பிஎஸ்என்எல் வழங்கும் விளம்பர பிராட்பேண்ட் ப்ளான் 5 ஜிபி டேட்டாவை 10 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வழங்குகிறது.
ஒர்க் ஃப்ரம் ஹோம்-ஐ ஊக்குவிப்பதற்காக பிஎஸ்என்எல் முதலில் மார்ச் மாதத்தில் தனது "ஒர்க் @ ஹோம்" பிராட்பேண்ட் ப்ளானை அறிமுகப்படுத்தியது
ஒர்க் @ ஹோம் ப்ளானின் கீழ், BSNL ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது. இந்த ப்ளான் ஆரம்பத்தில் ஒரு மாதத்திற்கு தொடங்கப்பட்டாலும், இந்த முறை ப்ளானின் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் லேண்ட்லைன் இணைப்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இலவச பிராட்பேண்ட் இணைப்பு கிடைக்கும். ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்வோர் அதிகம் உள்ளனர். அதனால்தான் அரசுக்கு சொந்தமான நிறுவனம் இந்த சிறப்பு வசதியைக் கொண்டு வந்துள்ளது.
இந்த சலுகையில் நீங்கள் இலவச பிராட்பேண்ட் இணைப்புடன் 10Mbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம். இந்த ப்ளான் 5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த டேட்டா முடிந்ததும் வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும்.
அதே நேரத்தில், ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,399 என்ற புதிய ப்ரீபெய்ட் ப்ளானை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ளானின் வேலிடிட்டி 600 நாட்கள் ஆகும். புதிய ப்ளான் நிறுவனத்தின் சத்தீஸ்கர் வட்டம் ட்விட்டர் கணக்கிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளான் ஒரு நாளைக்கு 250 நிமிட குரல் அழைப்புகளை அனுமதிக்கிறது. டேட்டா பலன்கள் வசதி இதில் இல்லை. நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த ப்ளானைப் பெறலாம். இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களை முதல் 60 நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S25 Gets New Galaxy AI Features From Galaxy S26 With New One UI 8.5 Update
Ubisoft Shuts Down 2 More Studios, Lays Off Up to 380 Employees in Latest Round of Cost Cuts