இனி செல்போன்களுக்கு வேறு வேறு சார்ஜர் தேடி அலையவேண்டியதில்லை.

2025 முதல் இந்தியாவில் விற்கப்படும் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கு Common Charger Rule அமலுக்கு வர உள்ளது.

இனி செல்போன்களுக்கு வேறு வேறு சார்ஜர் தேடி அலையவேண்டியதில்லை.

Photo Credit: Unsplash

ஹைலைட்ஸ்
  • 2025 முதல் இந்தியாவில் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு Common Charger R
  • பரவலாகப் பயன்படுத்தப்படும் USB Type-C போர்ட்டாக இருக்கலாம்
  • இந்த உத்தரவு 2026 முதல் மடிக்கணினிகளிலும் அமல்படுத்தப்படலாம்
விளம்பரம்

இந்தியாவில் விற்கப்படும் செல்போன்களுக்கு பொதுவான சார்ஜிங் கனெக்டர் விதியை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது பரவலாகப் பயன்படுத்தப்படும் USB Type-C போர்ட்டாக இருக்கலாம் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. 2022ல் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஆணையைப் போலவே, இந்த விதி அமலுக்கு வந்தால் பல சாதனங்களை சார்ஜ் செய்ய ஒரே கேபிளைப் மக்கள் பயன்படுத்தலாம். வேறு வேறு சார்ஜிங் பின் வயர்களை தேடி அலைய வேண்டியதில்லை. 

இன்னும் சில வருடங்களில் லேப்டாப்களை சார்ஜ் செய்யவும் டைப்-சி போர்ட்டைப் பயன்படுத்துவதை அரசாங்கம் கட்டாயப்படுத்தலாம். இந்த விதி  2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த விதி பல வகையான கேபிள்களால் உருவாகும் மின்-கழிவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் எல்லா சாதனங்களையும் ஒரே கேபிள் மூலம் சார்ஜ் செய்ய முடியும்.

2022ல் ஐரோப்பிய ஒன்றியம் இதேபோன்ற உத்தரவை நிறைவேற்றியது, ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், கேமராக்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஹெட்செட்கள், கையடக்க வீடியோ கேம் கன்சோல்கள் மற்றும் போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் போன்ற சாதனங்கள் முழுவதும் USB Type-C சார்ஜிங் போர்ட் மூலம் சார்ஜ் செய்யப்படும் முறையாக மாற்றியது. இந்த விதியின் காரணமாக ஆப்பிள் நிறுவனமும் USB Type-C போர்டுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2023ல் iPhone 15 USB Type-C போர்ட் மூலமே சார்ஜ் செய்யப்படுகிறது. 

இந்தியாவில் தொழில்துறை நிறுவனங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் போன்ற மின்னணு சாதனங்களுக்கான சார்ஜிங் போர்ட்டாக USB Type-C மாற்றப்படுவதற்கு ஒருமித்த கருத்து எட்டப்பட்டது என கூறினார். எந்த காலக்கெடுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்தியா இப்போது பொதுவான சார்ஜர் விதிகளை அறிவிக்க தயாராகி வருகிறது.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஏற்கனவே பதிவேற்றிய கோப்புகளை எளிதாகப் பயன்படுத்த சாட்ஜிபிடியில் புதிய அம்சம் அறிமுகம்
  2. கூகுள் டிவி-க்கான ஜெமினி மேம்பாடு: நேரலை விளையாட்டு ஸ்கோர்கார்டுகள் மற்றும் ஊடாடும் கல்வி காட்சிகள் அறிமுகம்
  3. ஜெமினியில் 3D அவதார் அம்சத்தைச் சேர்க்க கூகுள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்
  4. பிரபலமான 'சோரா' AI வீடியோ செயலியை மூடுகிறது ஓபன்ஏஐ; டிஸ்னியுடனான மெகா ஒப்பந்தமும் முறிவதாகத் தகவல்
  5. தாய்லாந்தின் NBTC சான்றிதழ் தளத்தில் சியோமி 17T ப்ரோ: விரைவில் சர்வதேச அளவில் அறிமுகம்
  6. முழுத்திரை வசதி கொண்ட ஐபோன் 20 இல்லையா? ஆப்பிளின் 20-வது ஆண்டு மாடலில் அதன் மிக முக்கிய அம்சம் ஏன் இடம் பெறாமல் போகலாம்?
  7. ஐபோன்களுக்கான iOS 26.4 அப்டேட்: ஆப்பிள் மியூசிக்கில் AI மூலம் உருவாக்கப்பட்ட பிளேலிஸ்ட்கள் மற்றும் 8 புதிய எமோஜிகள்
  8. சாம்சங் கேலக்ஸி S27 அல்ட்ராவில் டிஜிடைசருடன் கூடிய 'S Pen' ஆதரவு தொடர்ந்து இடம்பெறும்
  9. இந்தியாவில் வெளியாகும் முன்பாக ரியல்மி 16 5G பேட்டரி திறன், நிறங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் வெளியீடு
  10. BSNLல் CNAP வசதி தொடக்கம்; நாடு தழுவிய 'காலர் ஐடி' சேவை விரைவில் எதிர்பார்ப்பு
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »