ஏர்டெல் நிறுவனம், தன்னுடைய மிகவும் பிரபலமான மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற ப்ரீபெய்ட் திட்டமான ₹249 திட்டத்தை அதிரடியாக நீக்கியுள்ளது.
Photo Credit: Reuters
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்
இந்தியாவில் டெலிகாம் சேவைகள், நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. போட்டிமிகுந்த இந்த சந்தையில், வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், மேலும் பல புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, மற்றும் வோடபோன்-ஐடியா ஆகியவை புதுப்புது சலுகைகளையும், விலை மாற்றங்களையும் அடிக்கடி செய்து வருகின்றன. அந்த வரிசையில, ஏர்டெல் நிறுவனம், தன்னுடைய மிகவும் பிரபலமான மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற ப்ரீபெய்ட் திட்டமான ₹249 திட்டத்தை அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த அறிவிப்பு, குறைந்த விலையில் டேட்டா மற்றும் அழைப்பு வசதிகளைப் பயன்படுத்தி வந்த பல லட்சக்கணக்கான பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெலிகாம் சந்தையில், நிறுவனங்களின் லாபத்தை அளவிடுவதற்கான மிக முக்கியமான காரணி, ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருமானம் (Average Revenue Per User - ARPU) ஆகும். இந்த ARPU-ஐ உயர்த்துவதற்காக, நிறுவனங்கள் அவ்வப்போது சில தந்திரோபாய முடிவுகளை எடுக்கும். நேரடியாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதற்குப் பதிலாக, குறைந்த விலையுள்ள திட்டங்களை நீக்கி, வாடிக்கையாளர்களை அதிக விலை கொண்ட திட்டங்களுக்கு மாற்றுவது ஒரு பொதுவான உத்தி. ஏர்டெல்-ன் இந்த ₹249 திட்டம் நீக்கம், அதே நோக்கத்துடன் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த முடிவு, சமீபத்தில் ஜியோ தனது ₹249 திட்டத்தை நீக்கியதை தொடர்ந்து வந்துள்ளது. ஜியோவின் இந்த முடிவுக்குப் பிறகு, ஏர்டெல்-ம் அதே பாதையில் பயணித்திருப்பது, டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் லாபத்தை அதிகரிக்க ஒன்றுபட்டு செயல்படுவதை காட்டுகிறது.
இப்போது, இந்த திட்டம் நீக்கப்பட்டுவிட்டதால், பயனர்கள் இனிமேல் ₹299 திட்டத்திற்கு மாற வேண்டும். இந்த திட்டமானது, நீக்கப்பட்ட திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது. ஆனால், ₹50 கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த ₹299 திட்டத்தில், தினமும் 1GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, ₹50 அதிகமாகச் செலுத்துவதன் மூலம், பயனர்களுக்கு கூடுதலாக 4 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இது ஒருபக்கம் பயனர்களுக்கு ஒரு சிறிய ஆறுதல் அளித்தாலும், குறைந்த விலை திட்டமே போதுமானது என்று நினைத்தவர்களுக்கு இது ஒரு கூடுதல் செலவாகும்.
ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களும் ஒரே நேரத்தில் தங்கள் குறைந்த விலை திட்டங்களை நீக்கியதால், வோடபோன்-ஐடியா (Vi)-வும் இதேபோன்ற ஒரு முடிவை விரைவில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள், டெலிகாம் சந்தையில் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரிக்கச் செய்யும். இனி, குறைந்த டேட்டா மற்றும் குறுகிய கால வேலிடிட்டி தேவையுள்ள பயனர்கள், தங்களுக்குத் தேவையில்லாத அதிக டேட்டா மற்றும் கூடுதல் நாட்களுக்குச் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம், நிறுவனங்களின் வருவாயை உயர்த்தி, வருங்காலத்தில் 5G நெட்வொர்க் விரிவாக்கம் போன்ற பெரிய திட்டங்களுக்கு உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 15 FS 5G Price and Specifications Surface on Retailer's Website, Could Launch Soon