மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பணி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க சாஃப்ட்வேர் அறிமுகம்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கூட்டங்கள் நேரடியாக நடப்பது தவர்க்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீடியோ கான்பரன்சிங் வழியே கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பணி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க சாஃப்ட்வேர் அறிமுகம்!!

மென்பொருள், அரசு ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை கணக்கிட்டு முடிவுகளை அறிவிக்கும்.

ஹைலைட்ஸ்
  • If results are satisfactory, the software will used in other departments
  • Asymptomatic employees are allowed to come to office
  • The state government has also discouraged face-to-face meetings
விளம்பரம்

மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பணி புரியும் ஊழியர்கள் ஒழுங்காக பணியாற்றுகிறார்களா என்பது குறித்து கண்காணிக்க சாஃப்ட்வேர் ஒன்றை பயன்படுத்த அரசு தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் திருப்திகரமாக இருந்தால் அடுத்தடுத்த துறைகளுக்கும் இதே மென் பொருள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அலுவலக  நேரங்களில் பணியாளர்கள் விதிகளை மீறக்கூடாது என்றும், அலுவலக நேரத்தில் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இந்த மென்பொருளை பயன்படுத்தும்போது வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு லாக் இன் ஐ.டி., பாஸ்வேர்டு வழங்கப்படும்.  இதனை  பயன்படுத்தி பணியை ஆரம்பிக்கும்போது மென் பொருளுக்குள் நுழைய வேண்டும். 

மென்பொருள், அரசு ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை கணக்கிட்டு முடிவுகளை அறிவிக்கும்.

கொரோனா காலத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சலுகையாக வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த முறையை யாரும் தவறாக பயன்படுத்தி விடக் கூடாது என்று மேற்கு வங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேற்கு வங்கத்தில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி இருப்பவர்கள் அலுவலத்திற்கு வரத்தேவையில்லை. அவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கூட்டங்கள் நேரடியாக நடப்பது தவர்க்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீடியோ கான்பரன்சிங் வழியே கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. வாட்ஸ்அப் இருபடிச் சரிபார்ப்பு(Two-Step Verification) PINக்கு பதிலாக வலுவான பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தக்கூடும்
  2. கணக்கு மீட்டெடுப்பிற்காக 'செல்ஃபி வீடியோ' உள்நுழைவு முறையை கூகிள் அறிமுகப்படுத்துகிறது
  3. Boat Nirvana Eutopia 2 ANC இந்தியாவில் அறிமுகம்: 45dB ANC மற்றும் 80 மணிநேர பேட்டரி லைஃப்!
  4. OnePlus N6x இந்தியா அறிமுகத் தேதி வெளியானது: அசத்தல் வடிவமைப்பு மற்றும் வண்ண விவரங்கள்!
  5. Xiaomi Power Bank 5i இந்தியாவில் அறிமுகம்: பில்ட்-இன் கேபிளுடன் அசத்தும் விலை மற்றும் அம்சங்கள்
  6. Vivo S2 கசிவு: இந்தியாவில் அறிமுகமாகும் முன் இதன் விலை, சேமிப்பக விவரங்கள் வெளிவந்தன
  7. சாம்சங் அன்ப்பேக்டு 2026: Z ஃபோல்டு 8, ஃபிலிப் 8, வாட்ச் அல்ட்ரா 2 அறிமுகம்!
  8. சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 vs கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  9. ஆகஸ்ட் முதல் இந்தியாவில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ மேக்ஸ் விலைகளை ஆப்பிள் உயர்த்தக்கூடும்: டிப்ஸ்டர் தகவல்
  10. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டுடன் கேலக்ஸி Z ஃபோல்டு 8 இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »