ஓடிடியில் மாஸ் காட்டும் '29' திரைப்படம்: நெகிழ்ச்சியில் இயக்குநர் ரத்னகுமார்!
இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில், விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் வெளியாகி தியேட்டர்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் '29'. திரையரங்குகளைத் தொடர்ந்து, இத்திரைப்படம் தற்போது பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. ஓடிடியில் வெளியான சில நாட்களிலேயே உலகளாவிய அளவில் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்களிடம் இருந்து கிடைத்து வரும் இந்த அதீத அன்பும் பாசிட்டிவ் விமர்சனங்களும் தன்னை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளதாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.