மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பணி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க சாஃப்ட்வேர் அறிமுகம்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கூட்டங்கள் நேரடியாக நடப்பது தவர்க்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீடியோ கான்பரன்சிங் வழியே கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பணி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க சாஃப்ட்வேர் அறிமுகம்!!

மென்பொருள், அரசு ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை கணக்கிட்டு முடிவுகளை அறிவிக்கும்.

ஹைலைட்ஸ்
  • If results are satisfactory, the software will used in other departments
  • Asymptomatic employees are allowed to come to office
  • The state government has also discouraged face-to-face meetings
விளம்பரம்

மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பணி புரியும் ஊழியர்கள் ஒழுங்காக பணியாற்றுகிறார்களா என்பது குறித்து கண்காணிக்க சாஃப்ட்வேர் ஒன்றை பயன்படுத்த அரசு தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் திருப்திகரமாக இருந்தால் அடுத்தடுத்த துறைகளுக்கும் இதே மென் பொருள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அலுவலக  நேரங்களில் பணியாளர்கள் விதிகளை மீறக்கூடாது என்றும், அலுவலக நேரத்தில் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இந்த மென்பொருளை பயன்படுத்தும்போது வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு லாக் இன் ஐ.டி., பாஸ்வேர்டு வழங்கப்படும்.  இதனை  பயன்படுத்தி பணியை ஆரம்பிக்கும்போது மென் பொருளுக்குள் நுழைய வேண்டும். 

மென்பொருள், அரசு ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை கணக்கிட்டு முடிவுகளை அறிவிக்கும்.

கொரோனா காலத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சலுகையாக வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த முறையை யாரும் தவறாக பயன்படுத்தி விடக் கூடாது என்று மேற்கு வங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேற்கு வங்கத்தில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி இருப்பவர்கள் அலுவலத்திற்கு வரத்தேவையில்லை. அவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கூட்டங்கள் நேரடியாக நடப்பது தவர்க்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீடியோ கான்பரன்சிங் வழியே கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
  2. ஜூன் 29 இந்திய அறிமுகத்தை உறுதி செய்தது சாம்சங் கேலக்ஸி M47 5G; முக்கிய அம்சங்கள் கசிவு!
  3. ஜூன் 26 சீனா அறிமுகத்திற்கு முன் விவோ எக்ஸ் ஃபோல்டு 6 விலை, சிறப்பம்சங்கள் கசிவு!
  4. போட் ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப் 52 மணிநேர பேட்டரியுடன் ரூ.1599 விலையில் இந்தியாவில் அறிமுகம்!
  5. லேசர் பிரிண்டர் சந்தை சரிந்து இங்க் டேங்க் பிரிண்டராக மாறும்: எப்சன் சிவக்குமார்
  6. சாம்சோனைட் வேபாயிண்ட் லக்கேஜ் டிராக்கர் சூட்கேஸ் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  7. சிப் டவுன்கிரேடு மற்றும் இரண்டு பின்புற கேமராக்களுடன் ஐபோன் ஏர் 2 வரக்கூடும் என டிப்ஸ்டர் தகவல்
  8. இந்தியாவில் ஜூலை-செப்டம்பரில் புதிய நடுத்தர ரக 4ஜி போன்கள் அறிமுகமாக வாய்ப்பு; பல மாடல்கள் எதிர்பார்ப்பு
  9. யார் இந்த குணால் ஷா? வில் கேத்கார்ட் விலகியதைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பின் புதிய தலைவராக கிரெட் நிறுவனர் நியமனம்
  10. மெட்டா அதிரடி: வாட்ஸ்அப் உலகளாவிய தலைவராக கிரெட் நிறுவன குணால் ஷா நியமனம்; வில் கேத்கார்ட் விலகுகிறார்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »