குழந்தைகள் மனதில் வன்முறையைத் தூண்டுகிறது - நேபாளத்தில் பப்ஜி கேம்மிற்கு தடை

பப்ஜி விளையாட்டு உயிர்வாழ்வதற்காக பின்னணியில் நிகழும போர் விளையாட்டு

குழந்தைகள் மனதில் வன்முறையைத் தூண்டுகிறது - நேபாளத்தில் பப்ஜி கேம்மிற்கு தடை

பப்ஜி விளையாட்டின் உள்ளடக்கம் வன்முறையைத் தூண்டுகிறது

விளம்பரம்

பிரபலமான ஆன்லைன் விளையாட்டான பப்ஜி நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. பப்ஜி விளையாட்டின்  உள்ளடக்கம் குழந்தைகளுக்கு எதிர்மறையான வன்முறையை தூண்டக்கூடிய வகையில் இருப்பதாக அதிகாரியொருவர் கூறியுள்ளார். இந்த பப்ஜி விளையாட்டில் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் மிகவும் அடிமைப்பட்டுள்ளனர் என்று நேபாள தொலைத் தொடர்பு அதிகாரியான சந்திப் அதிகரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இந்த தடை இன்று வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. 

ஹிமாலயன் தேசிய கூட்டாட்சி விசாரணை அதிகாரியிடம் இருந்து வந்த வேண்டுகோளைத் தொடர்ந்து அனைத்து இணைய சேவை வழங்குநர்கள், மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் நெட்வொர்க் சேவை வழங்குபவர்கள் வியாழக்கிழமை முதல் பப்ஜி விளையாட்டு ஸ்ட் ரிமிங்கை தடுக்க தடை விதித்துள்ளது. 

2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டுகளில் பப்ஜி விளையாட்டு மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த மொபைல் கேம்ஸை டென்செண்ட் கேம்ஸ்க்கு உரிமையான லைட்ஸ்பீடு மற்றும் க்வாண்டம் ஸ்டூடியோ உருவாக்கியது. பப்ஜி விளையாட்டு உயிர்வாழ்வதற்காக பின்னணியில் நிகழும் போர் விளையாட்டு. இந்த விளையாட்டை ஆன்லைனின் 12 பேர் இணைந்து விளையாட முடியும். ஒருவரையொருவர் போராடி பிறரை வெளியேற்றுவதுதான் இந்த விளையாட்டின் அம்சமாக உள்ளது.

இந்த விளையாட்டினால் எந்தவொரு துயர்மிகு சம்பவம் நடைபெறவில்லை. மாறாக பெற்றோர்கள்கு, குழந்தைகளின் படிப்பு கெடுவதாலும்  அன்றாட வேலைகளைக் கூட பாராமல் விளையாட்டில் ஈடுபடுவதாகவும் கவலை தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அதிகாரி தெரிவித்தார். 

Written with inputs from Reuters


If you're a fan of video games, check out Transition, Gadgets 360's gaming podcast. You can listen to it via Apple Podcasts or RSS, or just listen to this week's episode by hitting the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா முன்பதிவுத் தொடக்கம்; அதன் சேமிப்பு மற்றும் நிறங்கள் குறித்த விவரங்கள் வெளியானது
  2. இந்தியாவில் மோட்டோ பேட் 60 ப்ரோ மற்றும் மோட்டோ பேட் 60 நியோ மாடல்களின் விலை உயர்வு: டிப்ஸ்டர் தகவல்
  3. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ இந்திய அறிமுகத் தேதி அறிவிப்பு; நிறங்கள், முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன
  4. 9,020mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் Vivo T5 Pro 5G இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  5. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா, கேலக்ஸி S25 FE மற்றும் கேலக்ஸி S25 மாடல்களின் விலை குறைப்பு
  6. டைமென்சிட்டி 6360 மேக்ஸ் சிப், 7,000mAh பேட்டரியுடன் Oppo F33 5G இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  7. ஒப்போ F33 ப்ரோ 5G இந்தியாவில் 7,000mAhபேட்டரி, 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் அறிமுகம்: விலை,சிறப்பம்சங்கள்
  8. கூகுள் குரோமில் ஒரே கிளிக்கில் AI பணிகளைச் செய்ய உதவும் AI-ஆற்றல் கொண்ட 'Skills' அம்சம் அறிமுகம்
  9. கூகுள் ஆப்ஸ் இணைப்பு மற்றும் மேம்பட்ட AI பதில்களுடன் இந்தியாவில் அறிமுகமானது ஜெமினி பெர்சனல் இன்டெலிஜென்ஸ்
  10. ஒன்பிளஸ் Ace 6 Ultra விரைவில் அறிமுகமாவது உறுதி; டிசைன் மற்றும் நிறம் டீஸ் செய்யப்பட்டது
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »