வாட்ஸ்அப்பில் தகவலை மட்டுமல்ல, பணத்தையும் பரிமாற்றிக்கொள்ளலாம்!

இன்னும் அதிகாரப்பூர்வமான அறிமுக நாள் அறிவிக்கப்படவில்லை.

வாட்ஸ்அப்பில் தகவலை மட்டுமல்ல, பணத்தையும் பரிமாற்றிக்கொள்ளலாம்!
விளம்பரம்

பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, இந்த ஆண்டு இறுதியில், யுபிஐ(UPI) அடிப்படையிலான பணப் பரிவர்த்தனை சேவையைத் தொடங்கவுள்ளது. இதனை வியாழக்கிழமையன்று, உலகளாவிய தலைவர் வில் காட்கார்ட் (Will Cathcart) அறிவித்தார்.

வாட்ஸ்அப் கடந்த ஆண்டு ஒரு மில்லியன் பயனர்களுக்கு இந்த பரிவர்த்தனை சேவையின் சோதனை ஓட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்த ​​சேவை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது

"இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க, இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடு முழுவதும் இந்த சேவையைத் (பணப் பரிவர்த்தனை) தொடங்கலாம்" என்று ஒரு நிகழ்வில் கேத்கார்ட் கூறினார்.

இந்திய நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 2023-ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஓமிடியார் நெட்வொர்க் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (பி.சி.ஜி) ஆகியவற்றின் அறிக்கையின்படி, ரூ. 3 லட்சம் முதல் ரூ.75 கோடி வரை ஆண்டு வணிக வருவாய் வைத்திருக்கும் எம்.எஸ்.எம்.இ உரிமையாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், இந்த திட்டம் முழுமையாக அறிமுகமான பின், வாட்ஸ்அப் பணப் பரிவர்த்தனையை பயன்படுத்துவார்கள் என கூறியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தனது டிஜிட்டல் கட்டண சேவையை தொடங்க இந்தியாவின் ஒழுங்குமுறை விதிமுறைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறினார்.

காந்த் மேலும் பேசுகையில் "அனைத்து ஒழுங்குமுறை விதிமுறைகளையும் பூர்த்தி செய்தவுடன் இந்தியாவில் வாட்ஸ்அப் பே-யை (WhatsApp Pay) எதிர்பார்க்கலாம்" எனக் கூறினார்.

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க், கடந்த ஏப்ரல் மாதத்தில் வாட்ஸ்அப் பே-யை இந்தியாவில் தொடங்க இந்த நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அறிவித்திருந்தார்.

இந்தியாவில் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது (பேஸ்புக் நாட்டில் மேலும் 300 மில்லியனைக் கொண்டுள்ளது). வாட்ஸ்அப் யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் பே-யைத் தொடங்கினால், பேடிஎமின் 230  மில்லியன் பயனர்கள் என்ற எண்ணிக்கையை எளிதில் கடந்துவிடும்.

நாடு முழுவதும் பணப் பரிவர்த்தனை சேவையைத் தொடங்குவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு பூர்த்தி செய்துவிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

ஆக, விரைவில் வாட்ஸ்அப் பே சேவையை ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்க்கலாம். 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் சியோமி பேட் 8 இன் விலை உயர்ந்தது: இப்போது அதன் விலை எவ்வளவு என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
  2. இந்தியாவில் வாங்குபவர்களின் முடிவுகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக மெட்டா ஆய்வு கூறுகிறது
  3. கூகுள் ஜெமினி அவதார் மூலம் பயனர்கள் தங்களை உள்ளடக்கிய AI வீடியோக்களை உருவாக்கலாம்
  4. சியோமி 17T, விவோ X200T மற்றும் சாம்சங் A57 போன்களின் விலை, அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்களின் முழு ஒப்பீடு
  5. வி இந்தியாவில் சமூக ஊடகங்களில் அதிவேக சரிபார்ப்பிற்காக சைலண்ட் மொபைல் வெரிஃபிகேஷனை அறிமுகம் செய்கிறது
  6. சியோமி டிவி FX மினி எல்இடி சீரிஸ் இந்தியாவில் 75 அங்குலம் வரையிலான திரையுடன் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  7. சியோமி 17T இந்தியாவில் 6,500mAh பேட்டரி மற்றும் லைக்கா கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  8. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ இந்தியாவில் 6,500mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  9. ஆண்ட்ராய்டில் போலி அழைப்புகளைக் கண்டறியும் புதிய பாதுகாப்பு வசதியை கூகுள் உலகளவில் அறிமுகம் செய்கிறது
  10. அனைத்து பயனர்களுக்கும் 'எக்ஸ்டெண்டட்' திங்கிங் மோடுடன் ஜெமினி திங்கிங் லெவல்களை வெளியிடுகிறது கூகுள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »