ஆப்பிள்-க்கு சாம்ஸங் கொடுத்த இழப்பீடு… முடிவக்கு வந்த 7 ஆண்டு பிரச்னை!

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐ-போனிலிருந்த டிசைன்களை அப்படியே நகல் செய்ததாகக் கூறி சாம்ஸங் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஆப்பிள்-க்கு சாம்ஸங் கொடுத்த இழப்பீடு… முடிவக்கு வந்த 7 ஆண்டு பிரச்னை!
ஹைலைட்ஸ்
  • 7 ஆண்டுகளுக்கு முன்னர் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது
  • இந்த வழக்கில் சாம்ஸங் நிறுவனத்துக்கு எதிராக தீர்ப்பு வந்தது
  • சாம்ஸங், ஆப்பிள்-க்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்தது எனத் தகவல் இல்லை
விளம்பரம்

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐ-போனிலிருந்த டிசைன்களை அப்படியே நகல் செய்ததாகக் கூறி சாம்ஸங் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக நடந்த வந்த நிலையில் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கிய தயாரிப்பான ஐ-போனின் டிசைன்களை சாம்ஸங் காப்பியடித்ததாக கூறி, ஆப்பிள் நிறுவனம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்ற மாதம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், ‘சாம்ஸங் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் டிசைனை நகல் செய்ததற்காக 3,700 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டும். இழப்பீடு கொடுத்தலுக்குப் பிறகு, இது தொடர்பாக இரு நிறுவனங்களும் தொடுத்துள்ள மற்ற வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்’ என்று உத்தரவிட்டது. 

இதையடுத்து, சாம்ஸங் நிறுவனம், ஆப்பிளுக்கு இழப்பீடு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எவ்வளவும் பணம் கைமாறியது என்பது குறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. 

இது குறித்து ஆப்பிள் நிறுவனம், ‘இந்த வழக்கு என்பது பணத்தை குறிவைத்து நடத்தப்பட்டதில்லை. இதை நாங்கள் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். ஆப்பிள் நிறுவனத்தில் கடும் உழைப்பைச் செலுத்தி டிசைன்களை உருவாக்கும் ஊழியர்களின் உழைப்பை நாங்கள் காக்க வேண்டும் என்று நினைத்தோம்’ என்று மட்டுமே கூறியது. எவ்வளவு இழப்பீடு கொடுக்கப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கவில்லை. 

சாம்ஸங் நிறுவனம், இந்த விவகாரம் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டது. மொபைல் தயாரிப்பில் உலக அளவில் முண்ணனியில் இருக்கும் இரண்டு நிறுவனங்களுக்கு மத்தியில் நடந்த இந்த வழக்கு சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்துக்கு, சாம்ஸங் இழப்பீடு கொடுத்தது அந்நிறுவனத்துக்கு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »