மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பணி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க சாஃப்ட்வேர் அறிமுகம்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கூட்டங்கள் நேரடியாக நடப்பது தவர்க்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீடியோ கான்பரன்சிங் வழியே கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பணி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க சாஃப்ட்வேர் அறிமுகம்!!

மென்பொருள், அரசு ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை கணக்கிட்டு முடிவுகளை அறிவிக்கும்.

ஹைலைட்ஸ்
  • If results are satisfactory, the software will used in other departments
  • Asymptomatic employees are allowed to come to office
  • The state government has also discouraged face-to-face meetings
விளம்பரம்

மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பணி புரியும் ஊழியர்கள் ஒழுங்காக பணியாற்றுகிறார்களா என்பது குறித்து கண்காணிக்க சாஃப்ட்வேர் ஒன்றை பயன்படுத்த அரசு தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் திருப்திகரமாக இருந்தால் அடுத்தடுத்த துறைகளுக்கும் இதே மென் பொருள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அலுவலக  நேரங்களில் பணியாளர்கள் விதிகளை மீறக்கூடாது என்றும், அலுவலக நேரத்தில் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இந்த மென்பொருளை பயன்படுத்தும்போது வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு லாக் இன் ஐ.டி., பாஸ்வேர்டு வழங்கப்படும்.  இதனை  பயன்படுத்தி பணியை ஆரம்பிக்கும்போது மென் பொருளுக்குள் நுழைய வேண்டும். 

மென்பொருள், அரசு ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை கணக்கிட்டு முடிவுகளை அறிவிக்கும்.

கொரோனா காலத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சலுகையாக வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த முறையை யாரும் தவறாக பயன்படுத்தி விடக் கூடாது என்று மேற்கு வங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேற்கு வங்கத்தில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி இருப்பவர்கள் அலுவலத்திற்கு வரத்தேவையில்லை. அவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கூட்டங்கள் நேரடியாக நடப்பது தவர்க்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீடியோ கான்பரன்சிங் வழியே கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. வோடஃபோன் ஐடியா (Vi) ரூ. 230 முதல் புதிய ப்ரீபெய்ட் பிளான்களுடன் ஸ்பாட்டிஃபை ப்ரீமியத்தை வழங்குகிறது
  2. இன்டெல் N50, கூகுள் AI அம்சங்களுடன் அசுஸ் குரோம்புக் CX15 இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  3. iQOO Z11 இந்தியாவில் ஆகஸ்ட் 20 அன்று அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள், அம்சங்கள்
  4. 10,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 Gen 5 சிப்செட்டுடன் ஒப்போ F35 புரோ இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது!
  5. அமேசான் மாபெரும் சுதந்திர தின விற்பனை: வங்கி மற்றும் கூப்பன் சலுகைகளுடன் iQOO 15 தள்ளுபடி விலையில் கிடைக்கும்
  6. ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட், 6,000mAh பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G இந்தியாவில் அறிமுகம்!
  7. ஸ்கல்கேண்டி ஏவியேட்டர் 900 ஏஎன்சி இந்தியாவில் 60 மணிநேர பேட்டரி ஆயுளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது
  8. OnePlus 16 விலை மற்றும் ரேம் விவரங்கள் லீக்; 8GB RAM வேரியண்ட் மீண்டும் வர வாய்ப்பு!
  9. போல்ட் ஸ்மார்ட்போன் இந்தியா வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது; Flipkart Microsite நேரலையில் வருகிறது
  10. Redmi 17 5G குளோபல் மாடலின் விலை, டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் அறிமுகத்திற்கு முன்பே கசிந்தன!
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »