அடிப்படையில் ACT Fibernet, Airtel மற்றும் Jio Fiber போன்றவற்றை நாட்டில் அதன் விரிவாக்கப்பட்ட பிராட்பேண்ட் கவரேஜ் மூலம் எதிர்கொள்ள முயற்சிக்கிறார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Xbox Announces 3,200 Layoffs, Four Studio Divestments Through 2027; Plans Biggest Restructure in Its History
Redmi Note 17 and Poco M8 Plus Appear on BIS Certification Database, Might Launch in India Soon: Report