அமேசான் ஃப்ரெஷ் பெங்களூரில் ஒரு சில பின் கோடுகலளிலிருந்து நாட்டின் ஆறு நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அமேசான், பிரைம் நவ்வை இரண்டு மணி நேர டெலிவரிகளை வழங்க அதன் பிரத்யேக செயலியாக கொண்டு வந்தது
அமேசான் செயலியின் ஒரு பகுதியாக, Prime Now என்பது, Amazon Fresh-ஆக மாற்றப்படுகிறது. முதலில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அமேசான் ஃப்ரெஷ் ஆரம்பத்தில் பெங்களூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்கோடுகளை மட்டுமே வழங்கியது. அமேசான் ஃப்ரெஷின் ஒரு பகுதியாக, இரண்டு மணி நேர டெலிவரி போன்ற அம்சங்கள் மூலம் மளிகைப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிற பொருட்களை ஆர்டர் செய்ய முடியும்.
Amazon ஃப்ரெஷ், பழங்கள் மற்றும் காய்கறிகள், பால், இறைச்சி, ஐஸ்கிரீம்கள், ஸ்டேபிள்ஸ் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு போன்ற மளிகை பொருட்களை அமேசான் செயலியின் மூலம் நேரடியாக வழங்கியது. நிறுவனம் சமீபத்தில் அமேசான் ஃப்ரெஷ் சேவையை, பெங்களூரு, டெல்லி, குருகிராம், ஹைதராபாத், மும்பை மற்றும் நொய்டா ஆகிய ஆறு நகரங்களுக்கு விரிவுபடுத்தியது.
இந்த அம்சம் சில பொருட்களுக்கான வழக்கமான அமேசான் செயலிக்கு நகர்த்தப்படும் - முக்கியமானவை மட்டும் அமேசான் ஃப்ரெஷ் மூலம் கிடைக்கும். நிறுவனம் அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் நடைமுறைக்கு வரும். கோவிட்-19 ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
பிரைம் நவ் செயலியின் ஒரு பேனரை, கேஜெட்ஸ் 360 கண்டறிந்தது. மேலே உள்ள படம் நீக்கப்பட்டதிலிருந்து, அதன் அம்சங்கள் முக்கிய அமேசான் செயலிக்கு மாற்றப்படும் என்பதைக் காட்டுகிறது.
அமேசான் சமீபத்தில் தனது இந்தியா செயலியை அப்டேட் செய்தது. உலகளாவிய செயலிக்கான ஆதரவு நிறுத்தப்படுவதாகவும், அதற்கு பதிலாக அவர்கள் புதிய அமேசான் இந்தியா ஷாப்பிங் செயலிக்கு மாற வேண்டும் என்றும், யுபிஐ போன்ற அம்சங்கள் மற்றும் பணப் பரிமாற்றம் போன்றவற்றையும் நிறுவனம் எச்சரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், ஷாப்பிங் வரலாறு, பரிவர்த்தனைகள், கட்டண கருவிகள் மற்றும் முகவரிகள் அனைத்தும் தானாகவே புதிய செயலிக்கு இடம்பெயரும்.
நாடு தழுவிய ஊரடங்கு அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டுக்கு ஒரு சோதனையாகும். அவை நாட்டின் மளிகை கோரிக்கைகளை தங்கள் தளங்களின் மூலம் நிறைவேற்றுவதாகக் கூறின. ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் விநியோகங்களையும், ஆர்டர்களையும் செயல்படுத்த இரண்டு நிறுவனமும் கடுமையாக போராடி வருகிறது.
செப்டம்பர் 2018 -ல், அமேசான், ஆதித்யா பிர்லா சில்லறை நிறுவனத்திடமிருந்து மளிகைக் கடைகளின் சங்கிலியை வாங்கியது. இருப்பினும், இந்தியாவில் ஈ-காமர்ஸ் சந்தையில் நுழைவதற்கான வழிகளையும் ஆராய்ந்தது. இந்திய கூட்டு நிறுவனம் அமேசான் இந்தியாவுடன் ஜனவரி மாதம் ஒப்பந்தம் செய்து அதன் எதிர்கால சில்லறை விற்பனை நிலையங்களையும், நுகர்வோர் பிராண்டுகளையும் அமேசான்.இன் தளத்தின் மூலம் வழங்கவும், பிரைம் நவ் வழியாக பொருட்களை விற்கவும் செய்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Vivo Pad 5c Launched With Snapdragon 8s Gen 3 Chipset, 10,000mAh Battery: Price, Specifications
Honor 600 Elite Listed on EMVCo Database Alongside Honor 600s and 600 Lite S Models, Could Launch Soon