2020-ல நாங்கதான் பெஸ்ட் போன் கம்பெனியா இருப்போம்: சொல்கிறது ஹூவேய்!

அமெரிக்க அரசாங்கத்துக்கும் ஹூவேய் நிறுவனத்துக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக பிரச்னை நிலவி வருகிறது.

2020-ல நாங்கதான் பெஸ்ட் போன் கம்பெனியா இருப்போம்: சொல்கிறது ஹூவேய்!
ஹைலைட்ஸ்
  • 2019-ல் இலக்கை அடைவது கடினம்: ஹூவேய்
  • அமெரிக்க, பிரேசில் சந்தைகளில் கால் பதிக்கவில்லை ஹூவேய்
  • ஹானர், உலகின் 4வது பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவெடுக்கலாம்
விளம்பரம்

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் போது, ஹூவேய்தான் உலகின் மிகப் பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருக்கும் என்று அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ, ரிச்சர்டு யூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹூவேய் மற்றும் ஹானர் நிறுவன போன்கள் கூட்டு விற்பனையால், சீக்கிரமே தாங்கள் பெஸ்ட் ஸ்மார்ட் போன் கம்பெனியாக உருவெடுப்போம் என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் யூ கூறியுள்ளார். 2019-ல் தங்கள் கம்பெனி, நம்பர் 1 இடத்தைப் பிடிக்க வாய்ப்பில்லை என்று கூறும் யூ, 2020-ல் அதை அடைந்துவிடுவோம் என்கிறார். 

ஹூவேய் நிறுவனத்தில் பி30 வகை போன்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி கருத்தை ரிச்சர்டு யூ தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அமெரிக்கா, பிரேசில், தென் கொரியா போன்ற இடங்களில் இன்னும் ஹூவேய் கால் பதிக்காத போதும், அடுத்த ஆண்டு முதலிடத்தைத் தன் நிறுவனம் பிடித்துவிடும் என்கிறார் யூ. அதே நேரத்தில் 2019 ஆம் ஆண்டு முடிவதற்குள், அந்த இலக்கை அடைவது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும் என்கிறார் யூ.

அமெரிக்க அரசாங்கத்துக்கும் ஹூவேய் நிறுவனத்துக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக பிரச்னை நிலவி வருகிறது. இதனால், தங்கள் நிறுவனத்திற்கு எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றதற்கு, ‘உண்மையில் அந்த விவகாரம் எங்கள் நிறுவனம் குறித்து பலர் தெரிந்துகொள்ளவே உதவியது. இதுவரை ஹூவேய் பற்றி கேள்விப்படாதவர்கள் கூட இப்போது அது குறித்து தெரிந்து வைத்துள்ளார்கள்' என்று சொல்கிறார். 

2018 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஸ்மார்ட் போன் விற்பனை உலகளவில் சரிந்தபோதும், ஹூவேய் நிறுவனத்தின் போன் சேல் மிகவும் அதிகமாக இருந்துள்ளது. இது ரிச்சர்டு யூ-வின் நம்பிக்கைக்குக் காரணமாக இருக்கலாம். மேலும் ஒரு செய்திக் குறிப்பில், ‘2018 இரண்டாவது காலாண்டில், உலக அளவில், போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி ஹூவேய், இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. சாம்சங் மட்டுமே ஹூவேய் வழியில் இருக்கிறது' என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2018 நான்காவது காலாண்டில் ஆப்பிள், மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது என்றும் அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஐபோன் அல்ட்ரா வெள்ளை நிறத்தில் அறிமுகமாக வாய்ப்பு; வேப்பர் சேம்பர் கூலிங் வசதியை கொண்டிருக்கலாம்
  2. ஐடெல் அக்வா IP67 ரேட்டிங், 1,200mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  3. மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் லேப்டாப் அல்ட்ரா பிளாக்வெல் RTX GPU, என்விடியா RTX ஸ்பார்க் சூப்பர்சிப் உடன் அறிவிப்பு
  4. ஏசர் ஆஸ்பியர் எக்ஸ் 16, ஆஸ்பியர் 18 ஏஐ லேப்டாப்புகள் மற்றும் சி27, சி24 ஆல்-இன்-ஒன் டெஸ்க்டாப்புகள் அறிமுகம்
  5. இன்டெல் கோர் அல்ட்ரா 9 சிபியு கொண்ட ஏசர் பிரிடேட்டர் ஹெலியோஸ் 18 ஏஐ கேமிங் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது
  6. சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 8, ஃபோல்ட் 8 அல்ட்ரா மாடல்களின் புதிய வடிவமைப்பு நிஜப் படங்களில் கசிந்தது
  7. ஜூன் 2026-இல் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+, சியோமி 17டி மற்றும் லாவா போல்ட் என்2 5ஜி போன்கள் அறிமுகமாகின்றன
  8. ஆதார் அடிப்படையிலான கட்டண முறை (AePS) விளக்கம்: இது என்ன, எப்படி செயல்படுகிறது, இதன் அம்சங்கள் மற்றும் பல
  9. தொலைந்த அல்லது திருடப்பட்ட டெபிட் அல்லது கிரெடிட் கார்டை எவ்வாறு பிளாக் செய்வது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  10. ஜூன் 4ல் மோட்டோ எட்ஜ்70 ப்ரோ+ இந்தியாவில் அறிமுகம்: 16GB ரேம்,6500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்கள் வெளியீடு!
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »