13 நாட்களில் 5 கோடி பயனர்கள்! - 'ஆரோக்ய சேது' செயலியின் புதிய மைல்கல்! 

பிரதமர் நரேந்திர மோடி தேசத்தை உரையாற்றும் போது அதன் பதிவிறக்கத்தை ஊக்குவித்த 24 மணி நேரத்திற்குள் ஆரோக்யா சேது பயன்பாடு ஒரு கோடி புதிய பயனர்களை சேர்த்துள்ளதாக தெரிகிறது.

13 நாட்களில் 5 கோடி பயனர்கள்! - 'ஆரோக்ய சேது' செயலியின் புதிய மைல்கல்! 

ஆரோக்யா சேது செயலியை ஏப்ரல் 2-ஆம் தேதி அரசு அறிமுகப்படுத்தியது

ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் வைரஸ் தொற்றை டிராக் செய்ய ஆரோக்ய சேது செயலி உதவுகிறது
  • பயனர்களின் உடல்நிலையைப் புரிந்துகொள்ள இது கேள்விகளைக் கேட்கிறது
  • ஆரோக்ய சேது செயலி செவ்வாய்க்கிழமை 4 கோடி பயனர்களை கடந்தது
விளம்பரம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை டிராக் செய்ய, ஏப்ரல் 2-ஆம் தேதி 'Aarogya Setu' என்ற செயலியை அரசு வெளியிடப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று நாட்களில், 50 லட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி புதிய மைல்கல்லை தொட்டது. இப்போது, 13 நாட்களில் ஐந்து கோடி பயனர்களை கடந்து மற்றோரு மைல்கல்லையும் எட்டியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று உரையாற்றும் போது, செயலியை பதிவிறக்க ஊக்குவித்தார். அதன் பின், ஒரு நாளில் ஒரு கோடி புதிய பயனர்கள் சேர்த்துள்ளதாகத் தெரிகிறது. பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) போன்ற கல்வி வாரியங்கள் ஆரோக்யா சேது செயலியை ஊக்குவித்துள்ளன. மேலும், சைபர் பாதுகாப்பு மற்றும் சைபர்லா வல்லுநர்கள் செயலி பயன்படுத்தும் அடிப்படை தொழில்நுட்பம் மற்றும் அது கொண்டு செல்லும் privacy policy-யின் அடிப்படையில் தனியுரிமை கவலைகளை எழுப்பியுள்ளனர்.

இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன் (Internet Freedom Foundation - IFF) இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், ஆரோக்ய சேது செயலியில் “வெளிப்படைத்தன்மை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்த, பயனர்கள் புளூடூத் மற்றும் இருப்பிட அணுகலை வழங்க வேண்டும். coronavirus தொற்று அபாயத்தில் உள்ளதா என்பதை அடையாளம் காண, பயனர்களிடம் கேள்விகளைக் கேட்கும். மேலும், வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தால், உங்களுக்கு ஒரு தகவலை தெரிவிக்கும். இந்த செயலி, Android மற்றும் iOS சாதனங்களில் பதிவிறக்கம் செய்யலாம். 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  2. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  3. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
  4. இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகம்
  5. எதிர்கால கேலக்ஸி போன்களில் வரவிருக்கும் சாம்சங்கின் புதிய 2D/3D டிஸ்ப்ளே தொழில்நுட்ப விவரங்கள்
  6. நீக்கப்பட்ட சாட்களின் அறிவிப்புகளைப் பெறும் பிழையைச் சரிசெய்து iOS 26.4.2 அப்டேட் வெளியிடப்பட்டது
  7. ஆண்ட்ராய்டு ஆப் பதிவுகளை விரைவுபடுத்த கூகுள் 'சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல்' அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது
  8. கூகுள் கிளவுட் நெக்ஸ்ட் 2026: புதிய ஜெமினி மற்றும் வொர்க்ஸ்பேஸ் இன்டலிஜென்ஸ் அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்தது
  9. ஒன்பிளஸ் நார்டு CE 6: 144Hz திரை, 50MP கேமரா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்தியா அறிமுகத்திற்கு முன் வெளியானது
  10. ரூ. 30,000-க்கு உட்பட்ட சிறந்த கைபேசிகள்: விவோ டி5 ப்ரோ, இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் மற்றும் பல மாடல்கள் இவை
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »