Airtel ரூ. 45 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, ரூ. 23 ப்ளானின் அதே பலன்களை வழங்குகிறது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும்.
ஏர்டெல், செய்தித்தாள்களில் இந்த விலை திருத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
அனைத்து வட்டங்களிலும் இருக்கும் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ. 23 ரீசார்ஜ் ப்ளான் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக ரூ. 45 ப்ரீபெய்ட் ப்ளானை அறிமுகப்படுத்துவதாக, ஏர்டெல் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் பொருள் அடிப்படை ப்ளானில் 95 சதவீத விலை உயர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை ஏற்கனவே அனைத்து வட்டங்களிலும் நேரலையில் உள்ளது. மேலும் தொலைதொடர்பு ஆபரேட்டர் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முக்கிய செய்தித்தாள்களிலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரூ. 45 ப்ரீபெய்ட் ரீசார்ஜானது, ரூ. 23 ப்ரீபெய்ட் ப்ளானைப் போன்ற அதே பலன்களை வழங்கும்.
புதிய பொது அறிவிப்பில் புதிய ரூ. 45 ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி குரல் அழைப்பை வினாடிக்கு 2.5 பைசா, தேசிய வீடியோ அழைப்புகளுக்கு வினாடிக்கு 5 பைசா மற்றும் டேட்டாவுக்கு MB-க்கு 50 பைசா ஆகியவற்றை வழங்கும். எஸ்எம்எஸ் கட்டணம், உள்ளூர் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ. 1, தேசிய எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ. 1.5 மற்றும் சர்வதேச செய்திகளுக்கு எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ. 5 ஆகும். புதிய ரூ. 45 ப்ளான் 28 நாட்கள் செல்லுபடியாகும். இப்போது, அதே பலன்களை வழங்கக்கூடிய ரூ. 23 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் நிறுத்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விலை நிர்ணயம் இப்போது Airtel Thanks app மற்றும் வலைத்தளத்திலும் நேரலையில் உள்ளது. இது முதலில் DreamDTH-ல் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பில், “இந்த அறிவிப்பு அனைத்து சேவை பகுதிகளிலும் உள்ள பாரதி ஏர்டெல் லிமிடெட் (Bharti Airtel Limited) மற்றும் பாரதி ஹெக்ஸாகாம் லிமிடெட் (Bharti Hexacom Limited) (‘Airtel') ஆகியவற்றின் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கானது. 29 டிசம்பர் 2019 முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், தற்போதுள்ள SUK அடிப்படை ப்ளான் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சேவைகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ரூ. 45 அல்லது அதற்கு மேற்பட்ட வவுச்சருடன் ரீசார்ஜ் செய்வது கட்டாயமாகும்…. மேலே ரூ. 45 வவுச்சருடன் ரீசார்ஜ் செய்யாவிட்டால், அனைத்து சேவைகளும் சலுகைக் காலத்திற்குப் பிறகு நிறுத்தப்படும். ”
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகை காலம் 15 நாட்கள் வரை இருக்கும். சலுகை காலம் முடிந்த பிறகு, சந்தாதாரர் ரூ. 45 ரீசார்ஜ் செய்யாவிட்டால், சேவைகள் நிறுத்தப்படும். மேலும், சந்தாதாரர் மற்றொரு எஸ்.டி.வி / காம்போ / டாப்-அப் வவுச்சருடன் ரூ. 45-ஐ விட அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ ரீசார்ஜ் செய்தால், செல்லுபடியின் காம்போ / எஸ்.டி.வி வவுச்சர் ரீசார்ஜுடன் கட்டண திட்டத்தின் செல்லுபடி நீட்டிக்கப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
OnePlus Turbo Reportedly Listed on Geekbench With Snapdragon 8s Gen 4 SoC: Expected Specifications, Features
iQOO Z11 Turbo Design Teased; Could Launch With 6.59-Inch Display, Snapdragon 8 Gen 5 SoC