கர்நாடகவில் ஓலா மீண்டும் செயல்படத் தொடங்கியது

கடந்த வெள்ளியன்று கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சகம். அனுமதியின்று கடந்த ஆறு மாதமாக பைக் டாக்ஸி என்ற சேவையை ஓலா நடத்தி வருவதாகவும், அதனால் ஓலாவின் லைசென்ஸை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.

கர்நாடகவில் ஓலா மீண்டும் செயல்படத் தொடங்கியது

புதிய தொழில்நுட்ப கொள்கைகளை உருவாக்குவதற்கு அரசுடன் இணைந்து செயல்பட்டு கொள்கைகளை உருவாக்க வேண்டும்

விளம்பரம்

ஓலா நிறுவனம் பைக் டாக்ஸி சேவையை அனுமதியில்லாமல் தொடங்கியதற்காக ஓலாவின் லைசென்ஸை கடந்த வெள்ளியன்று இடைநீக்கம் செய்திருந்தது. இந்நிலையில் நேற்று முதல் அதன் சேவைத் தொடங்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் பிரியங்கா கார்கே, புதிய தொழில்நுட்ப கொள்கைகளை உருவாக்குவதற்கு அரசுடன் இணைந்து செயல்பட்டு கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

ஓலாவின் பங்குதாரான மேட்ரிக்ஸ் பார்னர்ஸ் இந்தியா, இந்த விவகாரத்தில் விரைந்து தீர்மானம் எடுத்தது பாராட்டுதலுக்குரியது என்று கூறியுள்ளார். புதிய இளமையான அமைச்சர்கள் வேகத்தையும் புதுமையையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது என்று மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியாவின் நிறுவனர் அவ்னிஷ் பஜாஜ் கூறியுள்ளார். 

கடந்த வெள்ளியன்று கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சகம். அனுமதியின்று கடந்த ஆறு மாதமாக பைக் டாக்ஸி என்ற சேவையை ஓலா நடத்தி வருவதாகவும், அதனால் ஓலாவின் லைசென்ஸை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. 

பெங்களூரில், அனி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (ஓலா கேப்ஸ்) கர்நாடக தேவைக்கேற்ற போக்குவரத்து தொழில்நுட்பங்கள் விதிகள் 2016 இன் படி துணை போக்குவரத்து ஆணையர் சமர்பித்த அறிக்கையின் பின்னணியில், 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20-ம் தேதி வரை வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த உரிமம் விதிமுறைகளின் கீழ் 6 மாதங்களுக்கும் இடை நீக்கம் செய்யப்பட்டது என்று மார்ச் 18 -ம் தேதி கூறியது. 

இந்த ஒழுங்குமுறைக்கு பதிலளித்த ஓலா, வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், போக்குவரத்தை முன்னேற்றவும் அரசாங்கத்துடன் இணைந்து  பணிபுரிவதாக தெரிவித்துள்ளது. தேவைக்கேற்ற போக்குவரத்து தொழில்நுட்பங்கள் விதிகள் 2016 இன் படி ஆப் மூலமாக டாக்ஸி சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. இருசக்கரவாகன டாக்ஸி சேவைக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. கியூபோ டேஷ்கேம் ப்ரோ 2கே முன் மற்றும் பின் கேமராக்களுடன் இந்தியாவில் அறிமுகம்
  2. இந்தியாவில் ஏழு சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு: டிப்ஸ்டர் தகவல்
  3. விவோ எக்ஸ் ஃபோல்டு 6 இந்தியாவின் அறிமுகம் வழக்கத்தை விட தாமதமாகலாம், விலை விவரம் கசிந்தது
  4. மோட்டோ G77 பவர் இந்தியாவில் அறிமுகம்: 7,000mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  5. நத்திங் போன் (4b) vs சாம்சங் கேலக்ஸி A37 5G vs ரில்மி 16: இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. ஐபோன் 17 ப்ரோவை விட ஐபோன் 18 ப்ரோவில் குறிப்பிடத்தக்க வகையில் தடிமனான அலுமினியம் பிரேம் இருக்கும் எனத் தகவல்
  7. இந்தியாவில் வரவிருக்கும் கேலக்ஸி Z ஃபோல்டபிள்ஸ் சாதனங்களுக்கு முன்பதிவு தொடங்குகிறது சாம்சங்
  8. நத்திங் போன் (4b) இந்தியாவில் அறிமுகம்: 6,000mAh பேட்டரி, கிளிஃப் பார் இடைமுகம் மற்றும் ஆர்சிபி எடிஷன்
  9. இந்தியாவில் ஆப் ஸ்டோர் மற்றும் ஐகிளவுட் சேவைகளுக்குக் கார்டு கட்டண முறைகளை ஆப்பிள் மீண்டும் கொண்டுவந்துள்ளது
  10. அமெசான் பிரைம் டே விற்பனை: ப்ளூடூத் மற்றும் பார்ட்டி ஸ்பீக்கர்கள் மீதான சிறந்த தள்ளுபடிச் சலுகைகள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »