13 நாட்களில் 5 கோடி பயனர்கள்! - 'ஆரோக்ய சேது' செயலியின் புதிய மைல்கல்! 

பிரதமர் நரேந்திர மோடி தேசத்தை உரையாற்றும் போது அதன் பதிவிறக்கத்தை ஊக்குவித்த 24 மணி நேரத்திற்குள் ஆரோக்யா சேது பயன்பாடு ஒரு கோடி புதிய பயனர்களை சேர்த்துள்ளதாக தெரிகிறது.

13 நாட்களில் 5 கோடி பயனர்கள்! - 'ஆரோக்ய சேது' செயலியின் புதிய மைல்கல்! 

ஆரோக்யா சேது செயலியை ஏப்ரல் 2-ஆம் தேதி அரசு அறிமுகப்படுத்தியது

ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் வைரஸ் தொற்றை டிராக் செய்ய ஆரோக்ய சேது செயலி உதவுகிறது
  • பயனர்களின் உடல்நிலையைப் புரிந்துகொள்ள இது கேள்விகளைக் கேட்கிறது
  • ஆரோக்ய சேது செயலி செவ்வாய்க்கிழமை 4 கோடி பயனர்களை கடந்தது
விளம்பரம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை டிராக் செய்ய, ஏப்ரல் 2-ஆம் தேதி 'Aarogya Setu' என்ற செயலியை அரசு வெளியிடப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று நாட்களில், 50 லட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி புதிய மைல்கல்லை தொட்டது. இப்போது, 13 நாட்களில் ஐந்து கோடி பயனர்களை கடந்து மற்றோரு மைல்கல்லையும் எட்டியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று உரையாற்றும் போது, செயலியை பதிவிறக்க ஊக்குவித்தார். அதன் பின், ஒரு நாளில் ஒரு கோடி புதிய பயனர்கள் சேர்த்துள்ளதாகத் தெரிகிறது. பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) போன்ற கல்வி வாரியங்கள் ஆரோக்யா சேது செயலியை ஊக்குவித்துள்ளன. மேலும், சைபர் பாதுகாப்பு மற்றும் சைபர்லா வல்லுநர்கள் செயலி பயன்படுத்தும் அடிப்படை தொழில்நுட்பம் மற்றும் அது கொண்டு செல்லும் privacy policy-யின் அடிப்படையில் தனியுரிமை கவலைகளை எழுப்பியுள்ளனர்.

இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன் (Internet Freedom Foundation - IFF) இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், ஆரோக்ய சேது செயலியில் “வெளிப்படைத்தன்மை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்த, பயனர்கள் புளூடூத் மற்றும் இருப்பிட அணுகலை வழங்க வேண்டும். coronavirus தொற்று அபாயத்தில் உள்ளதா என்பதை அடையாளம் காண, பயனர்களிடம் கேள்விகளைக் கேட்கும். மேலும், வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தால், உங்களுக்கு ஒரு தகவலை தெரிவிக்கும். இந்த செயலி, Android மற்றும் iOS சாதனங்களில் பதிவிறக்கம் செய்யலாம். 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  2. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  3. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
  4. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  5. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
  6. ஜியோ ஹோம் 2 மாத திட்டத்தில் 1 மாதம் இலவசம்: 100Mbps இன்டர்நெட், 12 OTT ஆப்ஸ்கள் இலவசம்!
  7. அறிமுகத்திற்கு முன் கசிந்தது விவோ S2 விலை, முழு விவரங்கள் மற்றும் வடிவமைப்பு!
  8. கூகிள் இந்தியாவில் 'ஆஸ்க் கூகிள் பே' என்ற ஜெமினி AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
  9. Paytm தனது செயலியில் பகிரப்பட்ட குழுச் செலவுகளுக்காக பில்களைப் பிரிக்கும் வசதியை அறிமுகப்படுத்துகிறது
  10. ஜெமினியால் இப்போது கூகிள் டாக்ஸில் உள்ள கருத்துகளைப் படிக்கவும்,சுருக்கவும்,பதில்களை வரைவு செய்யவும் முடியும்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »